Just In
- 2 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 3 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 4 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 5 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இந்திய புராணங்களில் இருந்து பிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகள்!!!
இந்திய புராணங்களைக் கட்டுக் கதை, மூட நம்பிக்கைகள், முட்டாள்த்தனம் என்று பலவாறாக கூறுவோர் உண்டு. ஆனால், நமது இந்திய புராணங்கள், பல உலக கண்டுப்பிடிப்புகளுக்கு மூலக்கருவாக இருந்திருக்கிறது. இதை, பல ஆராய்ச்சியாளர்களே ஒப்புக்கொண்டும் இருந்திருக்கிறார்கள்.
புராணங்களில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அறிவியலா? கட்டுக்கதையா? - ஓர் பார்வை!!
இதனால், மகாபாரதம், இராமாயணம் போன்ற சரித்திர காவியங்களில் கூறப்பட்டவை உண்மையாகவே பண்டைய காலத்தில் நடந்திருக்கலாம் என்றும். அவ்வாறு நடக்காத ஒன்றை பற்றி எழுதியிருந்தால் எப்படி அது இக்காலத்தில் சாத்தியமாக அமைந்திருக்கும் என்றும் வினாக்கள் மனதினுள் எழுகின்றனர்....
புஷ்ப வாகனம் / புஷ்பக விமானம்
பண்டைக் காலங்களில் கூறப்பட்டுள்ள பறக்கும் வாகனமான புஷ்பக வாகனம், பாதரசம் சுழல் என்ஜின் (Mercury Vortex Engine) மூலமாக இயக்கப்பட்டிருகலாம் என்று வல்லுனர்கள் கூறியிருக்கின்றனர்.
அணுகுண்டு
ராபர்ட் ஒப்பேன்ஹெய்மர் (Robert Oppenheimer), இவர் அணுகுண்டின் கண்டுப்பிடிப்பிற்கான பெருமைகள் யாவும் பகவத் கீதையையே சேரும் என்றுக் கூறியிருக்கிறார். இதில் இருந்து மூலக்கருவைக் கொண்டு தான் இது சாத்தியமானது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சூரிய குடும்பம்
சில வருடங்களுக்கு முன்பு தான், நமது சூரிய குடும்பத்தில் எட்டு கோள்கள் தான் இருக்கிறது, ப்ளுடோ நமது சூரிய குடும்பத்தை சேர்ந்தது அல்ல என்று கண்டுப்பிடித்தனர். ஆனால், நமது கோவில் வழிபாடுகளில், நவகிரகங்களில், சூரியனை சுற்றி எட்டு கோள்கள் இருப்பதை அப்போதே கூறி சென்றிருக்கின்றனர்.
கட்டற்ற சக்தி - Free Energy
ஆராய்ச்சியாளர் நிக்கோலா டெஸ்லா என்பவர், தனது கட்டற்ற சக்தியின் கூற்றுகள் சுவாமி விவேகானந்தரின்கூற்றுகள் மற்றும் இந்திய வேதங்களின் கூற்றுகளில் இருந்து கண்டறியப்பட்டது என்று கூறியுள்ளார்.
களரிப்பயட்டு
உலகின் பழம்பெரும் தற்காப்பு கலை என களரிப்பயட்டு கூறப்படுகிறது. இதை, பரசுராமர் மற்றும் அகத்திய முனியால் கண்டெடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓம் எனும் சொல்
"ஓம்" சொல் ஓர் புனித ஒலியாக காணப்படுகிறது. மற்றும் உணர்வு நிலை வெளிப்பாட்டிற்கு இந்த ஒலிதான் காரணம் என்றும் நம்பப்படுகிறது.
கதிர்வீச்சு சக்தி
மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடுகளில் கதிரியக்க சக்தியின் ஊடுருவல் இருப்பதால், பண்டைய காலங்களில் இந்தியாவில் கதிரியிக்க போர் கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற யூகங்களும், நிலையும் உருவாகியுள்ளது.
பரமசிவன்
சிவனை நாம் கடவுளாக தொழுகிறோம். ஆனால், அவர் உண்மையில் ஓர் ஆதி யோகி. அதாவது யோகிகளுக்கு எல்லாம் முதலாமானவர். முதல் யோகி. அதற்கு பிறகு தான் அவர் கடவுளாக ஏற்கப்பட்டார்.
போதி தர்மன்
குங்-ஃபூ கலையை கண்டுப்பிடித்தவர் தென்னிந்தியாவின் பல்லவ மன்னர் போதி தர்மர் தான் என்பது ஏ.ஆர். முருகதாஸ் மூலமாக நாம் யாரும் அறிய காரணமாக இருந்தது.