Latest Updates
-
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
உங்க முகத்தில் எண்ணெய் அதிகமா வழியுதா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க! -
வெயில் காலத்தை சமாளிக்க உதவும் சுவையான வெள்ளரிக்காய் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணுங்க -
தமிழ்நாட்டில் தேர்தல் களத்தை மாற்றப்போகும் ஸ்டார் வேட்பாளர்களும் அவர்களின் தொகுதிகளும் -
வாஸ்துப்படி வீட்டின் இந்த இடங்களில் மருந்துகளை வெச்சு யூஸ் பண்ணாதீங்க, இல்ல மருத்துவ செலவு அதிகரிக்கும்! -
மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் நுங்கு சுக்கா - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நச்சுக்களை வெளியேற்றி சிறுநீரகத்தை பாதுகாக்கும் சிறந்த 5 உணவுகள் - அடிக்கடி சாப்பிடுங்க
தன்சானியா பழங்குடியினரின் வினோதமான பழக்கத்தை கொஞ்சம் படிச்சு பாருங்களேன்!
தன்சானியா பழங்குடியின மக்களிடம் ஓர் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் இருப்பதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. அது என்னவெனில், பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வது.
உலகில் பல கலாச்சாரங்கள் உள்ளன. ஒவ்வொரு கலாச்சாரம் மற்றும் பழங்குடியும் சொந்த வரையறை மற்றும் முக்கியத்துவத்தைக் கொண்டிருக்கும். அதில் சில பழங்குடியின மக்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்கள் விநோதமானதாக இருக்கும்.
அந்த வகையில் தன்சானியா பழங்குடியின மக்களிடம் ஓர் விசித்திரமான பாரம்பரிய பழக்கம் இருப்பதாக ரிபோர்ட்டுகள் கூறுகின்றன. அது என்னவெனில், பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வது. இதுக்குறித்து விரிவாக தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ
வடக்கு தன்சானியாவின் நியாமோங்கோ கிராமத்தில் உள்ள குரிய பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்வார்கள்.

உள்ளூர் பாரம்பரியம்
உள்ளூர் பாரம்பரியத்தின் படி, இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ளும் முன், ஒரு ஆணை திருமணம் செய்து குழந்தைப் பெற்றுக் கொள்வார்களாம். அதுவும் குழந்தைக்காக மட்டுமே ஆண்களை திருமணம் செய்து கொள்வார்களாம்.

திருமணமான தம்பதிகள்
இந்த பழங்குடியின பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து கொண்ட பின், ஒரே வீட்டில் தான் வாழ்ந்து வருவார்களாம். இந்த பழங்குடியினருக்கு ஓரினச் சேர்க்கையாளர்களைப் பற்றி தெரியாது. ஆகவே உடலுறவில் ஈடுபடமாட்டார்களாம்.

பெண்கள் தான் தனக்கான ஆணை தேர்ந்தெடுப்பார்கள்
இந்த பழங்குடியினரின் வழக்கப்படி, பெண்கள் தனக்கான ஆண் துணையைத் தேர்ந்தெடுப்பார்களாம். அதுவும் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே. குழந்தை பிறந்த பின், ஆண்களும் தந்தைக்கான உரிமையை எடுத்துக் கொள்ளாமல் விட்டு சென்றுவிடுவார்களாம். பின் பெண்கள் மற்ற பெண்களை திருமணம் செய்து, இருவரும் சேர்ந்து குழந்தையை வளர்ப்பார்களாம்.

ஏன் இப்படி ஒரு பழக்கம்?
இந்த பழங்குடியினர் இப்படியொரு பழக்கத்தைக் கொண்டிருப்பதற்கு காரணம், சொத்து தன்னை விட்டு செல்லக்கூடாது என்பதற்காகவாம். ஒருவேளை குழந்தை இல்லாத பெண்கள், தன் சொத்தை பாதுகாப்பதற்கு மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் கூறுகின்றனர். என்ன ஒரு வினோதமான பழக்கம் என்று பாருங்கள்.



Click it and Unblock the Notifications











