Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 17 முதல் சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களை சோதிக்க போகிறார்! ரெடியா இருங்க -
வாஸ்துப்படி, நைட் தூங்கும் முன் மறக்காம இந்த 3 விஷயங்களை செய்யுங்க.. செல்வம் பெருகும்! -
தமிழ் புத்தாண்டு நாளில் சுக்கிரனால் உருவாகும் ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பணம் பெருகும், தொழில் வளரும்! -
வெயிலால் கருமையான சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப நடிகை வைஷ்ணவியின் ஃபேஸ் பேக்கை போடுங்க! -
மணமணக்கும் கல்யாண வீட்டு ரசம் - சிம்பிளா எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.! -
பலரும் அறியாத இந்திய மசாலா பொருட்களும், அவற்றின் ஆரோக்கிய நன்மைகளும்.! -
அட்சய திருதியை நாளில் உருவாகும் அட்சய யோகம்: குபேரன் அருளால் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
கோடை வெயிலுக்கு ஏற்ற சுரைக்காய் சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றியாக மாறுமாம் -
சுக்கிரன்-சூரியன் உருவாக்கும் சுக்ராதித்ய யோகத்தால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள்
உலகில் இருக்கும் சில சைகோ பெண் கொலையாளிகள்!
சைகோ கொலையாளிகளைப் பற்றி பலரும் கேள்விப்பட்டிருப்போம். மேலும் சைகோ கொலையாளி என்றால் அது ஓர் ஆணாகத் தான் இருக்க முடியும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் சைகோ பெண் கொலையாளிகளும் உலகில் உள்ளனர்.
இக்கட்டுரையில் உலகில் உள்ள சில சைகோ பெண் கொலையாளிகள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட பட்டியலில் உள்ள சைகோ பெண் கொலையாளிகளுள் சிலர் பார்க்க ஒன்றும் தெரியாதவர்கள் போலும் மற்றும் சிலர் பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்துபவர்களாகவும் இருப்பர்.
இவர்கள் எத்தனை பேரைக் கொன்று குவித்துள்ளார்கள் என்பதை கேட்டால், நீங்களே அதிர்ச்சி அடைவீர்கள். சரி, இப்போது உலகில் இருக்கும் சைகோ பெண் கொலையாளிகள் பற்றி காண்போமா!!!

சிரிக்கும் பாட்டி
ஓக்லஹோமாவைச் சேர்ந்த இப்பெண், மிகவும் நட்புள்ளவராகவும், நல்ல மனைவியாகவும், நல்ல பெற்றோராகவும், அனைவரிடமும் நன்கும் பழகி வந்தனர். ஆனால் இப்பெண் 11 பேர் அடங்கிய தன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தனியாக கொன்று குவித்தார் என்றார் பாருங்கள். அதிலும் இப்பெண் அர்சனிக் என்னும் விஷத்தைப் பயன்படுத்தி, தன் 5 கணவர்களையும், தன் குழந்தைகளையும் மற்றும் பேரக் குழந்தைகளையும் கொன்றுள்ளார்.
Image Courtesy

ஏய்லென் வோர்னாஸ்
ஏய்லென் வோர்னாஸ் ஓர் உண்மையான அரக்கி எனலாம். இவர் தன் தாத்தாவினாலும், நண்பர்களாலும் தன் சொந்த சகோதரனாலும் பலாத்காரம் செய்யப்பட்டார். இதனாலோ என்னவோ, இப்பெண் நிறைய ஆண்களை கொலை செய்து வருகிறார்.
Image Courtesy

டோரோதியா
இவர் கலிபோர்னியாவில் முதியோர் இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் உடல் மற்றும் மன வளர்ச்சி குன்றிய வயதானவர்களை பார்த்துக் கொள்வதில் நல்லவர். இத்தகைய பெண் முதியவர்களுக்கு காசோலைகள் வந்த பின், அவர்களை கொன்று, அவர்களது உடலை முதியோர் இல்லத்தின் அடியில் ஒரு எடுபிடி ஆளை வைத்துக் கொண்டு மறைத்து வந்திருந்தார். ஒருநாள் அந்த எடுபிடி ஆள் திடீரென்று காணாமல் போய்விட்டார்.
Image Courtesy

ரோஸ்மேரி வெஸ்ட்
சாதுவாக தோற்றமளிக்கும் இப்பெண் ஒரு லெஸ்பியன். இப்பெண் 10 பெண்களுடன் உறவில் இருந்ததோடு, அவர்களை கொலை செய்து யாருக்கும் தெரியாதவாறு மறைத்துள்ளார். இவர் தற்போது சிறையில் இருந்தாலும், அந்த சடலங்களைப் பற்றி எதுவும் வெளியே சொல்லவில்லை.
Image Courtesy

பெல்லி சோரன்ஸன்
இவர் தான் இருப்பதிலேயே மிகவும் மோசமான சைகோ பெண் கொலையாளி. இவர் தனது 2 கணவர்களையும், தனது 2 குழந்தைகளையும் கொலை செய்துள்ளார். இதற்கு காரணம் என்னவென்றால் ஆயுள் காப்பீடு பணத்தின் மீதுள்ள மோகம் தான். மேலும் இவர் சுமார் 25-40 பேரை பல காரணங்களுக்காக கொலை செய்து மறைத்துள்ளார்.
Image Courtesy

மேரி ஆன் காட்டன்
இப்பெண்ணிற்கு தன் கண் முன் ஒருவர் இறப்பதைக் காண்பது என்பது சந்தோஷமாக இருக்குமாம். இதனால் இப்பெண் தன் குடும்பத்தைச் சேர்ந்த 21 பேரை, அதாவது 4 கணவர்கள் மற்றும் டஜன் கணக்கில் குழந்தைகள் மற்றும் ரகசியக் காதலன் என அனைவரையும் கொன்றுள்ளார். இதற்கு காரணமும் ஆயுர் காப்பீட்டு பணத்தைப் பெறத் தான் என்றும் இவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
Image Courtesy



Click it and Unblock the Notifications











