Just In
- 34 min ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 1 hr ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- 1 hr ago புற்றுநோய், இதய நோய் அபாயத்தை குறக்கனுமா? இதோ இந்த பழங்களை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
Don't Miss
- Technology நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- News மயிலாடுதுறையில் ஆச்சரியம்.. அந்த "வைக்கோல் மூட்டை".. ஆஹா, வைத்தீஸ்வரன் கோயில் தையல் நாயகி.. பரவசம்
- Automobiles கியா களமிறக்கும் புது எலெக்ட்ரிக் காரின் விலை இவ்ளோதானா! பெட்டி கடைல கடலை மிட்டாய் விக்கற மாதிரி விக்க போகுது!
- Movies Pandian stores 2: குமரனை சம்பவம் செய்ய ஒன்றுசேரும் சகோதரர்கள்.. தடுக்க பரிதவிக்கும் பழனிவேல்!
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திடீர் அரசியல் திருப்பங்களால் தமிழக முதல்வர் அரியணை ஏறியவர்கள்!
இங்கு திடீர் அரசியல் மாற்றங்களால் தமிழக முதல்வர்கள் ஆனவர்கள் பற்றி கூறப்பட்டுள்ளது.
இவருக்கு பிறகு இவர் தான் தமிழக முதல்வர் ஆவார் என சிலரின் பெயர் அடிப்படும். ஆனால், சில இடங்களில் குடும்ப அரசியல் காரணத்தால் வாரிசுகள் முதல்வர் பதவிக்கு வருவார்கள்.
ஆனால், தமிழக அரசியல் வரலாற்றில் சில நேரங்களில் முதல்வர் ஆகவேண்டும் என்ற எண்ணமே இல்லாதவர்களும் கூட சூழ்நிலை சந்தர்ப்பத்தால் முதல்வர் பதவி வகித்துள்ளனர்...
வி.ஆர்.நெடுஞ்செழியன்
தி.மு.க-வில் இருந்த போது அறிஞர் அண்ணாவின் இறப்பின் போதும், அ.தி.மு.க-வில் இருந்த போது எம்.ஜி.ஆர்-ன் எதிர்பாராத இறப்பின் போதும் அவசர நிலை முதல்வராக அரியணை ஏறியவர் வி.ஆர். நெடுஞ்செழியன்.
எம்.ஜி.ஆர்!
தி.மு.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, தனது சக்தியை நிரூபிக்க அ.தி.மு.க புரட்சியின் பலனாய் தொடர்ந்து முதல்வர் அரியணையை பத்து வருடங்கள் அலங்கரித்தவர் எம்.ஜி.ஆர்.
ஜானகி ராமச்சந்திரன்!
எம்.ஜி.ஆர். அரசியலில் முழுவீச்சில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போது, அந்த நிழல் கூட தன மீது படாமல் இருந்தவர் ஜானகி. 1984-ல் எம்.ஜி.ஆர் உடல்நல கோளாறுகளால் அவதிப்பட்டு வந்ததால், அவருடன் பொது நிகழ்சிகளுக்கு சென்று வந்தார். எம்.ஜி.ஆர்-ன் மறைவுக்கு பிறகு கட்சி ஜானகி முதல்வராக அரியணை ஏறினார். ஆனால், சட்டப்பேரவையில் இவர் மீது நம்பிக்கை தீர்மானம் தோல்வி அடைந்ததால் பதவி இழந்தார்.
ஜெயலலிதா!
எம்.ஜி.ஆர் இறப்பிற்கு பிறகு அ.தி.மு.க ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிளவுப்பட்டு போனது. அப்போது சட்டசபையில் ஜெயலலிதாவை சேலையை பிடித்து இழுத்து, முடியை இழுத்து அடித்து கொடுமைப்படுத்தினர். பிறகு இனி முதல்வராக தான் இங்கு வருவேன் என சபதம் ஏற்று 1991-ல் முதல்வராக அரியணை ஏறினார் ஜெயலலிதா.
ஓ. பன்னீர்செல்வம்!
டான்சி வழக்கு காரணத்தால் சுப்ரீம் கோர்ட் ஜெயலலிதா முதல்வர் பதிவியில் நீடிக்க முடியாத சூழல் நிலவியதால், செப்டம்பர் 2001-ல் திடீர் முதல்வராக அரியணை ஏறினார் ஓ. பன்னீர்செல்வம்!
எடப்பாடி பழனிசாமி!
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர் செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். பிறகு சசிகலா முதல்வராக நினைத்த போது அவர் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றதால், எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகம் தேர்வு செய்ததால் திடீரென முதல்வர் அரியணை ஏறினார்.