For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸுவல் டார்ச்சர்! நடிகை மீது சக நடிகை பாலியல் துன்புறுத்தல் #MeToo புகார்!

செக்ஸுவல் டார்ச்சர்! நடிகை மீது சக நடிகை பாலியல் துன்புறுத்தல் #MeToo புகார்!

By John
|

நடிகை மாயா கிருஷ்ணன் தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகை ஆவார். மேலும், இவர் நாடகங்களிலும் , விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2015ம் ஆண்டு வானவில் வாழ்க்கை என்ற படத்தில் அறிமுகம் ஆனவர்.

Theater Artist Raises Complaint Against Actress Maya S Krishanan on Metoo

தொடர்ந்து இவர் தனுஷின் தொடரி, ஜோதிகாவின் மகளிர் மட்டும், சிவகார்த்திகேயனின் வேலைக்காரன், ரஜினியின் 2 பாயின்ட் ஓ மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் மீது நேற்று முகநூலில் சக நாடக நடிகையான அனன்யா ராம்பிரசாத் என்பவர் #MeToo பாலியல் துன்புறுத்தல் புகாரை பதிவு செய்திருக்கிறார். அதில், மாயா எஸ் கிருஷணன் ஆரம்பக் காலக்கட்டத்தில் இருந்து சமீப காலம் வரை தனக்கு என்னென்னவெல்லாம் செய்தார் என்று விலாவாரியாக பதிவிட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயங்கரமான பகுதி!

பயங்கரமான பகுதி!

என் வாழ்வின் மிக அதிர்ச்சிகரமான, பயங்கரமான பகுதியை இந்த பதிவில் கூறுகிறேன். இன்னும் நான் அதில் இருந்து மெல்ல, மெல்ல தான் மீண்டு வந்துக் கொண்டிருக்கிறேன். நான் செக்சுவலாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக, பாலியல் கொடுமைகளை அனுபவித்திருக்கிறேன். என்னை கொடுமை படுத்திய அந்த நபர் மாயா எஸ் கிருஷணன், என்று கூறி தன் பதிவை துவக்கியிருக்கிறார் அனன்யா ராம்பிரசாத்.

MeToo ஸ்டோரி!

MeToo ஸ்டோரி!

தகவல்களை திரித்துக் கூறி, ஒருவரை மற்றவரிடம் இருந்து தனிமைப் படுத்தி, மற்ற நபர்களிடம் உங்களின் பிம்பத்தை வலுக்கட்டாயமாக மாற்றி... உங்கள் மீது அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வது மிகவும் கொடுமையானது, அபாயமானது. அப்படி தான் மாயா கிருஷ்ணன் என் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இது தான், எனக்கும், மாயா கிருஷ்ணனுக்கும் இடையே நடந்தவை.. இது எனது #MeToo ஸ்டோரி...

 பெண் என்பதால்...

பெண் என்பதால்...

ஒருவேளை என்னை துன்புறுத்தியவர் ஆணாக இருந்திருந்தால், நான் மிக எளிதாக அதை புரிந்துக் கொண்டு, அவரால் எத்தகைய தாக்கம் ஏற்படுகிறது என்பதை அறிந்திருப்பேன். ஆனால், அது ஒரு பெண் என்பதால் தான்.. அவர் எனக்கு செய்து வந்த துன்புறுத்தலை அறிந்துக் கொள்ளவே நீண்ட காலம் எடுத்துக் கொண்டது. அவரால் எனக்கு ஏற்படும் விஷயங்களை தெரிந்துக் கொள்ளவும், அதை அக்ஸப்ட் செய்துக் கொள்ளவுமே நீண்ட காலம் ஆனது. என் தெரபிஸ்ட் இடம் பேசிய பிறகு தான், என்னுள் ஏற்பட்ட அதிர்ச்சியை நான் அறிந்துக் கொள்ள முடிந்தது.

MOST READ: வயிறு உப்பி கொண்டே போவதை நம் முன்னோர்களின் முறைப்படி சரி செய்வது எப்படி...?

மாயா கிருஷ்ணன்!

மாயா கிருஷ்ணன்!

நான் மாயா கிருஷ்ணனை கடந்த 2016ம் ஆண்டு தான் முதன் முதலில் சந்தித்தேன். அப்போது என் வயது 18. அவருக்கு வயது 25. அப்போது என் முதல் புரொடக்ஷன் ரிஹர்சலில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்தேன். அப்போது நான் ஒரு புது மாணவி. அந்த காலக்கட்டத்தில் எண்டர்டெயின்மென்ட் துறையில் மாயா ஒரு வளர்ந்து வரும் பிரபலமாக இருந்தார். ஆகையால், ரிஹர்சல் நேரங்களில் அவர் என் மீது விருப்பமாக இருந்தது, எனக்கு வழிகாட்டியாக நிறைய அட்வைஸ் செய்தது எல்லாம், அவரை நான் முழுமையாக நம்பியதற்கு காரணமாகின.

நெருக்கம்!

நெருக்கம்!

அடுத்த சில மாதங்களிலேயே நாங்கள் இருவரும் நெருக்கமாக பழக ஆரம்பித்தோம். என் மற்ற தோழர்கள், தோழிகளை காட்டிலும், மாயா மீது நான் அதிக நம்பிக்கை கொண்டிருந்தேன். அவரது கருத்து மற்றும் அவர் ஒப்புதல் எனக்கு மிகவும் அவசியமாக இருந்தது. ஒரு கட்டத்தில் என் பெற்றோரின் ஒப்புதலை காட்டிலும் மாயாவின் ஒப்புதல் தான் எனக்கு பெரிதாகப்பட்டது. (இதற்கும் என் பெற்றோரிடம் நான் மிக க்ளோஸாக பழகியவள்).

ஆதிக்கம்!

ஆதிக்கம்!

மாயா ஒருக்கட்டதில் நான் அவருடன் மட்டும் தான் பழக வேண்டும் என்பது போல என்னை கையாள துவங்கினார். தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் என் அனைத்து முடிவுகளையும் மாயா எடுக்க துவங்கினார் (விளம்பரங்கள் மற்றும் புரொடக்ஷனில்). மேலும், நான் என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் முதற்கொண்டு மாயாவின் ஆதிக்கம் நிறைந்திருந்தது. நான் என்ன செய்வதாக இருந்தாலும் அதில் மாயாவின் கட்டுப்பாடு இருந்தது.

கண்ட்ரோல்!

கண்ட்ரோல்!

மாயா என் வாழ்க்கையை முழுவதுமாக கண்ட்ரோல் செய்ய ஆரம்பித்தார். மெல்ல, மெல்ல என் நண்பர்களை கட் செய்ய ஆரம்பித்தார். என்னை குறித்து என் நண்பர்களிடம் பொய் கூறியும், அவர்கள் குறித்து என்னிடம் பொய் கூறியும், திரித்து பேசி, பொய்களை பரப்பி என்னை அவர்களை வெறுக்க செய்து, அவர்களை என்னிடம் இருந்து பிரிக்கும் வேலைகளில் ஈடுபட்டார்.

எதெல்லாம் எனக்கு தேவையாக இருந்ததோ அதை எல்லாம் மாயா அழிக்க துவங்கினார். என் பெற்றோர்களிடம் பொய் பேச செய்தார், அவர்களை தவிர்க்க செய்தார்.

மறுப்பு!

மறுப்பு!

மாயா மனம் இலகுவாக உணர செய்ய, நான் எதை வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டேன். இல்லையேல், மாயா மறுப்பது அல்லது ஒப்புதல் அளிக்காமல் போவது என்னை பெரும் சித்திரவதைக்கு ஆளாக்கும்.

எது எனக்கு சிறந்தது என்று மாயா நினைக்கிறாரோ, அதை மட்டும் தான் அவர் புரிந்துக் கொள்வார். நான் என் தன்னம்பிக்கையை இழக்க துவங்கினேன், என் சுய மரியாதையை இழந்தேன், சுயமாக முடிவெடுக்கும் தன்மையை இழந்தேன்.

ஒரே மெத்தையில்...

ஒரே மெத்தையில்...

இந்த உலகிலேயே நான் தான் உயர்ந்தவள் என்றும் அவரால் என்னை உணர வைக்க முடியும் அல்லது, என் பலவீனங்களை, பாதுகாப்பின்மையை குத்தி, என்னை பீஸ், பீஸாக உடைக்கவும் முடியும். ஒருக்கட்டத்தில் மாயா என் வாழ்க்கை முழுவதையும் ஆட்கொண்டார். என்னை செக்ஸுவல் உறவில் கையாள துவங்கினார். அவருடன் ஒரே அறையில், ஒரே மெத்தையில் படுத்து உறங்குவது எனக்கு சாதாரணமான விஷயமாக மாறியது.

MOST READ: உங்களை சுற்றி கெட்ட சக்தி இருக்கிறது என்பதை வெளிகாட்டும் அறிகுறிகள்!

முத்தங்கள்!

முத்தங்கள்!

மாயா தனியாக தான் வசித்து வந்தார். பின் நாங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து அவர் வீட்டில் வசிக்க துவங்கினோம். ஆரம்பத்தில் என்னை கட்டிப்பிடிக்க துவங்கினார். பிறகு நெற்றியில் முத்தமிட்டு வந்தார். பிறகு எல்லைகள் தகர்ந்தன, என் கழுத்து, கன்னம் என என்னை மொத்தமாக முத்தமிட துவங்கினார். அப்போது தான், நான் எங்கோ தவறாக சிக்கிக் கொண்டேன் என்பதை உணர துவங்கினேன்.

பாதிப்பு!

பாதிப்பு!

அந்த காலக்கட்டத்தில் தான் எனக்கு நிறைய பதட்டம் மற்றும் எமோஷனல் பிரேக்டவுன் ஏற்பட துவங்கியது. நான் சில்லியாக பிஹேவ் செய்கிறேன் என என்னைய நம்ப செய்தார். நாங்கள் செய்யும் காரியமெல்லாம் தோழிகளுக்கு இடையே சாதாரணமான விஷயம் என்று கூறினார். அவர் கூறியதை நம்பி, அதெல்லாம் நார்மல் என்று நானும் நம்ப துவங்கினேன்.

சாதாரணம்!

சாதாரணம்!

அதை தொடர்ந்து மெல்ல, மெல்ல மாயா என்னை உடல் ரீதியாக, மன ரீதியாக, உணர்ச்சி ரீதியாக கையாள துவங்கினார். இதனால் என்னுள் பதட்டமும், எமோஷனல் ப்ரேக்டவுனும் அதிகரிக்க துவங்கியது. நான் அதிர்ச்சியாக உணர்வது எல்லாம் மிக சாதாரணமான விஷயம் என்று கூறிக் கொண்டே இருந்தார் மாயா.

இதெல்லாம் இயற்கையானது என்று கூறி வந்தார். அப்போது எனக்கு 18 வயது. அதற்கு முன் நான் யாருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததே இல்லை. காதல் குறித்தும் எனக்கு எந்தவொரு ஐடியாவும் இல்லை.

என்னுள் இருந்தது ஒரே ஒரு எண்ணம் தான், நான் ஒரு பெண்ணுடன் அட்ராக்ட் ஆகவில்லை என்பது குறித்து தெளிவாக வேண்டும் என்பது தான் அது. என் தெரபிஸ்ட் தான் என்னிடம் விளக்கமாக நான் செக்ஸுவல் ரீதியாகவும், மன மற்றும் உணர்ச்சி ரீதியாக மாயாவால் துன்புறுத்தப் பட்டிருக்கிறேன் என்ற விளக்கமாக கூறினார்.

அஷ்வின்!

அஷ்வின்!

இதே காலக்கட்டத்தில் தான் மாயாவிற்கும் அஷ்வின் ராம் எனும் 19 வயது இளைஞருக்கும் நடுவே ஒரு ரிலேஷன்ஷிப் இருந்தது. அஷ்வின் ஒரு சக நடிகர் மற்றும் நண்பர். இது எனக்கும் மாயாவிற்கும் உடல் ரீதியான உறவு ஆரம்பமாவதற்கு ஒரு மாதம் முன்னர் நடந்த விஷயம். மாயாவும், அஷ்வினும் நீண்ட நேரம் தனியாக இருப்பார்கள்.

பணத்திற்காக...

பணத்திற்காக...

மாயா அஷ்வினை மிக நெருக்கமாக கட்டிப்பிடித்து தூங்குவார். அஷ்வினுடனான மாயாவின் நெருக்கம் எனக்கு குழப்பத்தை உண்டாக்கியது. ஏனெனில், அஷ்வின் நல்லவனல்ல என்று என்னிடமே மாயா நிறைய முறை கூறி இருக்கிறார். ஆனால், அவனது கார், பர்சனல் ஜிம் ட்ரெயினர் மற்றும் சில விஷயங்களுக்காக மாயா அவனை பயன்படுத்திக் கொண்டார்.

MOST READ: உங்கள் நகங்கள் உங்களை பற்றி என்ன சொல்கிறதுனு தெரியுமா...? இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க...

மெசேஜ்!

மெசேஜ்!

ஒருமுறை மாயாவிடம் இருந்து ஒரு மெசேஜ் வந்தது. அதில், நான் அஷ்வினுடன் அவன் வீட்டில் தங்கி இருந்தேன். அன்று இரவு அஷ்வின் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டான் என்று மேம்போக்காக கூறி இருந்தார் மாயா. ஆனால், மறுநாள் விமானம் நிலையம் செல்ல அவனுடனே காரில் வந்தார், அவனை கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைப்பெற்றார்.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

பிறகு மாயா என்னிடம், அஷ்வின் வீட்டில் தங்கி இருந்தேன். நாங்கள் கட்டிப்பிடித்து உறங்கிக் கொண்டிருந்தோம். திடீரென அஷ்வின் என்னை முத்தமிட்டான். என்று விலாவாரியாக முந்தைய இரவு நடந்ததை கூறினார். பிறகு தி லிட்டில் தியேட்டர் குழுவில் இருந்த அனைவரையும் அஷ்வினுக்கு எதிராக திருப்பினார் மாயா. நாங்கள் மலேசியாவில் நடத்தவிருந்த நாடகத்தையும் பாழாக்கினார். இதனால் அஷ்வின், மாயா இருவருமே பாதிப்புக்குள்ளாகினர்.

கோபம்!

கோபம்!

மாயா இதனால் மிகுந்த கோபம் அடைந்தார். மாயா அஷ்வின் மீது மட்டும் தான் ஆக்ஷன் எடுப்பார்கள் என்று கருதினார். ஆனால், தங்கள் இருவர் மீதும் ஆக்ஷன் எடுக்கப்படும் என்று மாயா கருதவில்லை. அந்த கோபத்தை, வெறுப்பை அஷ்வின் மீது திசைத்திருப்பினார் மாயா. ஒருக்கட்டத்தில் என்னையும் தி லிட்டில் தியேட்டர் குழுவிற்கு எதிராக திசைத்திருப்ப முயன்றார். அன்றிலிருந்து மாயா தி லிட்டில் தியேட்டர் குழுவுடன் பணியாற்றுவதை தவிர்த்து வந்தார்.

பொய்!

பொய்!

அந்த குழுவின் மீது அபாண்டமான பொய் தகவல்களை தான் சந்திக்கும் நபர்களிடம் எல்லாம் பரப்ப துவங்கினார் மாயா. அப்பாவி பெண்களை அவர்கள் ஹிப்னாடிசம் செய்து, பாலியல் ரீதியாக துன்புறுத்துகிறார்கள் என்று கூறி வந்தார். இதை எல்லாம் நான் மௌனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்களை கீழே கொண்டுவர நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று மாயா கூறினார்.

இயக்குனர் கேகே!

இயக்குனர் கேகே!

மாயாவின் கோபத்தால் இயக்குனர் கேகே உடன் மனக்கசப்பு உண்டானது. இந்த காலக்கட்டத்தில் (டிசம்பர் 2017) பெற்றோர் மற்றும் நண்பர்களுடனான என்னுடைய உறவு மிக மோசமான நிலையில் இருந்தது. என் நிறைய நண்பர்கள் மாயாவின் பொய்களால் மிகவும் தாக்கம் அடைந்திருந்தனர் என்றே கூற வேண்டும். பிறகு 2018 ஜனவரி மாதம், நான் மன மற்றும் உடல் ரீதியாக எப்படியான தாக்கத்தில் இருந்தேன் என்பதை எடுத்துக் கூறி இயக்குனர் கேகேவிடம் மன்னிப்பு கோரினேன்.

MOST READ: தீபாவளிக்கு வீட்டை சுத்தம் பண்றத நினைச்சாலே தலை சுத்துதா? ஒரு ஈஸியான வழி சொல்லட்டுமா?

மீண்டு வந்தேன்...

மீண்டு வந்தேன்...

கேகே தான் என்னை மீண்டும் பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் சேர்த்து வைத்தார். மேலும், எனக்கு நடந்த அத்தனை அவலங்களையும் அவர்களிடம் தைரியமாக எடுத்துரைக்க வைத்தவரும் கேகே தான். மேலும், அவர் என்னை சிறந்த நிபுணரிடம் அழைத்து சென்று என்னை மன ரீதியாக மீண்டுவர உதவினார். எனக்கு தன்னம்பிக்கை அளித்தார். நான் மீண்டும் நாடகங்களில் நடிக்க துவங்கினேன். ஒருமுறை மாயாவை ஒரு ஈவண்டில் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

தைரியம் வேண்டும்..

தைரியம் வேண்டும்..

இந்த பதிவு மாயாவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இதனால் அவர்கள் நிச்சயம் நம்பிக்கையும், தைரியமும் கொள்வார்கள். அவர்களும் இதை பகிர்வார்கள் என்று நம்புகிறேன். நாம் மௌனம் சாதிப்பது, நம்மை சூரையாடுபவர்களுக்கு பெரும் உதவியாகிவிடும். இதனால், நாம் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, மேலும் பலர் அவர்களால் பாதிக்கப்படுவார்கள். தைரியமாக முன்வந்து நடந்ததை வெளிப்படையாக கூறுங்கள். என்னால் முடிந்த உதவியை நான் உங்களுக்கு செய்கிறேன்.

 மற்றொரு நபர்...

மற்றொரு நபர்...

அனன்யா பிரசாத், சாரதா என்பவருடன் தான் பேசியதையும், அவர் மூலம் பெற்ற தைரியம் குறித்தும், தாங்கள் உரையாடிய சாட்டிங் ஸ்க்ரீன் ஷாட்டையும் தன் பதிவில் பகிர்ந்திருக்கிறார்.

மேலும், மாயா கிருஷ்ணன் இனிமேலும் நான் அமைதியாக இருக்க போவதில்லை. நான் இதை ICCக்கு எடுத்து செல்லவிருக்கிறேன் என்றும் அனன்யா பிரசாத் தன் பதிவின் முடிவில் தெரிவித்திருக்கிறார்.

பின் குறிப்பு!

மேலும், பதிவின் பின் குறிப்பில், மாயா உங்களிடம் தகவல்களை திரித்து கூறி இருக்கலாம். ஆனால், இந்த பதிவின் மூலம் அவர் கூறுவது எதுவும் உண்மை இல்லை என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ள முடியும் என்று அனன்யா குறிப்பிட்டிருக்கிறார்.

பதிவின் முடிவில் Please Let Me Heal, Dignified என எழுதி முடித்திருக்கிறார் அனன்யா.

MOST READ: பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!

All Image Source:ananya.ramaprasad /MayaSKrishnanOfficial/ Facebook

பதில்!

பதில்!

அனன்யாவின் இந்த பதிவுக்கு மாயாவின் உறவினர் ஒரு பதில் கூறுகையில், 'இது முழுக்க முழுக்க மாயா பதிவிட வேண்டியது. அந்த நாடக குழுவை சேர்ந்த இளைஞர் மாயாவை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்க முயன்றார். ஆனால், மாயா இதுக்குறித்து புகார் அளித்தும், அந்த இளைஞர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், மாயா மீது பழிபோடும் வகையில், அந்த பெண்ணை வைத்து இப்படி ஒரு கதை தயார் செய்துள்ளனர். இது அந்த பெண் தனியாக எழுதியதாக இருக்காது. பலர் சேர்ந்துத் திட்டமிட்டு மாயா மீது இப்படியொரு குற்றம் சுமத்தியுள்ளனர்' என்று கூறி இருக்கிறார்.

நாளுக்கு நாள் #MeToo புகார்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதில் யார் சொல்வது உண்மை, யார் பக்கம் நியாயம் இருக்கிறது? என்பதை கண்டறிய முடியா நிலை நிலவுகிறது. சிலர் #MeTooவை பழிவாங்கும் கருவியாகவும் பயன்படுத்துகிறார்கள்.

முந்தைய பதிவு நீக்கம்!

மாயா எஸ் கிருஷ்ணன் மீது #MeToo புகார் பதிவினை முகநூலில் பதிவிட்ட அனன்யா. நேற்று (01/11/2018), லீகலாக சட்டப் பூர்வமாக சென்று இணக்கமான நிலை உண்டான காரணத்தால், தனது முந்தைய பதிவை நீக்கிவிட்டேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Theater Artist Raises Complaint Against Actress Maya S Krishanan on Metoo

Theater Artist Ananya Ramprasad Accused Actress Maya S Krishnan on #Metoo. And Posted it on Facebook.
Desktop Bottom Promotion