Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு குழப்பமான நாளாக இருக்குமாம் -
கஜலட்சுமி யோகம் கடக ராசியில் இருப்பதால் கோடீஸ்வர யோகாக்கத்தால் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வேர்க்கடலையும், கொத்தமல்லியும் இருந்தா இந்த மாதிரி சுருக்குனு சட்னி அரைங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
July 2026: ஜூலை மாதத்தின் முக்கியமான நாட்கள் மற்றும் விரத தினங்கள் என்னென்ன தெரியுமா? -
2 பிரட்டும், அரை கப் கடலை மாவும் இருந்தா டக்குனு இந்த டிபனை பண்ணுங்க - டேஸ்ட்டா, ஆரோக்கியமா இருக்கும் -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்தியாவில் நிச்சயம் செய்யக்கூடாத விஷயங்கள்!!!
இந்தியா என்பது பல முரண்பாடுகள் நிறைந்த பூமியாகும். இந்த நாட்டிலுள்ள சிக்கலான பண்பாட்டில் ஒன்றுக்கொன்று பல முரண்பாடுகள் நிறைந்துள்ளன. மேற்கு நாடுகளில் இருந்து வெளிநாட்டினர்கள் இந்தியாவிற்கு வருகை தரும் போது, நாம் ஈடுபடும் பல விஷயங்களில் அவர்கள் குழம்பி போவார்கள். இந்தியாவில் செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை. நம் ஒருவருக்குள்ளும் பதிந்து போன தனித்துவமான விஷயங்கள் இவை.
சில விஷயங்களை பழக்கத்தால் இந்தியர்கள் செய்வதில்லை. உதாரணத்திற்கு, வீட்டிற்கு வெளியே அணியும் செருப்பை நாம் வீட்டிற்குள் அணிவதில்லை. இந்தியாவில் செய்யக்கூடாத இவ்வகையான செயல்களை புரிந்து கொள்வதற்கு வெளிநாட்டினருக்கு கஷ்டமாக இருக்கும். இருப்பினும் நமக்கு இது தினசரி நடக்கும் இயல்பான விஷயங்களே. இருப்பினும் கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த முரண்பாடுகளை கேட்பதற்கு சுவாரசியமாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும்.
இந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்!!!
உதாரணத்திற்கு, இந்திய பெண்கள் சில விந்தையான விஷயங்களை செய்வதுண்டு. ஆண்களுடன் பெண்கள் கை குலுக்கவதில்லை. அதனால் இரு கைகளையும் கூப்பி அவர்களுக்கு வணக்கம் வைப்பதே பாதுகாப்பான வழியாகும். நீங்கள் இந்தியர் இல்லாமல் துணை கண்டத்திற்கு பயணிக்கிறீர்கள் என்றால், இந்தியாவில் செய்யக்கூடாத விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
இந்தியாவில் செய்ய கூடாத விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பொது இடத்தில் முத்தமிடுதல்
பொது இடத்தில் முத்தமிடுவது, பொது இடத்தில் கைக்கோர்த்து நடப்பது அல்லது பொது இடத்தில் அன்யோனியாமாக இருப்பது என அனைத்தும் இந்தியாவில் தெளிவான குற்றமாகும். அதனால் சாதரணமாக கூட இவைகளை முயற்சிக்காதீர்கள்.

செருப்பு அணிந்து அடுத்தவரின் வீட்டிற்குள் நுழைதல்
அடுத்தவரின் வீட்டிற்குள் செருப்புடன் செல்கையில் அவர்கள் உங்களிடம் பணிவாகவும் சிரித்த முகத்துடனும் இருப்பார்கள். இருப்பினும் நீங்கள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறியதும் அவர்கள் வீட்டை கங்கை நீரால் சுத்தம் செய்து உங்களை பழிப்பார்கள்.

பெண்ணிடம் கை குலுக்குவது
ஒரு பெண் தாமாக தன் கையை கொடுக்காதவரை அவளின் கையை பிடிக்காதீர்கள். ஒரு ஆண், பெண்ணின் கையை பிடித்து கை குலுக்குவது இந்தியாவை பொருத்தவரை செய்யக்கூடாத ஒன்றாகும். அதிலும் பெண்ணின் கையை பற்றி முத்தமிட எல்லாம் எண்ணி கூட விடாதீர்கள். அவ்வளவு தான் தொலைந்தீர்கள்.

இடது கையை பயன்படுத்துதல்
இந்திய பண்பாட்டை பொறுத்த வரை, இயற்கை கழிவுகளை கழுவ இடது கையை பயன்படுத்துவதால், அந்த கை அசுத்தம் மிகுந்ததாக பார்க்கப்படுகிறது. அதனால் இடது கையை கொண்டு பொருட்களை கொடுப்பது, பணத்தை கொடுப்பது, உணவை பெற்றுக் கொள்வது போன்றவைகள் எல்லாம் செய்யக்கூதாது. இடது கை பழக்க முடையவர்களுக்கு கூட இந்த விதி பொருந்தும்.

ஷார்ட்ஸ் அணிவது
இந்தியாவில், வெளியே ஷாப்பிங் செல்லும் போது, நைட்டி அல்லது சுடிதார் மீது துப்பட்டா போட்டு கொண்டு செல்லலாம். ஆனால் நீங்கள் ஷார்ட்ஸ் அணிந்து சென்றால், பிரச்சனையை நீங்களே விலை கொடுத்து வாங்குகிறீர்கள்.

பணம் அல்லது உணவு அல்லது வேறு பொருட்களை மிதிப்பது
பொதுவாக பாதத்தை சுத்தமில்லாத தரக்குறைவான ஒன்றாக பார்க்கின்றனர் இந்திய பண்பாட்டில். அதனால் உணவு, பணம் அல்லது புனிதமான பொருட்களை காலால் மிதிக்காதீர்கள். அதே போல் வீசியெரியப்பட்ட எலுமிச்சை அல்லது மிளகாயை மிதிக்கக்கூடாது. அது சூன்ய வேலையாக கருதப்படுகிறது.

பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பது
இந்தியாவில், உங்களை விட பெரியவர்களை பெயர் சொல்லி அழைப்பதை ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் உங்கள் நண்பனின் பெற்றோர்களை சந்திக்கும் போது, அவர்கள் உங்கள் உறவில்லாத போதும், அவர்களை அங்கிள் மற்றும் ஆண்டி என அழையுங்கள்.

கிரிக்கெட் தவிர்த்து பிற விளையாட்டுக்களை பற்றி பேசாதீர்கள்
இந்தியாவில் கிரிக்கெட் என்றால் பைத்தியம். அதனால் பிற விளையாட்டுகளைப் பற்றி இந்தியாவில் பலருக்கும் தெரிவதில்லை. மட்டை பந்து விளையாட்டை பற்றியெல்லாம் நம் பாட புத்தகத்தில் மட்டுமே படித்திருப்போம். அதனால் இந்தியர்களிடம் பிற விளையாட்டுகளை பற்றி பேசாதீர்கள்.



Click it and Unblock the Notifications