Latest Updates
-
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள் -
மீந்து போன இட்லி இருந்தா இந்த மாதிரி மசாலா சேர்த்து மசாலா இட்லி செய்யுங்க - சூப்பர் டிபனா இருக்கும் -
Telegram ஆப் இந்தியாவில் தடைசெய்யப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன தெரியுமா? எத்தனை நாள் தடை தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் கூட்டு செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
சுக்கிரன்-சந்திரன் உருவாக்கும் கலாத்மகா யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் தக்காளி கார சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மன அழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
நாகரீக தோற்றத்தின் பிறப்பிடமாக திகழ்ந்த சிந்து சமவெளி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!!
மனித இனத்தின் பெரும் புரட்சியாகவும், எழுச்சியாகவும் கருதப்படுவது சிந்து சமவெளி. நாகரீகம் வளர்க்கப்பட்ட இடமென்றும், பண்டையக் காலத்தில் தோன்றிய முதன்மை நாகரீக குடிகளில் சிந்து சமவெளியும் ஒன்றென்பது குறிப்பிடத்தக்கது.
மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!
வெறுமென நாகரீகம் மட்டுமின்றி பல கண்டுப்பிடிப்புகளையும், வாழ்வியல் முறை மாற்றங்களையும் கொண்டு வந்த பெருமை சிந்து சமவெளிக்கு இருக்கின்றது.
சிற்றின்ப கலையை சித்தரித்துக் காட்டும் இந்திய கோயில்கள்!!!
மனிதனின் பல தொழில் முறைகள் கருவுற்ற இடம் என்பது., சிந்து சமவெளியின் சிறப்பு ஆகும். மனிதனின் வாழ்வியல் முறையில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்த சிந்து சமவெளி பற்றி நீங்கள் அறிந்திராத அரிய சுவாரஸ்ய விஷயங்கள் குறித்து இனிப் பார்க்கலாம்...

5 மில்லியன் மக்கள்
சிந்து சமவெளி நாகரீக குடியில் 5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்பது, அறிவியல் கூற்றுகள். அந்த காலத்தில் இந்த எண்ணிக்கை மிகவும் பெரிது என்பது குறிப்பிடத்தக்கது.

3 நாடுகள்
தற்போதைய ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், இந்தியா என்ற மூன்று நாடுகளையும் ஓன்றிணைத்துக் கொண்டிருந்த மாபெரும் குடிப்பகுதி தான் சிந்து சமவெளி.

12,60,000 கி.மீ சதுர அடி
பண்டைக் காலத்து நாகரீக குடிப்பகுதியிலேயே மாபெரும் குடிப்பகுதியாக கருதப்படுவது சிந்து சமவெளி. இதன் பரப்பளவு ஏறத்தாழ 12,60,000 கி.மீ சதுர அடி தூரமாகும்.

குடியிருப்புகள் அமைந்து முதல் இடம்
நகர அமைப்பும், குடியிருப்பு பகுதிகளும் கொண்ட உலகின் முதல் பகுதி என்ற புகழாரத்திற்கு சொந்த இடம் தான், சிந்து சமவெளி.

4 பகுதிகள்
சிந்து சமவெளி 4 பகுதிகளை கொண்டுள்ளதாகும். அவை, ஹரப்பா, மெர்கார், மொஹஜெதரோ, லோத்தல். இவை யாவும் நதிக்கரை சார்ந்து அமைந்திருந்த பகுதிகள் குறிப்படத்தக்கது.

நாகரீக வீடுகள்
மொஹஜெதரோவில் தான் முதல் முறையாக, குளியலறை, சமையலறை போன்ற பல வசதிகள் கொண்ட அடுக்கு மாடிகள் கட்டப்பட்டன. அடுக்கு மாடி கட்டிடங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கழிவறை வசதி
மனிதனின் வளமான வாழ்க்கை முறைக்கு சுகாதாரம் தேவை என்று புரிந்து சுகாதார வசதிகளை மேன்படுத்தி கழிவறை வசதியை ஏற்படுத்திய குடியினர் சந்து சமவெளியினர் ஆவார்கள்.

தொழிநுட்பம்
நீளம், எடை, நேரம் போன்றவற்றை சரியாக கணக்கிடும் தொழில்நுட்பத்தை அப்போதே அறிந்து வைத்திருந்தனர் சிந்து சமவெளியை சேர்ந்தவர்கள்.

பல் மருத்துவர்கள்
பல் மருத்துவம் தெரிந்த உலகின் முதல் பல் மருத்துவர்கள், சிந்து சமவெளினர் ஆவார்கள்

கண்டுப்பிடிப்புகள்
ஆபரணங்கள், உடை, பட்டன், சிப்பிப் போல் அமைப்புக் கொண்ட வீடுகள் என பலவன சிந்து சமவெளி நாகரீக குடியினர் காலத்திலேயே கண்டுப்பிடிக்கப்பட்டுவிட்டன.

கலை
மண்பாண்டம், சிற்பங்கள், கைவினை பொருள்கள் போன்று கலைநயம் சார்ந்து மிகவும் நிட்பமான அறிவும், நிறைய வேலைபாடுகளும் கற்றறிந்தவர்களாக இருந்தனர் சிந்து சமவெளி மக்கள்.

கிணறு
அப்போதே கிணறு தோண்டி நீராதாரம் உண்டாக்கியவர்கள் சிந்து சமவெளி குடியினர்கள்.

சக்கரம் கொண்ட வாகனம்
சக்கரங்கள் கொண்ட வாகனங்களை முதன் முதலில் பயன்படுத்தியவர்கள் என்ற பெருமை சிந்து சமவெளி குடியினரையே சாரும். மற்றும் வணிகம் செய்ய இது அவர்களுக்கு வெகுவாக உதவியது.

கப்பல் கட்டுமானம்
கப்பல் கட்டுமான பட்டறையைக் கொண்டிருந்தது சிந்து சமவெளி. கப்பலை கட்டுதல், சரிசெய்தல், நீரில் இறக்கம் செய்தல் போன்ற வேலைபாடுகள் அந்த பட்டறையில் நடந்துள்ளது.

உலகின் முதல் துறைமுகம்
உலகின் முதல் துறைமுகம் கொண்ட குடியினராக திகழ்ந்தவர்கள் சிந்து சமவெளியை சேர்ந்தவர்கள்.



Click it and Unblock the Notifications