Latest Updates
-
வெயில் கொடுமையா? இந்த வாஸ்து செடிகள் இருந்தா போதும்… வீடு ஏசி இல்லாமலே ஜில்லுனு இருக்கும்! -
புதன் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இதயம் பெரிய ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் விசித்திரமான 5 அறிகுறிகளை பட்டியலிட்ட இதய நோய் நிபுணர்! -
வெயில் கொடுமையா? இந்த 3 வாஸ்து செடிகள் இருந்தா போதும், வீடு ஜில்லென்று மாறும்! -
தேர்தலும், அரசியல் கட்சிகளும் இல்லாத அதிசய நாடுகள் - இந்த நாடுகளில் ஏன் தேர்தல் நடத்தப்படுவதில்லை தெரியுமா? -
Tamil Nadu Election Results 2026: நடிகர்களின் கட்சிகளும்.. முதல் தேர்லில் பெற்ற வாக்குகளும்.. - ஓர் பார்வை -
ஒரே நாளில் உருவாகும் இரட்டை துவித்வாதச யோகம்: மே 11-ல் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் சீக்கிரம் குறையும்... -
இன்றைய ராசிபலன் 04 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க யாரையும் நம்பாமல் இருப்பதுதான் நல்லது -
சுக்கிரன் மிதுன ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கும் அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
ஹோலி! இந்தியாவின் வண்ணமிகு திருவிழா!
வட இந்தியாவில் வருடா வருடம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி திருநாளன்று கோலாகலமாய் கொண்டாடப்படும் வண்ணமிகு திருவிழா! ஜாதி மத வேறுபாடு இன்றி, சகோதரத்துவத்தை ஊக்குவிக்கும் மனிதநேயம் பொங்கி வழியும் மாபெரும் பண்டிகை! வெள்ளை உடை அணிந்து ஆண்களும், பெண்களும், வண்ண வண்ண சாயங்களை மகிழ்ச்சியுடன் இன்பம் பெருக மற்றவர் மீது பூசி சந்தோசத்தை பகிர்ந்துக் கொள்ளும் விழா தான் ஹோலி!
ஹோலியின் மூலம் நாம் அறியவேண்டிய வாழ்வியல் கூற்று என்னவெனில், நம் அனைவரது மனமும் வெள்ளை உடைப் போல, அதில் நம்மை சுற்றியுள்ள பல உறவுகளின் அழகான நினைவுகளும், அவர்களின் பங்களிப்பும் இருக்கும் போது தான் நமது வாழ்க்கை மகிழ்ச்சியுற இருக்கும். இந்த மகத்தான வாழ்க்கை கூற்றை கூறும் ஹோலியைப் பற்றி நீங்களும் அறிந்துக் கொள்ள வேண்டும் அல்லவா... தொடர்ந்து படியுங்கள்...

வண்ணமயமான பண்டிகை
இந்துக்கள் பண்டிகைகளிலேயே வண்ணமயமான பண்டிகை என கருதப்படுவது ஹோலி. முகத்திலும், ஆடைகளிலும் வண்ணங்கள் பூசியும், வண்ணநீரை ஊற்றியும் கொண்டாடப்படும் பண்டிகை ஹோலி.

சகோதரத்துவம்
இந்திய பண்டிகைகளிலேயே சகோதரத்துவத்தை போற்றும் பண்டிகை ஹோலி தான். இதில் இவர் தான் கலந்துக் கொள்ள வேண்டும் என்று வேறுபாடு இன்றி இனம், ஜாதி, மதம் எதையும் பாராமல் கொண்டாடப்படும் சமத்துவ பண்டிகை ஹோலி

எல்லைகளின்றி
இந்துக்கள் பண்டிகைகளில் ஒவ்வொரு பண்டிகையும் ஒவ்வொரு மாநிலத்தில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆனால், ஹோலி மட்டும் தான் எல்லைகளின்றி கொண்டாடப்படும் தேசம் தழுவிய பண்டிகை ஆகும். காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை தேசம் முழுக்க மக்கள் தங்களது மகிழ்ச்சியை வண்ணங்களின் மூலம் வெளிப்படுத்தும் பண்டிகை தான் ஹோலி.

அழகான மாலை நேரம்
ஹோலி பெரும்பாலும் கதிரவனும், சந்திரனும் தோன்றும் அழகான வண்ணமயமான வானத்தின் கீழ் தான் வண்ணங்கள் பூசி கொண்டாடப்படுகின்றன.

கொண்டாட்டம்
தெருக்கள் எங்கும் வெள்ளை உடை அணிந்து அங்கும் இங்குமாய் ஓடி, வண்ணங்களை பூசியும், தண்ணீரில் கரைத்து மற்றவர் மீது வண்ணநீரை ஊற்றியும், கட்டித்தழுவி கொண்டாடப்படும் பண்டிகை தான் ஹோலி.



Click it and Unblock the Notifications