ஒரே பதக்கத்தால் உச்சத்திற்கு போன பாகிஸ்தான் வீரர் வாழ்க்கை...தங்கம் வென்றதற்கு கிடைத்த பரிசுகள் என்ன தெரியுமா?

Olympics 2024: ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கும் நிலையில் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவால் இந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வெல்ல முடியவில்லை. இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனைப் படைத்தார்.

அதே போட்டியில் பாகிஸ்தானின் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம், 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்கப் பதக்கம் வென்ற பிறகு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். நீரஜ் சோப்ராவின் நண்பரான அர்ஷத் சிறப்பாக ஈட்டி எறிந்து 92.97 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை உறுதி செய்தார். கடந்த ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றார்.

Olympics 2024 Gifts Pakistani Olympian Arshad Nadeem Has Got After Olympics

ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றால் அளவிலா பரிசுகளை அள்ளிக்கொடுக்கும். அதற்கு அர்ஷத் நதீமும் விதிவிலக்கல்ல. தங்கப் பதக்கம் வென்றதைத் தொடர்ந்து, அர்ஷத் நதீம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பரிசுகளைப் பெற்று வருகிறார். அவரின் பல ஆண்டு கால முயற்சியும், இந்த ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் அவருடைய பொருளாதார நிலையை ஒரே நாளில் மாற்றி விட்டது.

இருப்பினும், தங்கத்தை வெல்வதற்கு முன்பு, அவரது மொத்த சொத்துக்கள் சுமார் பாகிஸ்தான் நாணய மதிப்பில் 80 லட்சம என்று பல ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு முன்பு, அர்ஷத் ஒரு சுஸுகி கார் மட்டுமே வைத்திருந்ததாகவும். இப்போது, ​​அவர்இப்போது பல கோடிகளுக்கு அதிபதியாக குறிப்பிடத்தக்க பணக்காரர் ஆகிவிட்டார்.

பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றதற்கு வெகுமதியாக, அர்ஷத் $50,000 பரிசாகப் பெற்றார், அதாவது தோராயமாக இந்திய மதிப்பில் 42 லட்சம் பெற்றார். கூடுதலாக, பாகிஸ்தானின் பஞ்சாப் அரசாங்கம் 100 மில்லியன் பாகிஸ்தான் பணத்தை வெகுமதியாக அறிவித்தது, மேலும் பஞ்சாப் ஆளுநர் சர்தார் சலீம் ஹைதர் கான் அவருக்கு கூடுதலாக 2 மில்லியன் வழங்க உள்ளார். சிந்து மாகாண முதலமைச்சர் மற்றும் கராச்சி மேயர் இருவரும் இணைந்து 50 மில்லியன் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர், மேலும் சிந்து மாகாண ஆளுநர் கம்ரான் டெசோரி அவருக்கு 1 மில்லியன் வழங்குகிறார். மேலும் பலரும் அர்ஷத் நதீமுக்கு பரிசுத்தொகையை அறிவித்து வருகின்றனர்.

மொத்தத்தில், அர்ஷத் நதீம் தனது ஒலிம்பிக் தங்கப் பதக்கத்திற்காக சுமார் 280 மில்லியன் வெகுமதியாகப் பெறுவார் என்று ஒரு ஊடக அறிக்கை கூறுகிறது. இதன் இந்திய மதிப்பு 8 கோடியாகும். மேலும், அவரது மாமனார் அவருக்கு எருமை மாடு தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார், மேலும் ஒரு தொழிலதிபர் அவருக்கு ஆல்டோ காரை வழங்கியுள்ளார். HONDA நிறுவனம் அவர் ஈட்டி எறிந்த தூரமான 92.97 மீட்டரை நினைவு கூறும் வகையில் PAK 9297 என்ற எண்ணுடைய Honda Civic Car-யை வழங்குகிறது. அதேபோல TOYOTA நிறுவனம் Corolla Cross Hybrid Electric காரை வழங்குகிறது.

நதீமின் மாமனார் அவருக்கு எருமை மாட்டை பரிசளிப்பதற்கு பின்னால் முக்கிய காரணம் உள்ளது. இது பாரம்பரிய மற்றும் இதயப்பூர்வமான பரிசு, பாரிஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் 92.97 மீட்டர் தூரம் எறிந்து சாதனை படைத்த நதீமின் நம்பமுடியாத சாதனையை கொண்டாடுகிறது.
எருமையைப் பரிசளிப்பது அவர்களின் கிராமப்புற சமூகத்தில் "மிகவும் மதிப்புமிக்கது" மற்றும் "கௌரவமானது" என்று அவரது மாமனார் கூறுகிறார்.

நதீமின் மாமனாரின் பாரம்பரிய பரிசு அவரது குடும்பம் மற்றும் கிராமம் உணர்ந்த பெருமை மற்றும் மரியாதையை குறிக்கிறது. முஹம்மது நவாஸ் ஒரு எருமை மாட்டை பரிசளிக்கும் செயல், அவர்களின் கலாச்சாரத்தில் பொதிந்துள்ள ஆழமான மரியாதை மற்றும் மதிப்பை வெளிப்படுத்துகிறது, மேலும் நதீமின் வேர்களுடனான வலுவான பிணைப்பை மேலும் கோடிட்டுக் காட்டுகிறது.

அர்ஷத் நதீம் பாகிஸ்தானின் பஞ்சாபில் உள்ள மியான் சன்னுவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தார். அர்ஷத் 2015 இல் ஈட்டி எறிதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார். பிப்ரவரி 2016 இல் கவுகாத்தியில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் இறுதிப் போட்டிக்கு வந்தாலும், அவர் பதக்கம் வெல்லவில்லை, ஐந்தாவது இடத்தை மட்டுமே பிடித்தார். ஆனால் நீண்ட கால பயிற்சி மற்றும் விடாமுயற்சிக்குப் பின் தற்போது பாகிஸ்தானின் அரை நூற்றாண்டு தங்கப்பதக்க கனவை நிறைவேற்றியுள்ளார்.

Story first published: Tuesday, August 20, 2024, 21:32 [IST]
Desktop Bottom Promotion