Latest Updates
-
2026-ன் கடைசி சூரிய கிரகணத்தால் தீராத கஷ்டங்களை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
Aadi Perukku 2026: ஆடிப்பெருக்கு எப்போது? அந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
பூமியின் அழிவு எப்போது வரப்போகிறது தெரியுமா? அதுவும் இப்படித்தான் நடக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
நாளை உருவாகும் நவபஞ்ச யோகம்: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
இந்த 4 ராசிக்காரங்க அவங்கள பிடிச்சவங்களுக்காக உயிரையும் கொடுப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் சின்ன வெங்காய குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் கூட்டு ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
World Lung Cancer Day 2026: அலட்சியம் செய்யக்கூடாத நுரையீரல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளை பகிர்ந்த டாக்டர்! -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது! -
800 மாவட்டங்கள் உள்ள இந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது தெரியுமா? இது எந்த மாநிலத்தில் உள்ளது தெரியுமா?
நீங்கள் அணியும் காலணிகள் உங்களின் தலையெழுத்தை எப்படியெல்லாம் மாற்றுகிறது தெரியுமா?
சாஸ்திரங்களின் படி நமது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் உருவாக நமது காலணிகளும் ஒருவகையில் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி மனித வாழ்க்கையுடன் தொடர்புடைய அனைத்துமே எதாவது ஒரு கோளுடன் தொடர்புடையதாகும். உங்கள் காலணி மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ஜோதிடத்தின் படி உங்கள் காலணியானது சனி கிரகத்துடன் தொடர்புடையது. அதனாலதான் சனிதிசை உள்ளவர்கள் காலணிகளை தானமாக வழங்கவேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

சாஸ்திரங்களின் படி நமது வாழ்க்கையில் துரதிர்ஷ்டம், போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் உருவாக நமது காலணிகளும் ஒருவகையில் காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. இது நமக்கே தெரியாமல் நடக்க வாய்ப்புள்ளது. வாஸ்துசாஸ்திரத்தின் படி நம்மை விதியை நோக்கி அழைத்துச்செல்வது நமது பாதங்கள்தான். அதனை ஆரோக்கியமாகவும், கவனமாகவும் பாதுகாப்பது பல நல்ல வாய்ப்புகளுக்கு வழிவகுக்கலாம்.

காலணிகள்
நமது முன்னோர்கள் தோல் மாற்றம் இதர காலணிகள் அணிவதில் எந்தவித விதிமுறைகளையும் கையாளவில்ல. ஆனால் அவர்கள் காலணிகளை எப்படி அணிய வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதனை பின்பற்றாதபோது நமக்கு எதிர்காலம் குறித்த பல பிரச்சினைகளும், பொருளாதார நெருக்கடிகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி அவர்கள் காலணிகள் அணிவது குறித்து வகுத்துள்ள சில விதிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

விதிமுறை 1
திருடப்பட்ட அல்லது பரிசாக அளிக்கப்பட்ட காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையான காலணிகள் உங்களின் இலட்சியத்தை அடைய ஒருபோதும் உதவாது மேலும் உங்களின் அதிர்ஷ்டத்தை குறைப்பதோடு உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளையும் நழுவச்செய்யும்.

விதிமுறை 2
நீங்கள் நேர்காணலுக்கு செல்லும்போது கிழிந்த அல்லது கிழியும் நிலைமையில் உள்ள காலணிகளை ஒருபோதும் அணியக்கூடாது. இது உங்கள் அனைத்து அதிர்ஷ்டத்தையும் துரதிர்ஷ்டமாக மாற்றக்கூடும். கிழிந்த காலணி உங்கள் வெற்றியை தடுக்கும். ஒருவேளை உங்களிடம் நல்ல காலணிகள் இல்லையென்றால் வாங்கவேண்டுமே தவிர ஒருபோதும் திருடக்கூடாது.

விதிமுறை 3
முன்னோர்களின் அறிவுரைப்படி பணியிடத்திற்கு பழுப்பு அல்லது மரக்கலரில் இருக்கும் காலணிகளை அணியக்கூடாது. உங்கள் நேரம் ஏற்கனவே மோசமாக இருந்தால் இந்த நிற காலணிகள் அதனை மேலும் மோசமாக்கக்கூடும். ப்ரவுன் நிற காலணிகளை ஒருபோதும் அலுவலகங்களுக்கு அணிந்து செல்லக்கூடாது.

விதிமுறை 4
வங்கி அல்லது கல்வி நிலையம் தொடர்புடைய அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் தங்களின் பணி பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்று விரும்பினால் அடர் பழுப்பு நிற காலணிகள் அணிவதை தவிர்க்க வேண்டும். இது உங்கள் வருமானத்தில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.

விதிமுறை 5
ஒருவேளை நீங்கள் மருத்துவம், மருந்து அல்லது இரும்பு தொடர்பான வேலை செய்பவராக இருந்தால் நீங்கள் வெள்ளை நிற காலணிகள் அணிவதை அணியக்கூடாது. இந்த இடங்களில் வெள்ளை நிற காலணி அணிவது துரதிர்ஷ்டத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்தும்.

விதிமுறை 6
நீருடன் தொடர்புடைய வேலையோ அல்லது ஆயுர்வேதத்துடன் தொடர்புடைய வேலையோ செய்பவராக இருந்தால் நீங்கள் நீல நிற காலணிகளை அணியக்கூடாது. அதேபோல துணியால் செய்யப்பட்ட காலணிகளையும் அணியக்கூடாது. நீலம் உங்களுக்கு ஏற்ற நிறமல்ல.

விதிமுறை 7
உணவு உண்ணும்போது காலணிகள் அணியக்கூடாது என்று முன்னோர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் வாழ்க்கையில் எதிர்மறை சக்திகளை ஈர்க்கும். ஒருவேளை நீங்கள் வெளியிடங்களில் சாப்பிட நேர்ந்தால் முடிந்தவரை காலணிகளை கழட்டிவிட்டு சாப்பிட முயலுங்கள்.

விதிமுறை 8
வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் காலணிகளையோ அல்லது காலணிகள் வைக்கும் பலகையையோ வடகிழக்கு திசையில் வைக்கக்கூடாது. இந்த திசைதான் சூரிய ஒளி முதலில் விழும் திசையாகும் எனவே அந்த இடத்தில காலணிகள் இருப்பது உங்கள் வீட்டிற்குள் நுழையும் நேர்மறை சக்திகளை பாதிக்கும்.



Click it and Unblock the Notifications