Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா?
இங்கு அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி கூறப்பட்டுள்ளது
வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம்.
இப்படி வீட்டில் அல்லது கோவிலில் பூஜைக்கு கொடுத்த தேங்காய் அழுகிய நிலையில் இருந்தால் அபசகுனம் என சிலர் கூறுவார்கள். உண்மையிலேயே அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி இங்கு காணலாம்...

மூன்று கண்கள்!
தேங்காயில் மூன்று கண்கள் இருக்கும். இதில் முதல் கண் பிரம்மன், இரண்டாம் கண் லக்ஷிமி, மூன்றாம் கண் சிவனாக போற்றப்படுகிறது.

சகுனம்!
தேங்காய் மூலமாக உள்ளத்தின் சுத்தம் வெளிப்படும் என்ற கருத்து நிலவுகிறது. அழுகிய தேங்காய், தேங்காய் கோணலாக உடைவது, சிதறு தேங்காய் போடும் போது சுக்குநூறாக உடைவது, தேங்காயில் பூ வருவது என பலவன நாம் நல்ல, தீய சகுனமாக பிரித்து பார்க்கிறோம்.

குழப்பம்!
தேங்காய் உடைக்கும் போது அது அழுகிய நிலையில் இருந்தால் ஆன்மிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு அது ஏமாற்றத்தை, கலக்கத்தை ஒரு மன குழப்பத்தை அளிக்கும். இதை ஒரு அபசகுனமாக பார்பார்கள்.

சந்தோஷம் தான்!
ஆனால், உடைக்கும் போது அழுகிய தேங்காய் வருவது நல்ல அறிகுறி என்றும். உங்களை அண்டி இருக்கும் தீய சக்திகள், பீடை, கண்திருஷ்டி போன்றவை அகன்று போகிறது என்பதன் நல்ல அறிகுறி தான் இது என கூறப்படுகிறது.

கொப்பரை!
நீங்கள் உடைக்கும் தேங்காய் கொப்பரையாக இருந்தால் உங்களுக்கு, உங்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க வாய்ப்புகள் இருக்கிறது.

தேங்காயில் பூ!
நீங்கள் உடைக்கும் தேங்காயில் பூ இருந்தால் உங்களுக்கு பணவரவு, நல்ல லாபம், எதிர்பாராத நல்லவை நடக்கும் என்பதை குறிக்கும் சகுனமாக காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications