Just In
- 5 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 7 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 8 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 10 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
முஸ்லீம் வீடுகளில் ஏன் அதிகமா பூனை வளக்குறாங்கங்குற ரகசியம் தெரியுமா? கேட்டா ஆச்சர்யப்படுவீங்க
பொதுவாக நாம் பூனையை அபசகுனம் என்கிறோம். ஆனால் முஸ்லீம் வீடுகளில் அதிகமாக பூனை வளர்க்கப்படுவதன் ரகசியம் பற்றி இங்கே கூறப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் வீட்டில் பூனை வளர்ப்பது மிகவும் நன்மையான விஷயம் என்று கருதுகின்றனர். முகமது நபிகள் தன் வாழ்நாளில் பூனையை வளர்த்து வந்ததால் அந்த மதம் பூனையை வளர்ப்பதை பரிந்துரைக்கிறது.
இதனால் பல இஸ்லாமியர்கள் வீட்டில் செல்லப் பிராணியாக பூனையை வளர்த்து வருகின்றனர். வீட்டில் பூனையை வளர்ப்பதால் ஒரு ஆரோக்கியமான மனநிலை உண்டாவதாக நம்பப்படுகிறது.
பூனை
பூனை சுத்தத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இந்த ஒரு காரணம் அதனை வீட்டில் வளர்க்கும் மனநிலையை அனைவருக்கும் கொடுக்கிறது. மேலும், இஸ்லாம் மதத்தில் பல ஆண்டுகளாக இந்த பழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக முகமது நபிகள் பல உயிரனங்களை பராமரித்து வளர்த்து வந்ததால் இந்த கருத்து இஸ்லாமியர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. முகமது நபிகள் பின்பற்றிய பழக்கங்களை பின்பற்றுவது என்பது நல்ல பழக்கங்களை கடைபிடிக்கும் நம்பிக்கை அவர்களுக்கு உண்டாகிறது. இதனால் அவர்கள் அன்பாகவும் ஒழுக்கமாகவும் நடக்கிறார்கள் என்று நம்புகின்றனர். இதனால் கடவுளின் ஆசிர்வாதம் கிடைப்பதாகவும் கூறுகின்றனர்.
நன்மைகள்
இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, எல்லா மனிதர்களுக்கும் வீட்டில் செல்ல பிராணிகளை வளர்ப்பதால் ஒரு வித மன நலம் மற்றும் ஆன்மீக நலம் உண்டாகிறது. ஆகவே சிலர் இந்த பழக்கத்தை தமது பொழுதுபோக்காக மாற்றிக் கொள்கின்றனர். இதில் எந்த ஒரு ஆச்சர்யமும் இருப்பதில்லை. இதில் எந்த ஒரு தவறும் இல்லை. ஆகவே இதனை பொழுதுபோக்காக கொள்வதன் மூலம் பல விலங்கினங்கள் செல்லப் பிராணிகளாக வளர்ந்து வருகின்றன.
வாருங்கள் இப்போது பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பதன் நன்மைகளை பற்றி அறிந்து கொள்வோம்.
நல்ல நண்பர்கள்
பூனை அல்லது மற்ற செல்லப் பிராணிகளுடன் ஒரு நல்ல நட்பை வளர்க்க முடியும். அதனால் தான் தனியாக இருக்கும் நபர்கள் பூனையை தங்கள் நெருங்கிய நண்பனாக வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். பொதுவாக பூனை தன்னை நன்றாக கவனித்து கொள்பவரிடம் எளிதில் நெருங்கி பழகும் தன்மை கொண்ட ஒரு பிராணி. இது மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செல்லப் பிராணிகளை வேலை பார்க்கும் இடத்திற்கு கொண்டு செல்வதால் அங்கும் நல்ல நண்பர்கள் கிடைக்கலாம் மற்றும் வேலை பார்க்கும் இடத்தில் மகிழ்ச்சியான மனநிலையும் கிடைக்கும்.
மன அழுத்தம்
பூனையுடன் சிறந்த பொழுதைக் கழிப்பதால் மன அழுத்தம் குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகிறது. பூனை விளையாடுவதை மற்றும் நடிப்பதை பார்க்கும்போது உங்கள் மனநிலை மகிழ்ச்சியாக இருக்கும். ஆகவே ஆரோக்கியமான மனநிலைக்கும் அழுத்தத்தைப் போக்கவும் பூனை வளர்ப்பது நல்லது என்று நம்பப்படுகிறது.
பதட்டம்
பதட்டத்தைக் குறைக்கவும் இஸ்லாம் மத்ததில் பூனையை வளர்க்கின்றனர். மன அழுத்தம் இருக்கும் நபர்கள் எல்லா விஷயத்திற்கும் கவலை படுவார்கள். ஆகவே, வீட்டில் பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பதால் அவர்கள் இதனை வளர்ப்பதில் கவனம் செலுத்தும்போது அவர்களின் கவலை மறையும் . மன ஆரோக்கியம் அதிகரிக்கும். ஜாதிபத்திரி தேநீர் பருகுவது பதட்டத்திற்கான ஒரு சிகிச்சையாக கருதப்படுகிறது.. அதே தீர்வு பூனையை செல்லப் பிராணியாக வளர்ப்பதில் கிடைக்கிறது.
MOST READ: எந்த ராசிக்காரர்கள் இன்னைக்கு பேசாம இருக்கறது நல்லது? யார் நிறைய பேசலாம்?
ஆழ்ந்த தூக்கம்
மனதில் மகிழ்ச்சி மற்றும் மனஅழுத்தம் இல்லாமை ஆகியவை உங்கள் தூக்கத்தை மேம்படுத்த உதவும். ஆகவே இன்சொமினியா என்னும் தூக்கமின்மை என்னும் நோயைக் குணப்படுத்தவும் பூனை வளர்ப்பு உதவுகிறது. மேலும் இது தூக்கமின்மை தொடர்பாக உண்டாகும் பல வித நோயைப் போக்க உதவுவதால் உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நல்ல மனநிலை
பூனை வளர்க்கும் பழக்கம் ஒரு நல்ல மனநிலையை உருவாக்குகிறது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் காலங்களில் அவர்கள் மகிழ்ச்சியான மனநிலையை அடைகின்றனர். ஆகவே செல்லப் பிராணிகளுடன் விளையாடுவது என்பது மனநிலையை மீட்டுத் தரும் ஒரு சிறந்த மாற்றாக கருதப்படுகிறது. நாயுடன் உறங்குவதால் கூட உங்கள் மனநிலையில் நல்ல மாற்றத்தை காணலாம்.
அறிவு சார்ந்த நன்மைகள்
செல்லப் பிராணிகளை வளர்ப்பதன் மூலம் நம்மால் அவர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள முடிகிறது. அவர்களைப் புரிந்து கொள்ளவும், அவர்களை புத்திசாலித்தனமாக கையாளவும் நமக்கு ஒரு தெளிவு கிடைக்கிறது. அவர்களைப் பராமரிப்பது பற்றி நாம் அதிகம் கற்றுக் கொள்கிறோம். ஆகவே நாம் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்த பழக்கம் மிகவும் உதவியாக உள்ளது. மேலும் குழந்தைகளுக்கு பிராணிகளை வளர்க்கும் முறையை கற்றுக் கொடுப்பதால் அவர்களின் பொறுப்பு அதிகரிக்கிறது.
MOST READ: துர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா? தெரிஞ்சிக்கோங்க...
ஆரோக்கியம்
பூனை வளர்ப்பது ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது என்பது நமக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. பூனையுடன் விளையாடுவதால் சிறிது தூரம் ஓடுவதால் நமது ஆரோக்கியம் நிர்வகிக்கப்பட்டு, இதயத் துடிப்பு சீராகிறது. இதனால் நமது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன் உண்டாகிறது. உடல் சோர்வாக இருக்கும் போது ஒரு சூப் குடித்தால் கிடைக்கும் ஒரு புத்துணர்ச்சி செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிப்பதால் உண்டாகிறது.
சிறந்த உடற்பயிற்சி
பூனையை வளர்ப்பது என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். குறிப்பாக வார இறுதி அல்லது காலை வேளையில் இது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகும். வீட்டிற்கு வெளியே செல்லப் பிராணியுடன் நடைபயிற்சி மேற்கொள்வதும், பூங்காவை சுற்றி வருவதும், ஒரு சிறிய அளவு உடற்பயிற்சியாகும். இதனால் நமது உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமைகிறது.
உயர் இரத்த அழுத்தம்
நல்ல உணர்ச்சி மற்றும் நல்ல மனநிலை, கோபத்தைத் தவிர்க்க உதவும். ஹைபர் டென்ஷனை உண்டாக்கும் உயர் இரத்த அழுத்தம் கோபமின்மையால் குறைகிறது. ஹைபர் டென்ஷனைத் தடுக்கும் மாத்திரைகளை விட இது மிகவும் சிறந்தது.
வாதம்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பூனை வளர்ப்பு உதவுகிறது. சீரான இரத்த அழுத்தம் மற்றும் மகிழ்ச்சியான மனநிலை ஆகியவை சிறப்பான இரத்த ஓட்டத்தைத் தருகிறது. இதனால் இதய நோய் பாதிப்பு தடுக்கப்படுகிறது. மேலும் வாதம் போன்றவற்றிற்கான அறிகுறிகள் தடுக்கப்படுகிறது.
MOST READ: இந்த மூன்று ராசிகளுக்கும் இந்த வாரம் முழுக்க பெருத்த லாபம்... தொழிலும் ஏறுமுகம் தான்...
முக்கிய குறிப்புகள் மற்றும் பரிந்துரைகள்
பூனை அல்லது செல்லப் பிராணிகள் வளர்க்கும் பழக்கம் பல விதமான ஆன்மீக மற்றும் ஆரோக்கிய நன்மைகளைத் தரும்போதும், அதில் சில கவனிக்கத்தக்க விஷயங்கள் உள்ளன. ஆகவே கீழே குறிப்பிட்டுள்ள சிலவற்றை மனதில் கொண்டு பிராணிகளை வளர்க்கத் தொடங்கலாம்.,
1. ஒவ்வாமை பாதிப்பு அல்லது அறிகுறிகள் கொண்ட நபர்கள் செல்லப் பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். பூனை முடி சிலருக்கு ஒவ்வாமையை உண்டாக்கும். அரிப்பு அல்லது சருமத்தில் தடிப்பு போன்றவை சருமத்தில் உண்டாகும்போது சருமம் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், பூனைகளைத் தொடாமல் இருப்பது நல்லது.
2. பூனை முடி , மூச்சு விடுவதில் சிரமம் அல்லது ஆஸ்துமா போன்றவற்றை உண்டாக்கலாம். ஆகவே இத்தகைய பாதிப்பு கொண்ட நபர்கள் பூனை வளர்ப்பை தவிர்ப்பது நல்லது.
3. கர்ப்பிணிகள் பூனையை வளர்க்காமல் இருப்பது நல்லது. அல்லது பூனை சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொண்டு அதனை வளர்க்கலாம். டோக்சோபிளாஸ்மா என்னும் கிருமி பூனையில் உண்டு. இந்த கிருமி, கருச்சிதைவு, கரு பாதிப்பு ஆகியவற்றை உண்டாக்கலாம். ஆகவே கர்ப்பகாலத்தில் பூனை அல்லது பிற செல்லப் பிராணிகளிடமிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது.
மேலே கூறியவை அனைத்தும் பூனை வளர்ப்பதால் உண்டாகும் நன்மைகள் என்று இஸ்லாம் மதத்தினரால் அறியப்படுவதாகும். ஆனால் பூனையை வளர்ப்பதால் மன ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக நலம் உண்டாகிறது என்று குறிப்பாக நம்பப்படுகிறது. அதனால் பூனை வளர்ப்பை சிறந்த பொழுதுபோக்காகவும், நேரத்தை செலவிட ஒரு சிறப்பான செயலாகவும் கருதி இதனை பலரும் செய்து வருகின்றனர். எந்த ஒரு செல்லப் பிராணிகளையும் வளர்ப்பதால் ஒவ்வாமை பாதிப்பும் ஏற்படாதபட்சத்தில் இவற்றை வளர்ப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை.