Just In
- 1 min ago
இந்த சைவ உணவுகளால் உங்கள் ஆயுள் குறையும் ஆபத்து அதிகரிக்கிறதாம்... ஜாக்கிரதையா சாப்பிடுங்க...!
- 18 min ago
பெண்களே! உங்க கணவன் ரொம்ப சந்தோஷமா இருக்க நீங்க என்ன பண்ணனும் தெரியுமா?
- 1 hr ago
இந்த உணவுகளை மாம்பழத்துடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. இல்லன்னா அது கோமாவுக்கே கொண்டு போயிடும்..
- 1 hr ago
இஞ்சி சாப்பிடுவது என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்தும் தெரியுமா?யாரெல்லாம் இஞ்சி சாப்பிடக்கூடாது தெரியுமா?
Don't Miss
- Sports
"யாருப்பா நீ விநோதமா பண்ற" விராட் கோலிக்காக ரசிகர் செய்த விஷயம்.. இதை சரியா கவனிச்சீங்களா??
- News
வசமா மாட்டிக்கிச்சு.. "தூண்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பேருந்து"- இப்படியா பஸ் ஸ்டாண்ட் கட்டுவீங்க?
- Movies
கோபியை வெளியில் துரத்திய ராதிகா... புலம்பலில் கோபி.. அடுத்தடுத்த ட்விஸ்ட்டில் பாக்கியலட்சுமி தொடர்
- Technology
பிளிப்கார்ட் எலக்ட்ரானிக் விற்பனை 2022: முக்கிய ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடி!
- Automobiles
12 நகரங்களில் மட்டுமே இந்த எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கிடைக்கும்... என்னங்க இப்படி ஒரு குண்ட போட்டுட்டாங்க!
- Finance
இந்தியாவில் இ-காமர்ஸ் வணிகம்: பேச்சுவார்த்தையை தொடங்கியது கூகுள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இப்ப புதுசா நடிகை தீபிகா படுகோனேவின் வாழ்வில் நுழைந்தது யார் தெரியுமா?
மாடலிங்கில் தனது வாழ்க்கையை ஆரம்பித்து, பாலிவுட் திரையுலகில் மிகவும் கஷ்டப்பட்டு நுழைந்தவர் தான் தீபிகா படுகோனே. ஆரம்ப காலத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தவர், தற்போது உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளுள் ஒருவராகியுள்ளார். மேலும் பாலிவுட்டில் தன் திறமையைக் காட்டி கலக்கியதோடு, ஹாலிவுட்டிலும் தனது முத்திரையை பதித்தவர்.
இவர் சமீபத்தில் நடித்து வெளிவந்த ஹாலிவுட் திரைப்படமான XXX படத்தை நடித்த பின்பு, என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற கேள்வி பலரது மனதிலும் எழுந்திருக்கும். தீபிகா படுகோனேவின் வாழ்வில் அடுத்ததாக ஒரு பெரிய விஷயம் நடக்கவிருக்கிறது. அதுவும் ஒரு மொபைல் போனால்.
என்ன புரியவில்லையா? சீன மொபைல் தயாரிப்பாளரான ஒப்போ நிறுவனம், மார்ச் மாதம் 23 ஆம் தேதி வெளியிடவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் புதிய பிராண்ட் அம்பாஸிடராக தீபிகா படுகோனேவை தேர்ந்தெடுத்துள்ளது.
பொதுவாக ஒப்போ போன் அதன் செல்ஃபீ சிறப்பம்சத்தால் மிகவும் பிரபலமாகியுள்ளது. இதுவரை இந்த ஒப்போ வெளியிட்ட போன்களுக்கு பல பாலிவுட் பிரபலங்கள் பிராண்ட் அம்பாஸிடராக இருந்தனர்.
முதன்முதலில் வெளிவந்த ஒப்போ F1 போனின் பிராண்ட் அம்பாஸிடராக ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சோனம் கபூர் வந்தனர். இந்த போனின் செல்ஃபீ சிறப்பம்சத்தால், மார்கெட்டில் கொடிகட்டி பறந்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
நடிகைகளான ஏமி ஜாக்சன் மற்றும் தமன்னா மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் போன்றோர் ஒப்போ F1S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக வந்தனர். இந்த ஃபோனின் கேமராவின் தரம் அருமையாக இருப்பதோடு, கூடுதலாக இதில் 64GB ROM மற்றும் 4GB RAM கொண்டிருந்தது. இந்திய மொபைல் மார்கெட்டிலேயே இவ்வளவு சிறப்பம்சம் கொண்டு வெளிவந்த முதல் போன் இது தான்.
அடுத்ததாக ஒப்போ F1 S ஸ்மார்ட்போனின் பிராண்ட் அம்பாஸிடர்களாக நடிகை பிபாசா பாசுவும், அவரது கணவர் கரண் சிங் க்ரோவரும் வந்தனர்.
தற்போது புதிதாக வெளிவரவுள்ள ஒப்போ F3 ப்ளஸ் போனின் பிராண்ட் அம்பாஸிடராக நடிகை தீபிகா படுகோனே வரவுள்ளார். இந்த போனின் சிறப்பம்சம் டியூயல் செல்ஃபீ கேமரா மட்டுமின்றி, 5 நிமிடம் சார்ஜ் செய்தாலே 2 மணிநேரம் பேசக்கூடிய தனித்துவமான VOOC சார்ஜ் கொண்டது.
நிச்சயம் தீபிகா படுகோனேவால் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போன், மக்களிடையே மேன்மேலும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த போன் பற்றிய வீடியோவைப் பார்க்க, கீழே கிளிக் செய்யுங்கள்:
https://www.youtube.com/watch?v=NfIYcJg2Z3k