Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
பித்ருக்களின் அடையாளமாக ஏன் காகத்தை குறிப்பிடுகிறோம்? அவர்கள் ஆசிர்வாதம் கிடைத்ததன் அறிகுறி என்னென்ன
பித்துக்களின் அடையாளமாக ஏன் காகத்தைக் குறிப்பிடுகிறோம். அதற்கான காரணம் என்ன, பித்ரு பட்சத்தின் இன்று நாம் கவனிக்க வேண்டிய அறிகுறிகள் என்னென்ன என்று குறிப்பிட்டுள்ளோம்.
நமது சத்ருக்களுக்கும் காகத்திற்கும் என்ன தொடர்பு என்று தெரியுமா?
பித்ரு பட்சம் என்பது நமது முன்னோர்களின் ஆத்மாவுக்காக செய்யப்படும் ஒரு சடங்கு விழா. இந்த விழா பதினைந்து நாட்களில், பத்ராபாதா மாத பூர்ணிமாவிலிருந்து அஷ்வின் மாதத்தின் அமாவசியத்தில் அனுசரிக்கப்படுகிறது.


திதி
இந்த நாட்களில் இறந்தவர்களுக்கு சடங்குகள் நிகழ்த்தப்பட்டு திதி கொடுப்பர். இறந்த தங்கள் வீட்டு முன்னோர்கள் (பித்ருக்களை) நினைத்து இந்த அமாவாசை தினத்தில் வழிபடுவர். அமாவாசை தினம் என்பது பொதுவாக மூதாதையர்களுக்காக வழங்கப்பட்ட தினம். இந்த அமாவாசை நாளில் காக்கத்தை தங்கள் முன்னோர்களாக நினைத்து உணவு படைத்து வணங்கி வழிபடுவார்கள். அப்படி வழிபடுகையில் காக்கைகளின் செயல்களை வைத்து சில நன்மைகளையும் தீமைகளையும் வழங்குகின்றன. அவற்றை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

பூக்களை கொண்டு வருதல்
பித்ரு பட்சம் அன்று காகம் தன் அலகுகளால் பூக்களையும், இலைகளையும் கொண்டு வந்தால் நம் முன்னோர்கள் நம்மை ஆசிர்வதிக்கிறார்கள் என்றும் நன்மைகளை அள்ளித் தருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த செயல்கள் நீங்கள் நினைத்ததை நிறைவேற்ற உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள் என்றும் நம்பப்படுகிறது.

காகம் மாட்டின் மீது உட்காருதல்
பித்ரு பட்சத்தின் போது காகம் ஒரு பசு மாட்டின் மீது உட்கார்ந்து தன் அலகுகளால் அதன் மீது தேய்த்தால் முன்னோர்கள் நீங்கள் அளித்த உணவில் திருப்தியடைந்து உள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

காகம் பசுமை மரத்தில் உட்காருதல்
காகம் பசுமையான மரத்தில் உட்கார்ந்தால் உங்கள் முன்னோர்களால் நன்மைகள் உண்டாகிறது என்பதை காட்டுகிறது. கண்டிப்பாக அந்த மரம் அடர்ந்த பசுமையான மரமாக இருக்க வேண்டும். இது உங்களுக்குப் பண வரவு வருவதை குறிக்கிறது. காகத்தின் இந்த செயல் உங்களுக்கு லாபம் வருவதை காட்டுகிறது.

காய்ந்த புல்லை கொண்டு வருதல்
பித்ரு பட்சத்தின் போது காகம் தன்னுடைய அலகுகளால் காய்ந்த புல்லை எடுத்துக் கொண்டு வந்தால் உங்களுக்கு வரும் பொருளாதார ரீதியான கஷ்டத்தை காட்டுகிறது. ஆனால் உங்களுக்கு கஷ்டங்கள் வந்தாலும் விரைவில் லாபம் வரும் என்று உங்கள் முன்னோர்கள் சொல்லிச் செல்கிறார்கள்.

இடது கை பக்கம் வருதல்
பித்ரு பட்சத்தின் போது காகம் உடனே உங்கள் இடது கைப்பக்கத்தில் வந்து ஏதாவது உணவு சாப்பிட்டால் வேலை சம்பந்தமான பயணம் அனுகூலம் அடையும். தொழில் ரீதியான பயணத்தால் நன்மைகளும் வெற்றிகளும் கிடைக்கும் என்று முன்னோர்கள் ஆசிர்வதிக்கிறார்கள்.

பன்றியின் பின்னால் உட்காருதல்
பித்ரு பட்சத்தின் போது காகம் பன்றிகளின் மீது பின்னால் அமர்ந்து இருந்தால் விரைவில் நீங்கள் பணக்காரர்கள் ஆகப் போவதை குறிக்கிறது. லட்சுமி தேவி உங்களை பண மழையால் குளிப்பாட்ட போகிறாள் என்பதை காட்டுகிறது. இதே மாதிரி காகம் தானிய குவியல்களில் மீது அமர்ந்து இருந்தாலும் இந்த நன்மைகள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications