Latest Updates
-
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
கர்நாடகா பேமஸ் குடைமிளகாய் தக்காளி சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
ஒருவரை விரைவில் மரணம் நெருங்கப் போகிறது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்!
இங்கு ஒருவருக்கு விரைவில் மரணம் நேரப் போகிறது என்பதை உணர்த்துவதாக சொல்லப்படும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பிறப்பு என்ற ஒன்று இருந்தால், நிச்சயம் இறப்பும் இருக்கும். நமது புராணங்கள், வேதங்கள் அல்லது சாஸ்திரங்கள், ஒருவரை மரணம் நெருங்கிறது என்றால் அது நிச்சயம் ஒருசில அறிகுறிகளை முன்பே வெளிக்காட்டும் என்று சொல்கிறது. அதிலும் ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படும் என்று சொல்கிறது.
இங்கு ஒருவருக்கு விரைவில் மரணம் நேரப் போகிறது என்பதை உணர்த்துவதாக சொல்லப்படும் சில அறிகுறிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைக் கொஞ்சம் படித்துப் பாருங்கள்.

அறிகுறி #1
யாரால் துருவ நட்சத்திரங்களைக் காண முடியவில்லையோ, அவர்கள் கூடிய விரைவில் இவ்வுலகை விட்டு செல்லப் போகிறார்கள் என வேத வசனங்கள் கூறுகின்றன.

அறிகுறி #2
ஒருவர் சூரியனைக் காணும் போது, அதில் திரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு உருவத்தைக் கண்டால், மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். அதில் இத்தகையவர்கள் 11 மாதங்களில் இறந்துவிடுவார்கள் என்றும் வேத வசனங்கள் கூறுகின்றன.

அறிகுறி #3
மணலில் ஒருவர் நடந்து செல்லும் போது, பாத சுவடுகள் முழுமையாகாமல் இருந்தால், அத்தகையவர்கள் 7 மாதங்களில் உலகை விட்டு சென்று விடுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாம்.

அறிகுறி #4
கழுகு அல்லது காகம் ஒருவரது தலையில் அமர்ந்தாலோ அல்லது உரசினாலோ, துக்க காரியம் நடக்கப் போகிறது என்ற அர்த்தம். அதுவும் அத்தகையவர்கள் 6 மாதத்திற்குள் இறக்க வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #5
புராணங்களின் படி, ஒருவரது கண்களுக்கு தன்னைச் சுற்றி ஒரு திரிக்கப்பட்ட உருவத்தைக் கண்டால், அவர்கள் 4- மாதங்களில் உலகை விட்டு சென்றுவிடுவார்களாம்.

அறிகுறி #6
மழை வருவதற்கான அறிகுறி ஏதுமின்றி, ஒருவர் மின்னலைக் கண்டால், அவர்கள் 2-3 மாதங்களில் இறந்து விடுவதற்கான வாய்ப்புள்ளதாக வேத வசனங்கள் கூறுகின்றன.

அறிகுறி #7
ஒருவரது பாதம் குளித்த உடனேயே வறட்சி அடைந்துவிட்டால், அத்தகையவர்கள் அடுத்த 10 நாட்களில் இறந்துவிடும் வாய்ப்புள்ளதாம்.

அறிகுறி #8
விளக்கு அணையும் போது, அதிலிருந்து வரும் வாசனையை நுகர முடியாவிட்டால், அவர்கள் இவ்வுலகில் இன்னும் சில காலம் மட்டுமே வாழ்வார்களாம்.



Click it and Unblock the Notifications











