Latest Updates
-
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...!
சித்திரா பௌர்ணமி சிறப்புகளும், இன்று வீட்டில் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களும்!
சிவனுக்கு உகந்த சிறந்த விரத நாளான சித்திரா பௌர்ணமி நாளை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சிறப்புகள்!
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு, விரதமிருந்து சிவனை தொழும் நாளாகும்.
பௌர்ணமி சிறப்பெனில், சித்திரா பௌர்ணமி சிறப்பகளுக்கு எல்லாம் சிறப்பு என கூறலாம். இனி, இங்கு சித்திரா பௌர்ணமி பற்றி சில சிறப்பு தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

திருவண்ணமாலை!
திருவண்ணாமலையில் பொதுவான பௌர்ணமி தினங்களை காட்டிலும் சித்திரா பௌர்ணமி நாட்களில் 10 - 15 மடங்கு கூட்டம் அதிகமாக வரும்.
இதுப்போல இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளன்று மலையில் தீபம் ஏற்றும் போதும் கூட்டம் பலமடங்கு அதிகமாக வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை கும்பிட்டு பலன் பெறுகின்றனர்.

மதுரை!
ஆண்டுதோறும் மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இது திருவிழா போல நடக்கும்.

காளிகாம்பாள் கோயில்!
சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாலை 6 மணிக்கு 200-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் பூஜை நடைபெறுமாம்.

சைவர்கள்!
சித்திரா பௌர்ணமி நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில் மற்றும் புனித இடங்களில் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி அளித்து வந்தார்கள் என கூறப்படுகிறது.

பொங்கல்!
சித்திரா பௌர்ணமி அன்று , முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த கால விழாவைக் கொண்டாடினர் என்ற கூற்றுகளும் அறியப்படுகின்றன.

சிவன்!
சித்திரா பௌர்ணமி ஆனது, காலப்போக்கில் சிவனுடைய சிறப்பு விழாவாகவும், இறந்த தாயாருக்கு தர்ப்பணம் அளிக்கும் தினமாகவும் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

தர்ப்பணம்!
அன்னை உயிருடன் இல்லாத ஆண்கள் எல்லாரும் அதிகாலை சீக்கிரம் எழுந்து குளம் அல்லது ஆறுகளுக்கு சென்று நீராடி இறந்த அன்னைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிறகு வந்து, தாயார் அன்னைக்கு பூஜை செய்து உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications











