பித்ரு பட்சத்தின்போது வீட்டில் திதி கொடுக்கலாமா? அதனால் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

பித்ரு பட்சம் என்பது நமது முன்னோர்களின் ஆத்மாவுக்காக செய்யப்படும் ஒரு சடங்கு விழா.முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இது செய்யப்படுகிறது.

பித்ரு பட்சம் என்பது நமது முன்னோர்களின் ஆத்மாவுக்காக செய்யப்படும் ஒரு சடங்கு விழா. இந்த விழா பதினைந்து நாட்களில், பத்ராபாதா மாத பூர்ணிமாவிலிருந்து அஷ்வின் மாதத்தின் அமாவசை தினத்தில் இந்த பித்ரு பட்சம் அனுசரிக்கப்படுகிறது.

How To Perform Pitra Paksha Puja At Home

முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்காக இது செய்யப்படுகிறது. இந்த பித்ரு பட்சத்தின் போது பிண்ட தானம் செய்து முன்னோர்களை வழிபடுவர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பித்ரு லோகம்

பித்ரு லோகம்

முன்னோர்கள் இறந்த பிறகு பித்ரு லோகத்திற்கு செல்கின்றனர். அவர்களால் தங்கள் உணவை சாப்பிட முடியாது என்பதால் அவர்களுக்கு உணவளித்து மகிழ்கின்றனர். இந்த பித்ரு பட்சத்தை எப்படி வீட்டிலேயே செய்து முன்னோர்களின் ஆசிர்வாதித்தை பெறலாம் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

16 ஆம் நாள்

16 ஆம் நாள்

மூதாதையர் இறந்த நாளில் பித்ரு பட்சம் செய்ய வேண்டும். இந்த வழிமுறையை முன்னோர்கள் இறந்த 16 வது நாட்கள் (11.30 am - 12.30 pm) வரை செய்ய வேண்டும்.

பித்ரு பூஜை விதிகள்

பித்ரு பூஜை விதிகள்

தெற்கு திசையில் ஒரு மரப்பலகையை வைத்துக் கொள்ளுங்கள். அதன் மீது வெள்ளை துணியை விரித்து கொள்ளுங்கள். அதன் மீது கருப்பு எள மற்றும் பார்சிலி விதைகளை பரத்தி விட வேண்டும். இப்பொழுது அந்த பலகையின் மீது உங்கள் முன்னோர்களின் படத்தை வையுங்கள். அந்த படத்தின் அருகில் அருகம்புல்லை வையுங்கள். இது விஷ்னு வின் அவதாரமாக கருதப்படுகிறது.

நீர் கும்பம் வைத்தல்

நீர் கும்பம் வைத்தல்

உங்கள் முன்னோரின் பெயர்களைக் கூறி அவர்களை அந்த பூஜைக்கு அழையுங்கள். இந்த பூஜையில் உங்கள் ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும். அதில் கொஞ்சம் பசும் பால் சேர்த்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு எள், பார்சிலி விதைகள் மற்றும் அரிசி போன்றவற்றையும் சேருங்கள்.

பிண்டம் படைத்தல்

பிண்டம் படைத்தல்

பிண்ட உருண்டை தயாரிக்க சாதம், பால், தேன் மற்றும் கங்காஜல் சேர்த்து உருண்டை பிடிக்க வேண்டும். இந்த உருண்டையை மூதாதையர் படத்திற்கு முன் ஒரு இலையில் வைக்க வேண்டும். இந்த உருண்டை பிண்டம் என்றும் இந்த தானமு பிண்ட தானம் என்றும் அழைக்கப்படுகிறது. உங்களது பூஜை நல்லபடியாக முடிந்த பிறகு இந்த பிண்டத்தை பசு மாட்டிற்கு தானமாக வழங்கிட வேண்டும். அதே மாதிரி இதை அருகில் உள்ள ஆறு போன்ற தண்ணீரில் கரைத்து விட வேண்டும்.

மற்றொரு சடங்கு

மற்றொரு சடங்கு

நீங்கள் செய்ய வேண்டிய மற்றொரு சடங்கும் உள்ளது. ஒரு ரொட்டி தயாரித்து அதில் கொஞ்சம் நெய் மற்றும் வெல்லத்தை வையுங்கள். இதை உங்கள் முன்னோர்களின் படத்திற்கு முன்னால் படையுங்கள். இதை தினமும் செய்து இந்த ரொட்டியை பசு மாட்டிற்கு கொடுத்து விடுங்கள். இந்த பூஜையை தவிர்த்து ஒரு கோயில் குருவிற்கு காணிக்கையும் உணவையும் வழங்க வேண்டும். ஆடைகளைக் கூட அவர்களுக்கு தானமாக வழங்கலாம்.

MOST READ: பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்?

வெல்லம் மற்றும் நெய்

வெல்லம் மற்றும் நெய்

கோயில் குருவிற்கு உணவை வழங்குவதற்கு முன் மாட்டு சாணத்தை முழுவதுமாக எரித்து அதில் கொஞ்சம் நெய் மற்றும் வெல்லத்தை போட வேண்டும். இது மூதாதையர்களுக்கு பித்ரு பட்சம் செய்யும் மற்றொரு முறை. வெல்லம் முழுவதுமாக நெருப்பில் தீர்ந்து போய் விட்டால் முன்னோர்கள் அதை ஏற்று கொண்டு விட்டார்கள் என்றும் சாப்பிட்டு விட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion