For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிம்ம ராசிக்காரர்களுக்கு விளம்பி வருடம் எப்படி இருக்கப்போகிறது?...

2018 ஆம் ஆண்டு சித்திரை முதல் தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் விளம்பி வருடமாகப் பிறக்கிறது. அதில் சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என்று பார்ப்போம்.

|

மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்த சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் என்னெ்ன நற்பலன்களையும் சோதனைகளையும் தரக் காத்திருக்கிறது என்று பார்ப்போம்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு வர இருக்கின்ற தமிழ்ப் புத்தாண்டான விளம்பி வருடம் துயரங்கள் எதையும் தரப்போவது இல்லை. அதே நேரத்தில் இந்தப் புத்தாண்டு பலன்களை இரண்டு பிரிவுகளாக பிரித்துக் கொள்ள முடியும்.

tamil new year 2018

விளம்பி ஆண்டில் இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கும் குருப்பெயர்ச்சி சிம்மத்திற்கு இப்போது இருப்பதை விட நல்ல பலன்களை தரும் என்பதாலும் மற்ற கிரகங்களின் அமைப்பும் கெடுபலன்கள் எதுவும் தராத நிலையில் உள்ளதாலும் புத்தாண்டின் முதல் பகுதியைவிட ஆண்டின் பிற்பகுதியில் நற்பலன்களை தருவதாக இருக்கும்.

பிறக்க இருக்கும் புது வருடத்தில் பணவரவும் பொருளாதார நிலைமையும் நன்றாகவே இருக்கும். எனவே நிதி நிலைமையைப் பற்றி கவலைப்பட வேண்டியது அவசியம் இருக்காது. ஆனாலும் வீண் செலவு செய்வதை தவிர்ப்பது நல்லது. எல்லாவற்றிலும் சிக்கனமாக இருப்பது நல்லது. ஆரம்பத்தில் சுமாரான பலன்களைத் தந்தாலும் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து நல்ல பலன்கள் நடக்கத் துவங்கி படிப்படியாக உங்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்றவற்றில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

அரசுத்துறை பணியாளர்கள் உயர் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேல் அதிகாரியின் செயல் பற்றிய விமர்சனங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பது நிறைய பிரச்னைகளை தடுக்கும். தனியார் துறையினர் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்கு நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமைகள் ஏற்படலாம். சொந்தத் தொழில் செய்பவர்கள், வியாபாரிகள், தனது அறிவையும் புத்திசாலித்தனத்தையும் முதலீடாக வைத்து தொழில் செய்தால் லாபமடையலாம்.

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறும். வீடுகட்ட ஆரம்பித்து பாதியில் நிறுத்தியவர்கள் முழுதாக முடித்து கிரகப் பிரவேசம் செய்வீர்கள். எதிர்கால முதலீடாக குழந்தைகள் பெயரிலோ அல்லது உங்கள் பெயரிலோ வீட்டுமனை வாங்குவீர்கள்.

இதுவரை வீடு வாங்க தடை இருந்தவர்களுக்கு தடை நீங்கி நல்ல வசதியான வீடு அமைய போகிறது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் இனிமேல் குத்தகை அடிப்படை வீட்டிற்காவது மாற முடியும். ஏற்கனவே இருக்கும் வாகனத்தை விற்றுவிட்டு அதை விட நல்ல வாகனம் வாங்க முடியும்.

தாய்வழி சொந்தங்களிடம் இதுவரை இருந்து வந்த கருத்து வேற்றுமைகள் தீர்ந்து உறவில் சுமூக நிலை உண்டாகும். அம்மாவின் ஆதரவு கிடைக்கும். தாயார் வழியில் நன்மைகள் உண்டு. மாமன்கள், சித்திகள் உதவுவார்கள். உயர்கல்வி கற்க இருந்து வந்த தடைகள் நீங்கி சிலர் மேற்படிப்பு படிப்பீர்கள்.

வீட்டில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறும். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும். நீண்ட காலமாக மகன், மகளுக்கு திருமணம் கூடி வரவில்லையே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அந்த கவலை இப்போது தீரும்.

புத்திர ஸ்தானமான ஐந்தாமிடத்தில் சனி செவ்வாய் இணைந்திருப்பதால் பள்ளி கல்லூரி செல்லும் வயதில் பிள்ளைகளை வைத்திருக்கும் சிம்ம ராசிக்காரர்கள் குழந்தைகளின் மேல் சற்றுக் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. பிள்ளைகளின் கவனம் படிப்பிலிருந்து விலகி காதல், கத்திரிக்காய் என்று வேறு பக்கம் திரும்புவதற்கு வாய்ப்பிருக்கிறது.

பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் கோபப்பட வேண்டாம். உடல் நலத்தில் கவனமுடன் இருப்பது நல்லது. சிறிய விஷயமாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அனைத்து மருத்துவ பரிசோதனையும் செய்து குணமாக்கிக் கொள்ளுங்கள். சர்க்கரை, ரத்தஅழுத்தம் போன்ற நோய் உள்ளவர்கள் அடிக்கடி நோய் கட்டுக்குள் இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

நிலம், வீடு போன்றவைகளை வாங்கும்போது பொறுமை தேவை. அவசரம் வேண்டாம். வில்லங்கம் சரியாகப் பார்க்கவும். வில்லங்கம் உள்ள இடத்தை தெரியாமல் வாங்கிவிட்டு பின்னால் சிரமப்பட வாய்ப்பிருப்பதால் ஆரம்பத்திலேயே கவனமாக இருங்கள்.

ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்போர், திரவம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், காய்கறி மொத்த வியாபாரம், வெளிநாட்டு ஏற்றுமதி இறக்குமதி, சிகப்பு மற்றும் வெள்ளை நிறம் சம்பந்தப் பட்ட தொழில் செய்பவர்களுக்கு பட்ஜெட்டை மீறி செலவுகளும் விரயங்களும் இருக்கும் என்றாலும் நல்ல வருமானம் வந்து அனைத்தையும் ஈடு கட்டும்.

பெண்களுக்கு குடும்பத்தில் நற்பெயரும், கௌரவமும் கிடைக்கும். பெண்களின் ஆலோசனை குடும்பத்தில் இருக்கும் ஆண்களால் ஏற்கப்படும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பதவிஉயர்வு, கூடுதல் சம்பளம் போன்றவை இருக்கும். நீண்டநாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும். அனைவரிடமும் பாராட்டுப் பெறுவீர்கள். கேட்டது கேட்ட இடத்தில் உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்திலும் அலுவலகத்திலும் கௌரவமாக நடத்தப்படுவீர்கள்.

கடன் வாங்கும்முன் ஒருமுறைக்கு இரண்டு முறை யோசித்து செயல்படுவது நல்லது. எக்காரணத்தை முன்னிட்டும் மீட்டர் வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் போட வேண்டாம். பஞ்சாயத்து பண்ணுவது போன்றவைகள் பக்கம் தலைவைத்துப் படுக்காதீர்கள். அப்புறம் உங்களுக்கு பஞசாயத்து பண்ண ஆள் தேட வேண்டி இருக்கும்.

வருடத்தின் பிற்பகுதியில் சிலர் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.

குடும்பத்தில் சொத்துச்சேர்க்கை, நகைகள் வாங்குதல், சேமிப்புகளில் முதலீடு செய்தல், குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போன்றவைகளை இப்போது செய்ய முடியும். மாணவர்களுக்கு பள்ளி கல்லூரிகளில் இனிய சம்பவங்கள் நிகழும். படிப்பது மனதில் பதியும். தேர்வுகளை நன்றாக எழுத முடியும்.

சிம்ம ராசிக்கு கடந்த மூன்று வருடங்களாக இருந்து வந்த பின்னடைவுகள் நீங்கும். இனிமேல் நன்றாக இருக்கப் போகிறீர்கள். இந்த தமிழ்ப் புத்தாண்டு கெடுதல்களைச் செய்யக்கூடிய அமைப்பில் இல்லை. உங்களின் எதிர்கால நன்மைக்குரிய சில மாற்றங்கள் இந்த விளம்பி வருடத்தில் நடக்கப்போகிறது. அதனால் மகிழ்ச்சியாக இருங்கள்.

Read more about: tamil new year
English summary

simham rasi vilambi tamil new year horoscope 2018

tamil new year vilambi varuda palangal 14.4.18
Desktop Bottom Promotion