Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
வாஸ்துப்படி வீட்டுல இந்த இடத்துல கடிகாரத்தை வெச்சா, வீட்டில் செல்வம் குவியும்!
ஒரு வீட்டில் நாம் பிரச்சனையின்றி சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதில் வாஸ்து முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே தான் குடிப்புகும் முன், அந்த வீடு நல்ல வாஸ்துப்படி அமைந்துள்ளதா என பலரும் பார்க்கிறார்கள். பெரும்பாலும் வீட்டுச் சுவற்றில் தொங்கவிடப்படும் கடிகாரத்திற்கு நாம் வாஸ்து பார்க்கமாட்டோம். நமக்கு வசதியான இடத்தில் தான் கடிகாரத்தை தொங்கவிடுவோம்.
ஆனால் இப்படி நம் வசதிக்காக கடிகாரத்தை மாட்டாமல், வாஸ்து சாஸ்திரத்தின் படி கடிகாரத்தை வீட்டுச் சுவற்றில் தொங்கவிட்டால், அந்த வீட்டில் உள்ளோர் சந்தோஷமாகவும், பணப்புழக்கம் அதிகமாகவும் இருக்கும். ஒருவேளை வீட்டில் தொங்கவிடப்பட்டுள்ள கடிகாரம் தவறான நிலையில் இருந்தால், அதனால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, செலவும் அதிகமாக இருக்கும்.
இக்கட்டுரையில் வாஸ்துப்படி கடிகாரத்தை எவ்விடத்தில் தொங்கவிடுவது நல்லது என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அதன்படி வீட்டில் கடிகாரத்தைத் தொங்கவிடுங்கள். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும்.

டிப்ஸ் #1
வீட்டில் கடிகாரத்தை வடக்கு, வடகிழக்கு மற்றும் கிழக்கு திசைகளில் தொங்கவிடுவது நல்லது. ஒருவேளை இந்த திசைகளில் கடிகாரத்தை தொங்கவிடமுடியவில்லை என்றால், தெற்கு சுவர் அல்லது தெற்கு பகுதிகளில் தொங்கவிடுங்கள்.

டிப்ஸ் #2
கடிகாரத்தை வடக்கு திசையில் தொங்கவிடுவதன் மூலம், வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும். வடகிழக்கு திசையில் கடிகாரத்தை தொங்கவிடுவதன் மூலம், அந்த வீடு செழிப்பாக இருக்கும். ஒருவேளை கிழக்கு பகுதியில் தொங்கவிடுவதன் மூலம், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

டிப்ஸ் #3
வீட்டில் கடிகாரத்தை தெற்கு, தென்கிழக்கு அல்லது தென்மேற்கு பகுதிகளில் தொங்கவிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த திசைகளில் தொங்கவிட்டால், அது வீட்டில் உள்ளோரின் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதோடு, வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.

டிப்ஸ் #4
கடிகாரத்தை எப்போதும் வீட்டில் இருக்கும் கதவுகளுக்கு மேலே தொங்கவிடக்கூடாது. இதனால் வீட்டில் செல்வ வளம் குறைவதோடு, துரதிர்ஷ்டத்தையும் வரவழைத்துவிடும். எனவே உங்கள் வீட்டில் கடிகாரம் இந்த இடத்தில் இருந்தால், உடனே அப்புறப்படுத்துங்கள்.

டிப்ஸ் #5
படுக்கை அறையில் கடிகாரத்தை வைப்பதாக இருந்தால், நீங்கள் தூங்கும் இடத்திற்கு வலது பக்கத்தில் தொங்கவிடுங்கள். முக்கியமாக கடிகாரத்தில் எப்போதும் சரியான நேரம் அல்லது 1-2 நிமிடம் வேகமாக இருக்கலாம். ஆனால் தாமதமாக மட்டும் ஓடக்கூடாது.

டிப்ஸ் #6
சிலர் கடிகாரங்கள் அழகாக உள்ளது என்று ஓடாத கடிகாரத்தையும் சுவற்றில் தொங்கவிட்டிருப்பார்கள். ஆனால் இப்படி ஓடாமல் இருக்கும் கடிகாரத்தை வீட்டில் தொங்கவிடக்கூடாது. இதனால் வீட்டில் செல்வ வளம் தான் குறையும். மேலும் கடிகாரத்தை தூசி படியாமல் எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #7
முக்கியமாக வீட்டுச் சுவற்றில் தொங்கவிடப்பட்டுள்ள கடிகாரங்கள் உடைந்திருக்காமல் இருக்க வேண்டும். உடைந்த கடிகாரங்களை தொங்கவிட்டால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, செல்வ சேர்க்கையைப் பாதிக்கும்.

டிப்ஸ் #8
கடிகாரத்தில் உள்ள கண்ணாடி பிரதிபலிப்பு கண்ணாடியாக இருந்தால், அது படுக்கை அல்லது படுக்கையறை கதவை பிரதிபலிக்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேப் போல் அந்த கண்ணாடி வீட்டின் வாசல் கதவைப் பார்த்தவாறு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ் #9
கடிகாரங்கள் கெட்ட காலங்கள், போர், போராட்டம் அல்லது வறுமை ஆகியவற்றின் பழைய மற்றும் அடக்கமான நினைவுகளை பிரதிநிதித்துவம் செய்யக்கூடாது. ஒருவேளை அப்படி இருந்தால், அம்மாதிரியான கடிகாரத்தை உடனே வீட்டில் இருந்து அகற்றுங்கள். ஏனெனில் அவை அதேப்போன்ற சூழ்நிலையை வீட்டில் உருவாக்கும்.



Click it and Unblock the Notifications