Latest Updates
-
வெயிலை சமாளிக்க உதவும் சுவையான தர்பூசணி தோல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
கொளுத்தும் வெயிலால் உங்கள் முடி உடையாமல், கொட்டாமல் இருக்க இந்த எளிய உணவுகளை சாப்பிடுங்க -
வாஸ்து படி இந்த 5 இடங்களில் கடிகாரத்தை மாட்டுவது உங்களை துரதிர்ஷ்டசாலியாக மாற்றுமாம் -
புதன்-சூரியன் உருவாக்கும் புதாதித்ய யோகத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பிரியாணியை விட சூப்பரா இருக்கும் தக்காளி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
150 ஆண்டுக்கு மேல் வாழும் பாகிஸ்தானின் ரகசிய இனக்குழு பெண்கள் - இவர்களின் நீண்ட ஆயுளின் ரகசியம் என்ன தெரியுமா? -
கோதுமை ரவா பொங்கலும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குதூகலமான நாளாக இருக்குமாம் -
30 ஆண்டுகள் கழித்து ஒன்றிணையும் சனி-செவ்வாய்: மே 10 வரை இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
குருபகவான் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
தமிழக முதல்வராகப் போகும் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள்!
இங்கு தமிழக முதல்வராகப் போகும் எடப்பாடி பழனிச்சாமி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
தமிழக அரசியலில் யாரும் சற்றும் எதிர்பார்க்காத அளவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதுவரை யார் தமிழக முதல்வராவார் என்ற கேள்வியுடன் பரபரப்பாக இருந்த தமிழகத்திற்கு முடிவு வந்துவிட்டது. இதுவரை நம்மில் பலரும் ஓ.பன்னீர் செல்வம் அல்லது சசிகலா தான் முதல்வராவர் என்று நினைத்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் சசிகலா 4 வருட சிறை தண்டனையைப் பெற்ற பின், அரசியலில் 10 வருடம் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி ஒரு தீர்ப்பு வந்த பின்பு, பலரும் ஓ.பன்னீர் செல்வம் தான் முதல்வராவார் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, புதிதாக தமிழக ஆளுநர் அவர்கள் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்துள்ளார்.
தமிழக முதல்வராகப் போகும் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றிய சில தகவல்கள் உங்கள் பார்வைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தகவல் #1
எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி நகரில் உள்ள நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு 63 வயதாகிறது. இவர் 1980ஆம் ஆண்டு அதிமுக-வில் இணைந்தார்.

தகவல் #2
எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 4 முறை எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு, சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தகவல் #3
எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவிற்குப் பின், ஜெயலலிதா அதிமுக-வில் பயணம் மேற்கொள்ள மிகவும் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி ஆவர்.

தகவல் #4
கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா அவர்கள் வலுவாக இருப்பதற்கு எடப்பாடி பழனிச்சாமியும் ஓர் காரணம். ஏனெனில் எடப்பாடி பழனிச்சாமி கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்.

தகவல் #5
ஜெயலலிதாவின் ஆட்சி காலத்தில் அமைச்சர்கள் மாற்றப்பட்ட போதிலும், ஒருபோதும் மாற்றப்படாத அமைச்சர்களில் எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவராவார்.

தகவல் #6
ஜெயலலிதாவின் நம்பத்தகுந்த விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, அவரது மறைவுக்குப் பின் முதல்வர் பதவியை சசிகலா தான் ஏற்க வேண்டும் என்று முதலில் கூறியவரும் இவரே.

தகவல் #7
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அதிமுகவின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











