Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சித்திரா பௌர்ணமி சிறப்புகளும், இன்று வீட்டில் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களும்!
சிவனுக்கு உகந்த சிறந்த விரத நாளான சித்திரா பௌர்ணமி நாளை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சிறப்புகள்!
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு, விரதமிருந்து சிவனை தொழும் நாளாகும்.
பௌர்ணமி சிறப்பெனில், சித்திரா பௌர்ணமி சிறப்பகளுக்கு எல்லாம் சிறப்பு என கூறலாம். இனி, இங்கு சித்திரா பௌர்ணமி பற்றி சில சிறப்பு தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

திருவண்ணமாலை!
திருவண்ணாமலையில் பொதுவான பௌர்ணமி தினங்களை காட்டிலும் சித்திரா பௌர்ணமி நாட்களில் 10 - 15 மடங்கு கூட்டம் அதிகமாக வரும்.
இதுப்போல இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளன்று மலையில் தீபம் ஏற்றும் போதும் கூட்டம் பலமடங்கு அதிகமாக வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை கும்பிட்டு பலன் பெறுகின்றனர்.

மதுரை!
ஆண்டுதோறும் மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இது திருவிழா போல நடக்கும்.

காளிகாம்பாள் கோயில்!
சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாலை 6 மணிக்கு 200-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் பூஜை நடைபெறுமாம்.

சைவர்கள்!
சித்திரா பௌர்ணமி நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில் மற்றும் புனித இடங்களில் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி அளித்து வந்தார்கள் என கூறப்படுகிறது.

பொங்கல்!
சித்திரா பௌர்ணமி அன்று , முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த கால விழாவைக் கொண்டாடினர் என்ற கூற்றுகளும் அறியப்படுகின்றன.

சிவன்!
சித்திரா பௌர்ணமி ஆனது, காலப்போக்கில் சிவனுடைய சிறப்பு விழாவாகவும், இறந்த தாயாருக்கு தர்ப்பணம் அளிக்கும் தினமாகவும் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

தர்ப்பணம்!
அன்னை உயிருடன் இல்லாத ஆண்கள் எல்லாரும் அதிகாலை சீக்கிரம் எழுந்து குளம் அல்லது ஆறுகளுக்கு சென்று நீராடி இறந்த அன்னைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிறகு வந்து, தாயார் அன்னைக்கு பூஜை செய்து உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications