20 லட்சம் பேரை கொன்ற உலகின் முட்டாள்தனமான சர்வாதிகாரி..இவர் ஏன் கண்ணாடி போட்டவர்களை அதிகம் கொன்றார் தெரியுமா?

உலகில் பல சர்வாதிகாரிகள் வாழ்ந்துள்ளனர், ஆனால் அவர்களை வெகுசிலரை மட்டுமே நம் நன்கு அறிவோம். நமக்கு தெரியாத, அதேசமயம் நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத மோசமான சம்பவங்களை செய்த பல சர்வாதிகாரிகள் வாழ்ந்துள்ளனர். அப்படி நமக்கு தெரியாமலே வாழ்ந்த மிகவும் கொடூரமான சர்வாதிகாரிகளில் ஒருவர்தான் போல் பாட்.

1925 ஆம் ஆண்டு பிறந்த சலோத் சார் என்ற இயற்பெயர் கொண்ட போல் பாட், கெமர் ரூஜின் தலைவராகவும், 1975 முதல் 1979 வரை கம்போடியாவின் பிரதமராகவும் இருந்தார். அவரது ஆட்சி 20 ஆம் நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனப்படுகொலைகளில் ஒன்றிற்குப் பெயர் பெற்றது, அவரது ஆட்சி காலத்தில் 1.5 முதல் 2 மில்லியன் கம்போடியர்கள், கிட்டதட்ட கம்போடியாவின் மக்கள்தொகையில் கால் பகுதியினர் அரசாங்கத்தின் அடக்கு முறைகளால் கொல்லப்பட்டனர். வரலாறு நினைவுக்கூர மறந்த 20-ஆம் நூற்றாண்டின் மோசமான சர்வாதிகாரி போல் பாட் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Pol Pot The Ruthless Dictator Who Killed 2 Million People

போல் பாட் பாரிஸில் படித்தார்

இரக்கமற்ற சர்வாதிகாரியாக மாறுவதற்கு முன்பு, போல் பாட் பிரான்சில் கல்வி பயின்றார். 1949 இல், அவர் பாரிஸில் படிக்க உதவித்தொகை பெற்றார், ஆனால் அவரது உண்மையான கல்வியான அரசியல் மறைமுகமாக இருந்து வந்தது. பிரான்சில் இருந்தபோது, ​​அவர் ஒரு மார்க்சிய ஆய்வுக் குழுவில் சேர்ந்து பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியில் தீவிரமாக ஈடுபட்டார். அவர் மார்க்ஸ், லெனின் மற்றும் ஸ்டாலினின் படைப்புகளைப் படித்தார், மேலும் கம்போடியாவின் எதிர்காலம் ஒரு தீவிர கம்யூனிசப் புரட்சியில் உள்ளது என்று உறுதியாக நம்பினார். அதேசமயம், இந்த மேற்கத்திய செல்வாக்கு அவர் பிற்காலத்தில் மிகவும் வன்முறையை பரப்பிய மேற்கத்திய எதிர்ப்பு சித்தாந்தத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

நகரங்களை முற்றிலுமாக காலி செய்ய விரும்பினார்

கம்போடியாவின் நகரங்களில் இருந்த மக்கள்தொகையை குறைப்பதற்கான அவரது முடிவு போல் பாட்டின் மிகவும் தீவிரமான மற்றும் முட்டாள்தனமான கொள்கைகளில் ஒன்றாகும். வியட்நாம் போரின் போது கம்போடியாவில் ஏற்பட்ட அரசியல் ஸ்திரமின்மை கெமர் ரூஜுக்கு வளமான நிலத்தை வழங்கியது. வட வியட்நாமிய விநியோக வழிகளை சீர்குலைக்கும் நோக்கில் கிழக்கு கம்போடியாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சுகள், ஆயிரக்கணக்கான விவசாயிகளை கெமர் ரூஜின் கைகளில் தள்ளியது.

ஏப்ரல் 1975-ல் ஆட்சிக்கு வந்த சில நாட்களுக்குப் பிறகு, கெமர் ரூஜ் புனோம் பென் மற்றும் பிற நகர்ப்புறங்களில் வசித்த மக்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. மில்லியன் கணக்கான மக்கள், அவர்களில் பலர் நோயாளிகள், முதியவர்கள் அல்லது குழந்தைகள், கூட்டுப் பண்ணைகளில் வேலை செய்ய கிராமப்புறங்களுக்கு அணிவகுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அவரின் இலக்காக இருந்தது என்னவெனில், நவீனத்துவம், முதலாளித்துவம் மற்றும் வர்க்கப் பிரிவின் வேற்றுமைகள் அனைத்தையும் அழித்து, கம்போடியாவை விவசாய பூமியாக கடந்த கால நிலைக்குத் திரும்பச் செய்வது. நகரங்கள் ஊழல் நிறைந்ததாகவும் தூய்மையற்றதாகவும் இருப்பதாக அவர் நினைத்தார். போல் பாட்டின் கம்போடியாவில், நகர்ப்புற வாழ்க்கை என்ற கருத்து கூட தடைசெய்யப்பட்டது.

Pol Pot The Ruthless Dictator Who Killed 2 Million People

பணம், மதம் மற்றும் தனியார் சொத்துக்களை ஒழித்தார்

ஒரு உண்மையான கம்யூனிச சமூகத்தை உருவாக்க, சமூகம் புதிதாகத் தொடங்க வேண்டும் என்று போல் பாட் நம்பினார். அவரது ஆட்சியின் கீழ், பணம் ஒழிக்கப்பட்டது, வங்கிகள் மூடப்பட்டன, மேலும் அனைத்து தனியார் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கம்போடிய கலாச்சாரத்தில் ஆழமான வேர்களைக் கொண்ட மத நடைமுறைகள் ஒழிக்கப்பட்டன, குறிப்பாக பௌத்தம் தடை செய்யப்பட்டன. துறவிகள் வெளியேற்றப்பட்டனர், கோவில்கள் அழிக்கப்பட்டன, மதத் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டனர். கண்ணாடி அணிவது, வெளிநாட்டு மொழி பேசுவது, அல்லது மென்மையான கைகள் வைத்திருப்பது, கல்வியறிவு பெறுவது என அனைத்தும் மரண தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, புத்திசாலிகள் என்று கருதப்பட்டவர்கள் மற்றும் நகர்ப்புற வாழ்க்கை வாழ்பவர்கள் என அனைவரும் கொல்லப்பட்டனர். கெமர் ரூஜ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகள் மற்றும் மரணதண்டனை தளங்களை நிறுவியது.

தொழில் வல்லுநர்கள், சிறுபான்மையினர், முன்னாள் அரசாங்க அதிகாரிகள் மற்றும் விசுவாசமற்றவர்கள் என்று சந்தேகிக்கப்படும் கெமர் ரூஜின் விசுவாசமான உறுப்பினர்கள் கூட குறிவைக்கப்பட்டனர். பழிவாங்கலைத் தடுக்க முழு குடும்பங்களும் பெரும்பாலும் தூக்கிலிடப்பட்டனர்.

ரகசியமாக செயல்பட்டார்

அவர் மிகவும் மோசமான ஆட்சியை வழிநடத்திய போதிலும், போல் பாட் மிகவும் ரகசியமான நபராகவே இருந்தார். கெமர் ரூஜின் ஆட்சியின் பெரும்பகுதியில், பொதுமக்களுக்கு அவர் யார் அல்லது அவர் எப்படி இருக்கிறார் என்பது கூட தெரியாது. அவர் பொதுவாக "Brother Number One" என்று குறிப்பிடப்பட்டார், மேலும் பல கம்போடியர்களுக்கு உண்மையில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதே தெரியாமல் இருந்தது.

போல் பாட்டின் ரகசியம் இறுதியில் அவரது சொந்த அணிகளுக்குமே பரவியது. கட்சிக்குள்ளும் கூட, அவர் ரகசியம் மற்றும் பயத்தின் மூலம் இறுக்கமான கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தார், விசுவாசமின்மை என்று அவர் சந்தேகித்தவர்களைத் தொடர்ந்து தூக்கிலிட்டார்.

இறுதிவரை தண்டனை கிடைக்கவில்லை

2 மில்லியன் மக்களின் மரணத்திற்கு காரணானவராக இருந்தபோதிலும், போல் பாட் ஒருபோதும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. 1979-இல் வியட்நாமியப் படைகளால் தூக்கியெறியப்பட்ட பிறகு, அவர் காட்டிற்கு தப்பிச் சென்று பல ஆண்டுகளாக கிளர்ச்சியைத் தொடர்ந்து வழிநடத்தினார். 1997 ஆம் ஆண்டில், போல் பாட் கெமர் ரூஜிலிருந்து தப்பியோடியவர்களால் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். ஒரு வருடம் கழித்து, ஏப்ரல் 1998 இல், போல் பாட் மாரடைப்பால் இறந்ததாகக் கூறப்படுகிறது. அவர் செய்த குற்றங்களுக்காக அவர் ஒருபோதும் முறையாக விசாரிக்கப்படவில்லை அல்லது தண்டிக்கப்படவில்லை.

Story first published: Monday, September 22, 2025, 13:36 [IST]
Desktop Bottom Promotion