Latest Updates
-
சத்தான.. சோள உப்புமா - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 11 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டப்போகுதாம் -
செவ்வாய் மீது விழும் சனியின் மூன்றாம் பார்வை: ஆகஸ்ட் வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
சுக்கிரன் சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
இந்தியாவின் 'மௌன கிராமம்' என்று அழைக்கப்படும் வினோத கிராமம் எது தெரியுமா? இந்த கிராம மக்கள் ரொம்ப பாவம் -
மீல் மேக்கர் இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி கிரேவி செய்யுங்க.. சிக்கன் கிரேவி மாதிரி செமயா இருக்கும்.. -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: ஜூலை 24 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.. -
2 உருளைக்கிழங்கு இருந்தா இந்த நார்த் இந்தியன் தம் ஆலுவை செய்யுங்க - சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் -
டல்லான முகத்தை பொலிவாக்கணுமா? அப்ப பீட்ரூட்டை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
இந்த 5 சின்னங்களில் ஒன்று கையில் இருந்தாலும் அவர்கள் அரசாள பிறந்தவர்களாக இருப்பார்களாம் - உங்க கையில் இருக்கா?
உங்களால் நம்ப முடியாத சில அதிர்ச்சிகரமான உண்மைகள்!!!
உலகில் எத்தனையோ விஷயங்கள் நம்மால் நம்ப முடியாத வகையில் உள்ளன. ஆனால் அவை அனைத்துமே அனைவருக்கும் தெரிந்திருக்காது. உதாரணமாக, எலி குறட்டைவிடும் என்று உங்களுக்கு தெரியுமா?
இதுப்போன்று நிறைய உண்மைகள் நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடியவாறும், நம்மை சிந்திக்க வைக்கக்கூடியவாறும் இருக்கும். இங்கு தமிழ் போல்ட் ஸ்கை உலகில் உள்ள நம்ப முடியாத சில அதிர்ச்சிகரமான உண்மைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

செல்களை விட பாக்டீரியாக்கள் அதிகம்
நமது உடலில் செல்களை விட 10 மடங்கு அதிகமாக பாக்டீரியாக்கள் உள்ளதாம். மேலும் இதனை பல்வேறு ஆராய்ச்சிகளும் நிரூபித்துள்ளன.

புடவை ஒல்லியாக காண்பிக்கும்
புடவை அணிந்து மற்ற உடைகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில், புடவையில் பெண்கள் ஒல்லியாக காட்சியளிப்பார்கள். வேண்டுமெனில் முயற்சித்து தான் பாருங்களேன்.

கண் இமைகளில் பொடுகை சாப்பிடும் சிற்றுண்ணிகள் இருக்கும்
இது நம்ப முடியாதவாறு இருக்கும். ஆனால் உண்மையில்யேயே நம் கண் இமைகளில் பொடுகை சாப்பிடும் சிற்றுண்ணிகள் அதிகம் இருக்கும். எனவே தான் கண்களை கழுவ வேண்டுவது அவசியம்.

சுத்தமான நீரில் மீன் உயிர் வாழாது
மீன்கள் எப்போதும் சுத்தமான நீரில் உயிர் வாழாது. அது உப்பு நீரில் மட்டும் தான் உயிர் வாழும். அதற்காக உப்பு கலந்த நீரில் அல்ல, இயற்கையாக உப்பு நிறைந்த நீரில் தான் வாழும்.

நண்டு இரத்தம் உயிரை காப்பாற்ற உதவும்
மற்ற உயிரினங்களைக் காட்டிலும், நண்டின் ரத்தமானது மனித வாழ்க்கையை பாதுகாக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எலி குறட்டைவிடும்
எலி குறட்டை விடும் என்பது தெரியுமா? ஆம், எலியும் மனிதனைப் போல் தூங்கும் போது சத்தமாக குறட்டைவிடும்.

கண்ணாடியின் நிறம் பச்சை
உண்மையிலேயே கண்ணாடி வெள்ளை நிறமல்ல, பச்சை நிறம். அதனால் சில சமயங்களில் பார்க்கும் போது, அவை ஒருவித பச்சை நிறத்தில் காணப்படுகிறது.

ஆக்டோபஸிற்கு 2 கால்கள், 6 கைகள் உள்ளன
பலரும் ஆக்டோபஸிற்கு 8 கைகள் உள்ளன என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் அதற்கு 6 கைகளும், 2 கால்களும் தான் உள்ளன.

ஓபோசம் என்னும் விலக்கிற்கு 13 மார்பக காம்புகள் உள்ளது
மரங்களில் வாழும் ஒரு வகை அமெரிக்க சிறிய விலங்கினம் தான் ஒபோசம். இதனை மிகவும் வழக்கத்திற்கு மாறான பாலூட்டி எனலாம். பெண் ஒபோசம்மிற்கு 13 மார்பக காம்புகள் உள்ளன.

பொது கழிப்பிடத்தில் தரை தான் மிகவும் மோசமானது
பொது கழிப்பிடத்தில் மற்ற இடங்களை விட தரையின் தான் பாக்டீரியாக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இது கொலம்பியா பல்கலைகழக்கத்தில் மேற்கொண்ட ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சனி மற்றும் வியாழன்
கிரகங்களில் சனி மற்றும் வியாழனில் வைர மழை பொழியும். எனவே இந்த இரண்டு கிரகங்களையும் வைர கிரகங்கள் என்றும் அழைப்பார்கள்.

விந்தணு பற்கள் மற்றும் சருமத்திற்கு மிகவும் நல்லது
விந்தணுவில் ஜிங்க், கால்சியம் மற்றும் இதர கனிமச்சத்துக்கள் இருப்பதால், இதனைக் கொண்டு சருமம் மற்றும் பற்களைப் பராமரிக்கலாம். இதனால் சருமம் அழகாகவும், பற்களும் ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications