Latest Updates
-
நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க -
கடும் வெயில்ல வீடு ஜில்லுனு இருக்கணுமா? இந்த 5 வாஸ்து மாற்றங்களை செஞ்சா போதும், மின்சார கட்டணமும் குறையும்! -
நாவூறும் உருளைக்கிழங்கு பிரியாணி ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - மட்டன் பிரியாணியே தோத்துரும் -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
தேங்காய் சட்னி அரைக்கும் போது ஒருவாட்டி மாங்காய் சேத்து இப்படி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம்
சித்திரா பௌர்ணமி சிறப்புகளும், இன்று வீட்டில் செய்ய வேண்டிய நல்ல விஷயங்களும்!
சிவனுக்கு உகந்த சிறந்த விரத நாளான சித்திரா பௌர்ணமி நாளை பற்றி நீங்கள் அறிந்துக் கொள்ள வேண்டிய சிறப்புகள்!
சித்திரா பௌர்ணமி என்பது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டு, விரதமிருந்து சிவனை தொழும் நாளாகும்.
பௌர்ணமி சிறப்பெனில், சித்திரா பௌர்ணமி சிறப்பகளுக்கு எல்லாம் சிறப்பு என கூறலாம். இனி, இங்கு சித்திரா பௌர்ணமி பற்றி சில சிறப்பு தகவல்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

திருவண்ணமாலை!
திருவண்ணாமலையில் பொதுவான பௌர்ணமி தினங்களை காட்டிலும் சித்திரா பௌர்ணமி நாட்களில் 10 - 15 மடங்கு கூட்டம் அதிகமாக வரும்.
இதுப்போல இங்கு கார்த்திகை பௌர்ணமி நாளன்று மலையில் தீபம் ஏற்றும் போதும் கூட்டம் பலமடங்கு அதிகமாக வந்து கிரிவலம் சென்று அண்ணாமலையாரை கும்பிட்டு பலன் பெறுகின்றனர்.

மதுரை!
ஆண்டுதோறும் மதுரையில் சித்திரா பௌர்ணமியன்று கள்ளழகன் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இது திருவிழா போல நடக்கும்.

காளிகாம்பாள் கோயில்!
சென்னை காளிகாம்பாள் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாலை 6 மணிக்கு 200-க்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு திருவிளக்கு ஏற்றும் பூஜை நடைபெறுமாம்.

சைவர்கள்!
சித்திரா பௌர்ணமி நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில் மற்றும் புனித இடங்களில் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி அளித்து வந்தார்கள் என கூறப்படுகிறது.

பொங்கல்!
சித்திரா பௌர்ணமி அன்று , முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த கால விழாவைக் கொண்டாடினர் என்ற கூற்றுகளும் அறியப்படுகின்றன.

சிவன்!
சித்திரா பௌர்ணமி ஆனது, காலப்போக்கில் சிவனுடைய சிறப்பு விழாவாகவும், இறந்த தாயாருக்கு தர்ப்பணம் அளிக்கும் தினமாகவும் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர்.

தர்ப்பணம்!
அன்னை உயிருடன் இல்லாத ஆண்கள் எல்லாரும் அதிகாலை சீக்கிரம் எழுந்து குளம் அல்லது ஆறுகளுக்கு சென்று நீராடி இறந்த அன்னைக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.
பிறகு வந்து, தாயார் அன்னைக்கு பூஜை செய்து உணவு படைத்து பின்னர் குடும்பத்துடன் உணவு சாப்பிட வேண்டும்.



Click it and Unblock the Notifications