Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்!
லக்ஷ்மி தேவியின் அருள் நிறைந்த இந்த பொருளை வீட்டில் வைப்பது உங்களின் அனைத்து கஷ்டங்களையும் நீக்கும்
கோமதி சக்கரத்தை உங்கள் வீட்டில் வைப்பதும் இதனை உபயோகிப்பதும், முக்கியமான நாட்களில் வழிபடுவதும் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும்.
இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளும் ஒரு ஆன்மீக கருத்துடன் தொடர்புடையவர் ஆவர் அதற்கேற்றாற் போல அவர்களுக்கு சக்திகளும் இருக்கும். உதாரணத்திற்கு விஷ்ணு காக்கும் கடவுளாகவும், சிவபெருமான் அழிக்கும் கடவுளாகவும், பிரம்மா படைக்கும் கடவுளாகவும், சரஸ்வதி படிப்பின் கடவுளாகவும், லக்ஷ்மி செல்வத்தின் கடவுளாகவும், துர்கை தீயசக்திகளை அழிக்கும் கடவுளாகவும் வழிபடபடுகிறார்கள்.

இந்து மதத்தின் ஒவ்வொரு கடவுளும் ஒரு புனித சின்னத்தை தன்னுடைய அடையாளமாக கொண்டுள்ளனர். சிவபெருமானுக்கு சிவலிங்கம், லக்ஷ்மிக்கு கோமதி சக்கரம், விஷ்ணுவிற்கு சங்கு என பல அடையாளங்கள் உள்ளது. குறிப்பிட்ட கடவுளின் அருளை பெற அந்த புனித சின்னத்தை வீட்டில் வைத்து வழிபட வேண்டும். இந்த பதிவில் லக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்த கோமதி சக்கரத்தை உங்கள் வீட்டில் வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

கோமதி சக்கரத்தின் தோற்றம்
விஷ்ணு தன்னுடைய கிருஷ்ணர் அவதாரத்தில் துவாரகையில் இருந்த கோமதி நதிக்கரையில் ஒரு மரத்தை நட்டு வைத்தார். தன்னுடைய கடைசி காலத்தை வனத்தில் கழித்த ராதையின் உணவு மற்றும் தங்கும் தேவைக்காக இந்த மரத்தை நட்டார். இந்த மரம் கோமதி சக்கர வடிவத்தில் இருக்கும் கனிகளை வழங்கியது, அது கிருஷ்ணர் வழங்கிய கனி என்பதால் ராதையும் அதனை விரும்பி உண்டார்.

செல்வத்தை அதிகரிக்கும் குறிப்புகள்
இந்த கோமதி சக்கரத்தை உங்கள் வீட்டில் வைப்பதும் இதனை உபயோகிப்பதும், முக்கியமான நாட்களில் வழிபடுவதும் உங்களுக்கு லக்ஷ்மி தேவியின் அருளை பெற்றுத்தரும். இது செல்வத்தை மட்டும் வழங்குவதில்லை அதனுடன் புகழ், எதிர்மறை ஆற்றல்களில் இருந்து பாதுகாப்பு, வாழ்க்கையின் தரம் என அனைத்தையும் உயர்த்துகிறது.

விஷ்ணுவின் ஆசீர்வாதம்
பண்டைய வேதங்களின் படி ஒவ்வொரு வீட்டிலும் கோமதி சக்கரத்தை வைத்து வழிபட வேண்டும். இது உங்களுக்கு மஹாவிஷ்ணு மற்றும் லக்ஷ்மியின் தொடர்ச்சியான ஆசீர்வாதத்தை பெற்றுத்தரும். மேலும் கோமதி சக்கரத்தால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

கண் திருஷ்டியில் இருந்து பாதுகாப்பு
நீங்கள் அடிக்கடி கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டால் ஒதுக்குபுறமான இடத்திற்கு 3 கோமதி சக்கரங்களை எடுத்து சென்று உங்கள் தலையை சுற்றி 7 முறை சுற்றவும். அதன்பின் அதனை பின்னோக்கி தூக்கி எறியவும். இது திரும்பி பார்க்காமல் சென்று விடவும், இதனால் உடனடி பலன்களை காண்பீர்கள்.

பண இழப்பு
நீங்கள் தொடர்ந்து பண நஷ்டத்தால் பாதிக்கப்பட்டால் ஒவ்வொரு திங்கள் கிழமையும் 11 கோமதி சக்கரங்களை எடுத்து கொண்டு அதற்கு குங்குமம் இடுங்கள். அதனை ஒரு மஞ்சள் துணியில் கட்டிவிட்டு சிவபெருமானை வணங்கி அதன்பிறகு அதனை வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் எடுத்து செல்லவும். அதன்பின் அதனை ஓடும் ஆற்றில் விட்டுவிடவும். உங்கள் பணக்கஷ்டம் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடும்.

பயத்தை போக்க
உங்கள் குழந்தைகள் மிகவும் பயந்தவர்களாக இருந்தாலோ அல்லது வெளிப்படையாக பேச தயங்கினாலோ ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவர்களை அனுமன் மந்திரம் கூறி கோமதி சக்கரத்தை புனித நீரால் கழுவி வழிபட வையுங்கள். அதன்பின் இந்த கோமதி சக்கரத்தில் குங்குமம் வைத்து அதனை சிவப்பு துணியில் கட்டி உங்கள் குழந்தையின் கழுத்தில் கட்டி விடுங்கள்.

அதிர்ஷ்டம்
ஒருவரின் முன்னேற்றத்திற்கு கடின உழைப்பு முக்கியமானதாக இருந்தாலும் அதிர்ஷ்டத்தின் துணையும் சிறிது தேவை. கோமதி சக்கரம் அதனை உங்களுக்கு வழங்கக்கூடும். கோமதி சக்கரத்தை உங்கள் பர்ஸில் வைத்துக்கொள்வதன் மூலம் நீங்கள் உங்களின் தின்சரி அதிர்ஷ்டத்தை அதிகரிக்கலாம். ஆனால் இதனை எப்பொழுதும் இரட்டைப்படை எண்ணில் வரும்படி வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தொழில் நஷ்டத்தை போக்க
உங்கள் வியாபாரத்தில் எதிர்மறை ஆற்றல்களாலும், எதிரிகளாலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டால், 11 கோமதி சக்கரங்களை எடுத்துக்கொண்டு உங்களின் குலதெய்வ மந்திரத்தை 108 முறை கூறி அதனை தேங்காயுடன் வைத்து பூஜை செய்யவும். இதனை ஒரு மஞ்சள் துணியில் கட்டி உங்கள் வீட்டின் வாசலில் கட்டவும். இது உங்கள் தொழில் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் விரட்டும்.

குடும்ப மகிழ்ச்சி
கணவன், மனைவி இடையே ஏற்படும் பிரச்சினைகள் பெரும்பாலும் குடுமபத்தின் அமைதியையும், மகிழ்ச்சியையும் கெடுப்பதாக அமையும். இதனை சரி செய்ய ஒரு டப்பாவில் 11 கோமதி சக்கரங்களையும், குங்குமத்தையும் சேர்த்து உங்கள் பூஜையறையில் வைக்கவும். இது உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியையும், அமைதியையும் பாதுகாக்கும்.



Click it and Unblock the Notifications











