Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்..
இந்த பொருட்களை வியாழக்கிழமையன்று தானமாக கொடுத்தால் அனைத்து செல்வங்களும் உங்களை வந்து சேரும்
நமது சமூகத்தில் வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கு சிறப்பான நாளாக இருக்கும். ஆனால் வியாழக்கிழமை மட்டும் பல கடவுள்களுக்கு மிகச்சிறப்பான நாளாகும். இந்த கிழமைகளில் எதனை தொடங்கினாலும் அதற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கும். அதனால்தான் பெரும்பாலான தொழில்களும், செயல்களும் வியாழக்கிழமைகளில் தொடங்கப்படுகிறது.

வியாழக்கிழமை அன்று பெரும்பாலான மக்கள் தக்ஷிணாமூர்த்தியையும், சாய்பாபாவையும் வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஆனால் வியாழக்கிழமையன்று விஷ்ணுவை வழிபடுவதும் உங்களுக்கு நல்ல பலன்களை தரும். வியாழக்கிழமையன்று நீங்கள் செய்யும் எந்தவொரு சிறிய நல்ல காரியமாக இருந்தாலும் அது பல மடங்காக உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இந்த பதிவில் வியாழக்கிழமையன்று நீங்கள் செய்ய வேண்டிய தானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

பிரஜாபதி
தேவர்களின் குருவான பிரஜாபதி ஒன்பது கிரகங்களுள் மிகவும் முக்கியமான ஒருவராவார். எவர் ஒருவர் வாழ்க்கையில் இவரின் அருள் பூரணமாக கிடைக்கிறதோ அவர்கள் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்வார்கள். இவர் வீற்றிருக்கும் கிரகம்தான் வியாழன் ஆகும். எனவே வியாழக்கிழமைகளில் நீங்கள் செய்யும் நற்செயல்கள் இவரின் அருளை உங்களுக்கு பெற்றுத்தரும்.

விளக்கேற்றுதல்
மற்ற நாட்களை போல் அல்லாமல் வியாழக்கிழமை அன்று மட்டுமாவது அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு தூய்மையான மனதுடன் விஷ்ணு பகவானை வணங்கிவிட்டு அவரின் படத்திற்கு மஞ்சள் நிற மலர்களை அணிவித்து நெய்விளக்கேற்றி வழிபடுங்கள்.

மஞ்சள் துணி
புராணங்களின் படி மஞ்சள் என்பது செல்வத்தின் அடையாளமாகும். அந்த வகையில் வியாழக்கிழமையன்று யாருக்காவது மஞ்சள் நிற துணியை தானமாக அளிப்பது உங்கள் வாழ்வில் அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டுவரும்.

மஞ்சள் நிற இனிப்புகள்
சிவபெருமானுக்கு இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்களுக்கு பல நன்மைகளை வழங்கும். குறிப்பாக வியாழக்கிழமையன்று சிவபெருமானுக்கு மஞ்சள் நிற இனிப்புகள் வைத்து வழிபடுவது உங்கள் வாழ்வில் இனிமையை சேர்ப்பதுடன் உங்களை சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டியடிக்கும்.

வாழை மர வழிபாடு
வாழையடி வாழை என வாழ்த்துவது போல வியாழனன்று நீங்கள் செய்யும் வாழை மர வழிபாடு உங்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கும். மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் துணியை வைத்து வழிபடுவது கூடுதல் சிறப்பாகும். மற்றவர்களுக்கு மஞ்சள் நிற வாழைப்பழம் வழங்குவதும் மங்களகரமானதாகும்.

மஞ்சள் நிற ஆடை
முடிந்தவரை வியாழக்கிழமையன்று மஞ்சள் நிற ஆடை அணிய முயலுங்கள். இது உங்களுக்கு சிறப்பான பலனை அளிக்காவிட்டாலும் உங்களை மனதளவில் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும்.

மந்திரம்
உங்கள் வாழ்க்கையில் அமைதி, மகிழ்ச்சி மற்றும் செல்வம் அதிகம் கிடைக்க திருமால் முன்பு அமர்ந்து " ஓம் நமஹ நாராயணா " என்னும் மந்திரத்தை 108 முறை கூறுங்கள்.

விரதம்
வியாழக்கிழமையன்று விரதம் இருப்பது உங்களுக்கு பல நல்லப்பயன்களை பெற்றுத்தரும். குறிப்பாக வியாழக்கிழமை விரதம் இருப்பது உங்கள் திருமண வாழ்வில் உள்ள தடைகளை அகற்ற உதவும். மேலும் இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது உங்களுக்கு குறையா செல்வத்தை வழங்கும். ஒருவேளை விரதம் இருக்கவில்லையென்றாலும் சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











