Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
கொதிக்கிற எண்ணெயில கையை விட்டு வடைசுட்டு எடுத்த பக்தர்கள்... நீங்களே பாருங்க (வீடியோ)
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள கிராமத்தில் கொதித்துக் கொண்டிருக்கும் எண்ணெயில் வெறும் கைகளை விட்டு வடை சுட்டு எடுக்கும் திருவிழா தைப்பூசத்தன்று நடைபெற்றது.
Recommended Video

பொதுவாக திருவிழாக்கள் என்றாலே அதில் நேர்த்திக்கடன்கள் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். அதில் நிறைய வகைகள் உண்டு. அங்க பிரதட்சணம் தொடங்கி, காவடி எடுத்தல், தீ மிதித்தல், அலகு குத்துதல், மொட்டையடித்தல் என விதவிதமான நேர்த்திக்கடன்களைப் பார்த்திருப்போம்.
ஆனால் கொதிக்க கொதிக்க இருக்கும் எண்ணெய்க்குள் அப்படியே வெறும் கைகளை விட்டு வடை தட்டிப்போட்டு சுட்டு எடுக்கும் நேர்த்திக் கடன்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படி ஒரு நேர்த்திக்கடன் திருவிழா நடந்திருக்கிறது தமிழ்நாட்டில். அது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

தைப்பூச திருவிழா
கடந்த செவ்வாய்க்கிமை அன்று முழு பௌர்ணமி நாள், தை மாதம், பூச நட்சத்திர நாள். அதனால் ஒலகமெங்கும் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும் அபிஷேங்களும் வழிபாடுகளும் நடத்தப்பட்டன. அதில் குறிப்பாக, தமிழகத்தில் உள்ள ஆறுபடை வீடுகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு செய்தனர். தங்களுடைய பிரார்த்தனைகளையும் நிறைவு செய்தார்கள். திருச்செந்ததூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதுபோல தமிழகத்தில் உள்ள எல்லா முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நேர்த்திக் கடன்களும் செலுத்தப்பட்டன. அப்படி செலுத்தப்பட்டதில் ஒரு விநோதமான நேர்த்திக் கடன் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

எங்கே நடக்கிறது?
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்துக்கு அருகே உள்ள தொரப்பாடி என்னும் கிராமத்தில் தான் பால முருகன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலில் ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் சுற்றுவட்டார கிராமப் பகுதியிலிருநு்து மக்கள் திரண்டு, பெரும் திருவிழாவாகக் கொண்டாடுவார்கள்.

காணிக்கை
மற்ற கோவில்களைப் போலவே இங்கு காவடி எடுப்பது, தீ மிதித்தல், மொட்டை அடித்தல், அலகு குத்துதல், பால் குடம் எடுத்தல் ஆகியவற்றின் மூலம் மக்கள் தங்களுடைய காணிக்கைகளைச் செலுத்தினார்கள்.

விநோத நேர்த்திக் கடன்
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு விநோதமான நேர்த்திக் கட்ன் செலுத்தப்பட்டுக் கொண்டு இருக்கிறது. நீங்கள் கேட்டால் பதறுவீர்கள். ஆனால் எந்தவித பரபரப்பும் இன்றி மிக சாதாரணமான இந்த நேர்த்திக் கடனை பக்தர்கள் செலுத்துகிறார்கள். அப்படியென்ன நேர்த்திக்கடன் என்று தானே கேட்கிறீர்கள். இதோ பாருங்கள்.

கொதிக்கும் எண்ணெயில்
நன்கு கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் பெரிய இரும்பு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி கொதிக்க விடுகிறார்கள். அப்படி கொதிக்கும் எண்ணெய்க்குள் அப்படியே வெறும் கையை விட்டு வடை மாவைப் போட்டு கைகளாலேயே திருப்பி விட்டு வடை சுட்டு எடுக்கிறார்கள். கேட்கும்போதே நமக்கு கை எரியுதுல்ல.

நைவேத்தியம்
அப்படி சுட்டு எடுக்கப்பட்ட வடையை சுவாமிக்குப் படையலாக்கி பூஜை செய்து பின் எல்லோருக்கும் பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். அந்த பாலமுருகளை மனதார வேண்டிக் கொண்டு கொதிக்கும் எண்ணெய்க்குள் கை விட்டால் அது நம்மை ஒன்றும் செய்யாது என்று பக்தி பொங்க கூறுகிறார்கள் பக்தர்கள்.



Click it and Unblock the Notifications
