Latest Updates
-
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...!
2500 ஆண்டுகால இந்திய வரலாற்றில் அதிசக்திவாய்ந்த பேரரசுகளாக இருந்த 5 ராஜ்ஜியங்கள் என்னென்ன தெரியுமா?
ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்னர் வரை இந்திய நிலப்பரப்பு பேரரசுகளின் நிலம் என்று அழைக்கப்பட்டது. இந்தியா உலகின் பழமையான நாகரிகமான சிந்து சமவெளி மற்றும் வேதங்களின் தாயகமாக இருந்து வருகிறது. மிகப்பெரிய இராஜ்ஜியங்களை கண்ட இந்தியா பல சிறுபான்மை சமூகங்களுக்கும் புகலிடமாக அமைந்தது.
காலப்போக்கில், இது பார்சிகள் இந்தியாவில் நுழைந்தனர், பின்னர் துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் மற்றும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது, இந்த ஒவ்வொரு பேரரசும் அதன் தனித்துவமான அடையாளத்தை விட்டுச் சென்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஆட்சியாளர்களும், பேரரசுகளும் இந்திய துணைக்கண்டத்தை வடிவமைத்தனர்.

முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் மற்ற பேரரசுகளுடன் இணைந்து இந்திய வரலாற்றில் நீடித்த பங்களிப்புகளைச் செய்தனர். கடந்த 2500 ஆண்டுகால இந்திய வரலாற்றில் சில இராஜ்ஜியங்களே நீடித்த அடையாளத்தை விட்டுச் சென்றனர். அவை எந்தெந்த இராஜ்ஜியங்கள் என்று இந்த பதில் தெரிந்து கொள்ளலாம்.
மௌரிய பேரரசு
இந்திய வரலாறு மட்டுமின்றி உலக வரலாற்றிலும் மிகப்பெரிய பேரரசுகளில் ஒன்றாக அறியப்படும் மௌரியப் பேரரசு, கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்திய துணைக்கண்டத்தை ஆண்டது. இந்தப் பகுதி புதிய அரசியல் சவால்களை எதிர்கொண்ட காலகட்டம் இது, மேலும் பாரம்பரிய விதிமுறைகள் அந்த காலகட்டத்தில் மாறிக்கொண்டிருந்தன.
மௌரியப் பேரரசின் முதல் அரசரான சந்திரகுப்த மௌரியர் அலெக்சாண்டரின் படையை எதிர்த்துப் போரிட்டார். சந்திரகுப்தருக்கு அவரின் ராஜகுருவான சாணக்கியர் தீவிரமான ஆதரவளித்தார், அவர் வெறும் வழிகாட்டியாக மட்டுமல்லாமல், பேரரசிற்கான உத்திகள் மற்றும் கொள்கைகளையும் திட்டமிட்டார். மௌரியப் பேரரசு உச்சத்தில் இருக்கும்போது, தற்போதைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் சில பகுதிகள் உட்பட துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை மௌரிய பேரரசின் கீழே வந்தது.
மௌரியப் பேரரசின் தலைசிறந்த ஆட்சியாளராகக் கருதப்படும் அசோகர், பேரரசு முழுவதும் மற்றும் அதற்கு அப்பால் புத்த மதத்தைப் பரப்பினார். அவர் ஆணைகளுடன் பொறிக்கப்பட்ட தூண்களை நியமிப்பதன் மூலம் புத்த மதம் மற்றும் அகிம்சை மீதான தனது நம்பிக்கையை ஊக்குவித்தார்.
குப்த பேரரசு
கி.பி 4 ஆம் நூற்றாண்டில் குப்தப் பேரரசு இந்திய துணைக் கண்டத்தில் ஒரு மேலாதிக்க சக்தியாக மாறியது. இலக்கியம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலை ஆகியவற்றில் அதன் சாதனைகள் காரணமாக இந்த காலம் இந்தியாவின் க்ளாசிக்கல் காலம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 318 முதல் 330 வரை ஆட்சி செய்த முதலாம் சந்திரகுப்தர் குப்த பேரரசை நிறுவினார். சிறிய பிரதேசமாகத் தொடங்கி திருமணம் மற்றும் வெற்றிகள் மூலம் அதை விரிவுபடுத்தினார்.
பின்னர் கி.பி 375 முதல் 415 வரை ஆட்சி செய்த இரண்டாம் சந்திரகுப்தர், பேரரசை மேலும் விரிவுபடுத்தினார். இந்தப் பேரரசு, நேரடியாக பேரரசரால் ஆளப்படும் பகுதிகளாகவும், விசுவாசத்தை உறுதியளித்த உள்ளூர் மன்னர்களால் ஆளப்படும் பிற பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டது. இது ஆட்சிமுறையை எளிதாக்கியது.
குப்தப் பேரரசு கலாச்சாரம், மதம் மற்றும் அறிவியலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது. இந்த காலகட்டத்தில் சாதி அமைப்பும் மிகவும் இறுக்கமாக மாறியது, இது சமூக இயக்கத்தை வெகுவாக பாதித்தது. இந்த காலகட்டத்தில் சிற்பம், ஓவியம் மற்றும் இலக்கியம் செழித்து வளர்ந்தன, இவற்றில் பெரும்பாலும் இந்து கடவுள்கள் அல்லது புத்தரை மையமாகக் கொண்ட படைப்புகள் இருந்தன.
காளிதாசர் போன்ற எழுத்தாளர்கள் சமஸ்கிருதத்தில் கவிதை மற்றும் நாடகங்களை உருவாக்கினர், இது இந்திய இலக்கியத்தில் பெரும் வளர்ச்சிக்கு பங்களித்தது. இந்த காலகட்டத்தில் கணிதம் மற்றும் வானியல் துறையிலும் முக்கிய முன்னேற்றங்கள் காணப்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் பூஜ்ஜியம் உருவாக்கப்பட்டது, சூரிய ஆண்டின் நீளத்தைக் கணக்கிடுவது உட்பட ஆர்யபட்டா குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகளைச் செய்தார்.
டெல்லி சுல்தானகம்
1206 முதல் 1526 வரை இந்திய துணைக்கண்டத்தின் பெரும் பகுதிகளை டெல்லி சுல்தானகம் ஆட்சி செய்தது. மம்லுக் வம்சத்தின் முதல் சுல்தானான குதுப் அல்-தின் ஐபக் முஸ்லிம் ஆட்சியை நிறுவியதன் மூலம் இது தொடங்கியது. காலப்போக்கில், வட இந்தியாவின் குறிப்பிடத்தக்க பகுதிகளை உள்ளடக்கிய இராணுவப் பிரச்சாரங்கள் மற்றும் கூட்டணிகள் மூலம் சுல்தானகம் தனது கட்டுப்பாட்டை விரிவுபடுத்தியது.
இந்த காலகட்டத்தில் ம்லுக்குகள், கல்ஜிகள், துக்ளக்குகள், சயீதுகள் மற்றும் லோடிகள் என ஐந்து வம்சங்கள் ஆட்சி செய்தன. இந்த ஆட்சியாளர்கள் நிர்வாக அமைப்புகள், புதிய கட்டிடக்கலை பாணிகள் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தில் பாரசீகர்களின் பாணியை அறிமுகப்படுத்தினர். உள்ளூர் ராஜ்ஜியங்களின் எதிர்ப்பை சுல்தானகம் எதிர்கொண்டாலும், பிராந்தியத்தின் அரசியல் மற்றும் கலாச்சார நிலப்பரப்பை வடிவமைப்பதில் அவர்கள் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். 1526 இல் முதல் பானிபட் போருக்குப் பிறகு முகலாயப் பேரரசின் எழுச்சியுடன் அவர்களின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வந்தது.
முகலாயப் பேரரசு
1526 ஆம் ஆண்டு, திமுரிட் தலைவரான பாபர், டெல்லியின் சுல்தான் இப்ராஹிம் லோடியை முதல் பானிபட் போரில் தோற்கடித்தபோது, தெற்காசியாவில் முகலாயப் பேரரசு உருவானது. பாபரின் வெற்றி இந்திய வரலாற்றை மாற்றிய ஒரு வம்சத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதன்பின் வந்த வலிமையான தொடர்ச்சியான ஆட்சியாளர்களின் கீழ் இந்தப் பேரரசு வளர்ந்தது, பாபரின் பேரனான அக்பர் பேரரசை பலப்படுத்தி, மத்திய ஆட்சியை வலுப்படுத்தும் நிர்வாக அமைப்பை நிறுவினார்.
17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஔரங்கசீப்பின் கீழ் அதன் உச்சத்தில், முகலாயப் பேரரசு இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பரவியிருந்தது. முகலாயர்களின் செல்வம் அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்ட விவசாய வரிகளை நம்பியிருந்தது. ஒழுங்குபடுத்தப்பட்ட வெள்ளி நாணயத்தில் வசூலிக்கப்பட்ட இந்த வரிகள், கிராமப்புற உற்பத்தியாளர்களை பெரிய சந்தைகளில் ஒருங்கிணைத்தன.
முகலாய சகாப்தம் பொருளாதார வளர்ச்சி மற்றும் கலாச்சார சாதனைகள் நிரம்பியதாக இருந்தது. அவர்களின் காலகட்டத்தில் ஐரோப்பாவுடனான வர்த்தகம் செழித்தது, மேலும் செல்வம் கலைகள், இலக்கியம் மற்றும் கட்டிடக்கலையில் பெரும் புரட்சி நடத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முகலாயப் பேரரசு வீழ்ச்சியடைந்தது, 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்களால் முகலாய அரசு நிரந்தரமாக கலைக்கப்பட்டது.
பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம்
16 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் வணிகர்களாக இந்தியாவிற்கு வந்து முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தில் கால் பதித்தனர். பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆரம்பத்தில் இந்தியாவில் வணிகத்திற்காக வர்த்தக நிலையங்களை அமைத்தது. கிழக்கிந்திய கம்பெனியின் முதல் கப்பல் 1608 இல் குஜராத்தின் சூரத்தில் நிறுத்தப்பட்டது. நிறுவனத்தின் முதல் இந்திய தொழிற்சாலை 1611 இல் ஆந்திர கடற்கரையில் உள்ள மசூலிப்பட்டினத்தில் நிறுவப்பட்டது, அதைத் தொடர்ந்து 1615 இல் சூரத்தில் இரண்டாவது தொழிற்சாலை நிறுவப்பட்டது.
1647-க்குள் நாடு முழுவதும் 23 தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளுடன் இந்திய வர்த்தகத்தில் ஆங்கிலேயர்கள் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்தனர். 1707 இல் பேரரசர் ஔரங்கசீப்பின் மரணத்திற்குப் பிறகு, முகலாயப் பேரரசு பலவீனமடைந்தது, இதன் விளைவாக ஆங்கிலேயர்களின் கை மேலோங்கியது. இந்த குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனி, தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, வங்காளத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
18 ஆம் நூற்றாண்டில், நிறுவனம் கைப்பற்றப்பட்ட மாகாணங்களிலிருந்து வரும் வரிகளை பெரிதும் நம்பியிருந்தது. ஒரு காலத்தில் உலகளாவிய ஜவுளி உற்பத்திக்கான மையமாக இருந்த வங்காளம், பிரிட்டிஷ் பொருட்களுக்கான சந்தையாக மாற்றப்பட்டது. 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்திற்குப் பின் முகலாய ஆட்சி வீழ்த்தப்பட்டு 1858 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியம் தொடங்கியது.
1876 ஆம் ஆண்டு விக்டோரியா மகாராணி இந்தியாவின் பேரரசியாக அறிவிக்கப்பட்டார், இது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரதேசங்கள் மற்றும் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின் கீழ் உள்ள சுதேச அரசுகளை உள்ளடக்கிய இந்தியாவின் மீது பிரிட்டிஷ் அதிகாரத்தை அடையாளப்படுத்தியது. இந்த பகுதிகள் பிரிட்டிஷ் இந்தியா என்று அழைக்கப்பட்டன.
பிரிட்டிஷ் ராஜ்ஜியம் 1947 வரை நீடித்தது. தொடர்ச்சியான இந்திய சுதந்திர போராட்டத்திற்கு பின் பிரிட்டிஷ் இந்தியாவானது இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என இரண்டு நாடுகளாக பிரிக்கப்பட்டது



Click it and Unblock the Notifications












