For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித தலையை வேட்டையாடும் பழங்குடியின மக்கள்!

மனித தலையை வேட்டையாடும் வழக்கம் கொண்ட பழங்குடியின மக்களின் கடைசி தலைமுறை குறித்தான கதை.

|

முகத்தில் பச்சைக் குத்திக் கொள்ளும் பாரம்பரியம் கொண்ட இந்தியாவின் கடைசி தலைமுறை பழங்குடியின மக்கள் இவர்கள் தான். கொன்யக் நாகா என்று அழைக்கப்படும் இந்த பழங்குடியின மக்கள் லோங்வா என்ற குக்கிராமத்தில் வசிக்கிறார்கள். இந்த லோங்வா என்ற கிராமம் மியான்மரின் அடர்ந்த காட்டின் ஒரு பகுதியிலும் இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இன்னொரு பகுதியும் அமைந்திருக்கிறது.

நாகாலாந்தில் மொத்தம் பதினாறு பழங்குடியின குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களில் கொன்யக் என்ற பழங்குடியின மக்கள் போர்வீரர்களாக பார்க்கப்படுகிறார்கள். அவர்களுக்குள்ளே நடக்கிற சண்டைகளானாலும் சரி பிற எதிரிகளிடமிருந்து வருகிற சண்டைகளனாலும் சரி இவர்கள் தான் முதலில் நிற்பார்கள், அதனால் பெரும்பாலும் இவர்கள் தங்கள் ஊரின் எல்லைப்பகுதிகளில் மற்றும் மலையின் உச்சியில் வாழ்ந்து வந்தார்கள். இதனால் எதிரியின் அசைவுகளை உடனேயே அறிந்து கொள்ள முடியும். அதோடு தங்கள் ஊருக்குள் நுழைய விடாமல் எல்லையிலேயே அவர்களை அடித்து விரட்டி விடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Story About India's last Headhunters tribe

Story About India's last Headhunters tribe
Story first published: Thursday, July 19, 2018, 12:07 [IST]
Desktop Bottom Promotion