Just In
- 6 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 7 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 9 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
உங்கள் ராசிப்படி எந்த வயதில் உங்களுக்கு வெற்றிகள் குவியும் தெரியுமா?
நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் விதியை பொறுத்தே அமைகிறது. நமது விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நமது ராசியும், பிறந்தநேரமும்.
தீர்த்த யுகத்தில் மகரிஷி பிர்கு என்பவர் வாழ்ந்து வந்தார். ஜோதிடசாஸ்திரங்களில் மாமேதையான அவர் கோள்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கங்களை கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கக்கூடிய ஞானத்தை பெற்றவர். இவர் பிரபஞ்சத்தின் அழுத்தத்தை ஆன்மீகத்தை கொண்டு சரிசெய்ய இயலும் என்று நம்பினார். அதற்காக அவர் உருவாக்கிய தொகுப்புதான் பிர்கு சம்கிதா என்பதாகும்.
நாம் பிறக்கும் போதே நமது விதியானது நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. நமது வாழ்வின் ஏற்ற இறக்கங்கள் அனைத்தும் அதனை பொறுத்தே அமைகிறது. நமது விதியை நிர்ணயிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது நமது ராசியும், பிறந்தநேரமும். அதன்படி ஒவ்வொரு ராசிக்கும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நிலை திருப்புமுனையாக இருக்கும். அந்த நிலை எந்த வயதில் வேண்டுமென்றாலும் வரலாம். ஆனால் மகரிஷி பிர்குவின் குறிப்புகளின் படி எந்த ராசியினருக்கு எந்த வயதில் வெற்றிக்கான பாதை திறக்கும் என்று அறிய வாய்ப்புள்ளது. உங்கள் ராசிக்கு எந்த வயதில் வெற்றிகள் குவியும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பிர்கு சம்கிதா
முதலில் மகரிஷி பிர்கு 500,000 ஜாதகங்களை தொகுத்தார். அவர்களின் பிறப்பு, அவர்கள் வாழ்வில் நடக்கப்போகும் சம்பவங்கள், எதிர்காலம் என அனைத்தும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னாளில் இது அவரின் சீடர்களின் ஆராய்ச்சிக்கு உதவியது. இந்த குறிப்புகள் அனைத்தும் சூரியன், நிலா, செவ்வாய், ராகு, கேது போன்ற கிரகங்களின் நிலைகளை பொறுத்து கணிக்கப்பட்டது. இதனை பொறுத்து ஒருவரின் ராசியை பொறுத்து அவர்களது வாழ்க்கையில் வெற்றிக்கான பாதை எந்த வயதில் திறக்கும் என்பதை கணித்துவிடலாம்.
மேஷம்
இயற்கையிலேயே தலைமை பண்பு அதிகமுள்ள மேஷ ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் சரியான பாதையில் சென்றால் நிச்சயம் அவர்கள் முதலாளிகளாக மாறக்கூடியவர்கள். அவர்களுக்கு வெற்றியின் பாதை 16, 22, 28 மற்றும் 36ல் திறக்கும். இந்த காலகட்டங்கள் அவர்களுக்கு திருப்புமுனையாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பொறுமையும், எதார்த்தமும் மிக்கவர்கள். இவர்களால் எந்த ஒரு சூழலுக்கு ஏற்றமாறியும் உடனே மாற்றிக்கொள்ள இயலும். இவர்கள் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தி வெற்றிக்கான பாதையை திறக்கும் காலம் இவர்களின் 25,36 மற்றும் 42 வயதுகளில் ஆகும்.
மிதுனம்
இயற்கையிலேயே அதிக ஆற்றல் மிக்க நீங்கள் போரடிக்கும் சூழலில் வேலை செய்வது உங்களுக்கு ஏற்றதல்ல. அனைத்து வேலைகளையும் வேகமாக முடிக்க நினைக்கும் நீங்கள் 22, 32, 32 மற்றும் 42 வயதுகளில் அதிக வெற்றியை ருசிப்பீர்கள்.
கடகம்
12 ராசிகளிலியே அதிக அதிர்ஷ்டசாலியான ராசி என்றால் அது கடக ராசிதான். பணியிடங்களில் உங்களை போல அறிவுரைகள் வழங்க எவராலும் முடியாது. இவர்களுக்கு கிட்டதட்ட ஆறு காலகட்டங்கள் தீர்ப்புமுனையாக அமையும். இவர்கள் 16, 22, 24, 25, 28 மற்றும் 33 வயதுகளில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.
சிம்மம்
சிம்மராசிக்காரர்கள் சுதந்திரமானவர்களாகவும், மற்றவர்களுக்கு தூண்டுதலாகவும் இருப்பார்கள். வேலைகளில் நீங்கள் செலுத்தும் கவனமே உங்களுக்கான வெளிச்சத்தை பெற்றுத்தரும். குழுவாக செயல்படும்போது உங்கள் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் தங்களின் 16, 24, 26 மற்றும் 31 வயதில் வெற்றியை அதிகம் சுவைப்பார்கள்.
கன்னி
அதிக கருணை உணர்வு கொண்ட நீங்கள் எளிதில் மற்றவர்களுடன் பழகிவிடுவீர்கள். உங்கள் வேலைகளை முடிக்க மற்றவர்களின் உதவி தேவையில்லை. உங்களுக்கு 22, 24, 28, 33 மற்றும் 35 வயதுகளில் உங்களுக்கு வெற்றியின் பாதை பிரகாசமாக இருக்கும்.
துலாம்
சிறப்பான குணங்களை கொண்ட உங்களின் கூடுதல் சிறப்பே அனைவரையும் ஒன்றிணைத்து ஒரே குழுவாக செயல்படக்கூடியவர்கள். மற்றவர்களின் மனஓட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள கூடிய நீங்கள் இதனை உங்கள் எதிர்காலத்திற்காக பயன்படுத்தினால் உங்கள் எதிர்காலம் மிகச்சிறப்பாக இருக்கும். உங்களுக்கு 25, 29, 33, 35 மற்றும் 36 வயதில் வெற்றிகளின் வாய்ப்பு மிகவும் அதிகமாக இருக்கும்.
MOST
READ:
2.O
மட்டுமில்ல,
இத
பார்த்தாலும்
வாய்
பிளந்து
போய்டுவீங்க
-
#
Funny
Photos
விருச்சிகம்
உங்களுக்கு வேலை மீதும், கடமை மீதும் அதிக விசுவாசமாக இருப்பார்கள் . எந்தவித கவனச் சிதறல்களும் இன்றி நீங்கள் உங்கள் வேலையே முடிக்கக்கூடியவர்கள். உங்களுக்கு 22, 26, 30 மற்றும் 37 வயதுகளில் வெற்றியின் பாதை திறக்கும்.
தனுசு
வேலையை பொறுத்தவரையில் நீங்கள் எப்பொழுதுமே சரியாகத்தான் செயல்படுவீர்கள். விதிமுறிகளால் உங்களை கட்டுப்படுத்தாதவரை நீங்கள் சிறகை விரித்து மேலே சென்றுகொண்டே இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் சரியானதாகத்தான் இருக்கும். உங்களுக்கு 23, 29, மற்றும் 37 ஆகியவை திருப்புமுனை காலமாக அமையும்.
மகரம்
கடினமான உழைப்பாளியான நீங்கள் எப்பொழுதும் அனைத்திலும் முன்னணியில் இருக்க விரும்புவீர்கள். அதற்கான அர்ப்பணிப்பும் உங்களிடம் இருக்கும். எந்நேரமும் வேலையை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கும் நீஙகள் அதிலிருந்து சிறிது வெளியே வந்து ஆசுவாசப்படுத்தி கொள்வதும் நல்லது. உங்களுக்கு 25, 33, 36 மற்றும் 41 வயதுகளில் வெற்றிகள் குவியும்.
கும்பம்
கட்டுப்பாடுகள் இல்லாத வேலை அமைந்தால் உங்களின் வளர்ச்சி அசுரத்தனமானதாக இருக்கும். உங்களின் ஆளுமைக்காகவே எப்போதும் உங்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். நீங்கள்25, 28, 34 மற்றும் 43 வயதுகளில் எதைத்தொட்டாலும் வெற்றிதான்.
MOST READ: உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்ற சாய்பாபா கூறும் இந்த வழிகளை பின்பற்றுங்கள்
மீனம்
எதை செய்தாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்று நினைக்கும் நீங்கள் எப்பொழுதும் பிறருக்கு ஜால்ரா அடித்து முன்னேற விரும்பமாட்டீர்கள். செய்யும் வேலையை சாதுர்யமாகவும், அதேசமயம் உணர்வுபூர்வமாகவும் செய்து சாதிப்பீர்கள். 26, 28, 34, 39 ஆகிய வயதுகளில் உங்கள் அதிர்ஷ்டமும், வளர்ச்சியும் உச்சத்தில் இருக்கும்.