Latest Updates
-
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் -
ட்ராபிக் சிக்னலில் ஏன் உலகம் முழுக்க சிவப்பு, மஞ்சள், பச்சை நிறம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
முட்டைக்கோஸ் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பிரியாணி செஞ்சு பாருங்க - கமகமனு சூப்பரா இருக்கும் -
July 2026 Horoscope: இந்த 4 ராசிக்காரங்க ஜூலை மாதத்தில் கொடிகட்டி பறக்கப்போறாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா?
நவராத்திரி 3 ஆம் நாளில் சந்திரகாந்தா தேவியின் அருள் பெற சொல்ல வேண்டிய மந்திரம் என்ன-ன்னு தெரியுமா?
Navratri 2023: நவராத்திரி என்பது துர்கா தேவிக்காக கொண்டாடப்படும் ஒரு சிறப்பு திருவிழா ஆகும். இதில் அவரது ஒன்பது அவதாரங்களையும் வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றனர். இந்த நவராத்திரியில் இன்னும் வேறுபட்ட விஷயங்கள் உள்ளன. அதில் நவராத்திரியின் மூன்றாம் நாளில் சந்திரகாந்தா தேவிக்கு பூஜைகள் செய்து வணங்கப்படுகிறது.
சந்திர காண்டா என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு "மணி வடிவ அரை நிலவைக் கொண்டவர்" என்பது பொருள். துர்கா தேவியின் மூன்றாவது அவதாரம் இது. சந்திரகாந்தா தேவி என்பது தனது நெற்றியில் ஒரு அரை நிலவை அணிந்து காட்சி அளிக்கிறார்.

துர்கா தேவி திருமணம் ஆன பிறகு தனது நெற்றியில் பிறை வடிவ திலகம் அணிவதை குறிக்கிறது. இப்போது மூன்றாம் நாளில் வழிபடப்படும் சந்திரகாந்தா தேவிக்குரிய பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம்.
பூஜை விதி
நவராத்திரியின் மூன்றாம் நாளில் பிரம்ம முகூர்த்தத்தில் அதிகாலையில் எழுந்து உங்கள் வீட்டைச் சுத்தம் செய்து கொள்ளுங்கள். இப்பொழுது சுத்தமான நெய்யில் தீபம் ஏற்றி "ஓம் தேவி சந்திரகண்டாயை நம" என்ற மந்திரத்தைச் சொல்லி பூஜையைத் தொடங்க வேண்டும். அதன் பிறகு அம்மனை மலர்கள், நறுமணம், தூபம், அக்ஷதை, குங்குமம் மற்றும் பால் சார்ந்த உணவுகளை வழங்கி பூஜிக்க வேண்டும். அதன் பிறகு ஆர்த்தி எடுப்பது மிகவும் அவசியம்.
சந்திரகாந்தா தேவி தேவிக்குரிய பூஜை மந்திரம்
யா தேவீ ஸர்வபூதேஷு மா சந்திரகாந்தா தேவி
ரூபாண ஸம்ஸ்ஸிதா । நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நம.
ஓம் தேவி சந்த்ரகாண்டா நம
ஓம் தேவி சந்த்ரகாண்டாயை நமஹ பிண்டஜ் ப்ரவாரூத் சந்த்கோபஸ்த்ர்கைர்யுதா
ப்ரஸாதம் தநுதே மத்யம் சந்திரகாந்தா தேவிந்தேதி விஸ்ருதா ॥
சந்திரகாந்தா தேவி பிரசாதம்
சந்திரகாந்தா தேவிக்கு பூஜையின் போது பாயாசம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சந்திரகாந்தா தேவி தன்னை வணங்குபவர்களுக்கு கருணை, தைரியம் மற்றும் வலிமையை வழங்குபவள். சந்திரகாந்தா தேவி பிரச்சினைகளை தீர்க்க கூடியவள். நாம் நிறைவான வாழ்க்கையை வாழ உதவி செய்பவள். உறுதி, தெய்வீகம் மற்றும் தூய்மை ஆகியவற்றை வழங்குபவள். எனவே இந்த நவராத்திரியின் 3 ஆவது நாளில் சந்திரகாந்தா அம்மனின் ஆசியை பெறுவது அவசியம்.
மா சந்திரகாந்தா தேவிக்கு பிடித்த மலர்
நவராத்திரியின் மூன்றாம் நாளில் மல்லிகைப் பூக்களால் அர்ச்சனை செய்து சந்திரகாந்தா தேவியை பக்தியுடனும், தியானத்துடனும் வழிபட வேண்டும். பதினாறு வகையான பிரசாதங்கள் படைத்து தேவியை அருள் வேண்டி வழிபட வேண்டும்.
சந்திரகாந்தா தேவியின் வடிவம்
இந்து மதத்தில், சந்திரகாந்தா தேவி என்பது துர்கா தேவியின் மூன்றாவது வடிவம் ஆகும். அவரது பெயர் சந்திரனின் மணி என்று பொருள்படுகிறது. இது அவரது நெற்றியை அலங்கரிக்கும் அரை நிலவைக் குறிக்கிறது. கூடுதலாக, அவள் சந்திரகாந்தா தேவி, சண்டிகா அல்லது ரான்சண்டி என்றும் அழைக்கப்படுகிறாள். இது அவளுடைய திருமணமான வடிவத்தையும் குறிக்கிறது.
அவள் பத்து கைகளை உடையவளாக சித்தரிக்கப்படுகிறாள், அங்கு அவள் கைகளில் திரிசூலம் (திரிசூலம்), கட (மேஸ்), வில்-அம்பு, வாள், தாமரை மலர், மணி மற்றும் கமண்டலம் (தண்ணீர் பாத்திரம்) ஆகியவற்றை வைத்து காட்சி தருகிறாள். அவள் சிங்கம்/புலி மீது சவாரி செய்து ஒளிரும் தங்க நிற மேனியை கொண்டு ஜொலிக்கிறாள்.



Click it and Unblock the Notifications