Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
22 போர்களில் தொடர்ந்து வெற்றிபெற்ற இந்தியாவின் சிறந்த அரசர் இவர்தானாம்... கடைசில இவருக்கு என்னாச்சு தெரியுமா?
இந்திய வரலாற்றில் முகலாயர்களின் காலம் என்பது மிகவும் முக்கியமானது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன் கிட்டதட்ட 300 ஆண்டுகள் முகலாயர்கள் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தனர். முகலாயப் பேரரசு இந்தியா மீது தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு முன்பு, வீரமிக்க இந்து ஆட்சியாளரான ஹெமு விக்ரமாதித்யா, டெல்லியின் அரியணையில் அமர்ந்து சில காலம் ஆட்சி செய்தார்.
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஹெமு, தனது அசாத்திய இராணுவத் திறன்கள் மற்றும் மூலோபாயத் திறமையால் விரைவில் வாழ்க்கையில் உயர்ந்தார். சூரி வம்சத்தின் கீழ் பிரதம அமைச்சராகவும் தளபதியாகவும் பணியாற்றினார், ஏராளமான போர்களில் வெற்றி பெற்றார்.

1556 இல், அவர் முகலாயர்களை தோற்கடித்து, டெல்லியின் சுதந்திர ஆட்சியாளராக தன்னை அறிவித்தார். அவரது தலைமைத்துவ திறன்களும், போர்க்கள தந்திரங்களும் அவருக்கு "இந்தியாவின் நெப்போலியன்" என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தன. இருப்பினும், அவரது ஆட்சி குறுகிய காலமே நீடித்தது, ஏனெனில் முகலாயர்களால் தோற்கடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.
ஹெமுவின் ஆரம்பகால வாழ்க்கை
ஹெமு 1501 ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ஆல்வாரில் உள்ள ராஜ்கர் அருகே உள்ள மச்சேரி கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை பூரான் தாஸ் ஒரு பண்டிதராகவும் மற்றும் ஆழ்ந்த மதவாதியாகவும் விளங்கினார். வாழ்க்கையின் பிற்பகுதியில், பூரான் தாஸ் ஒரு துறவியாக மாறி பிருந்தாவனத்திற்கு குடிபெயர்ந்தார்.
வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளைப் பெற ஹெமுவின் குடும்பம் ரேவாரியில் (தற்போதைய ஹரியானாவில்) உள்ள துஷர் பிராமணர்களின் கிராமமான குதாப்பூருக்கு குடிபெயர்ந்தது. ஹெமு வளர்ந்து அங்கு கல்வி பயின்றார். அவர் இந்தி, சமஸ்கிருதம், பாரசீகம் மற்றும் அரபு மொழிகளைக் கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே அவர் மல்யுத்தம் மற்றும் குதிரை சவாரி செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தார்.
ரேவாரி ஈரான், ஈராக் மற்றும் டெல்லி இடையேயான ஒரு முக்கிய வர்த்தகப் பாதையில் அமைந்திருந்தது. ஹெமு ஒரு வர்த்தகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், ஷெர் ஷா சூரியின் இராணுவத்திற்கு உணவு தானியங்களை வழங்கினார். பின்னர், துப்பாக்கி குண்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் சால்ட்பீட்டரை இராணுவத்திற்கு விற்கத் தொடங்கினார்.
ஹெமு எப்படி அதிகாரத்திற்கு உயர்ந்தார்?
ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஹெமு, தனது புத்திக்கூர்மை மற்றும் இராணுவத் திறன்கள் மூலம் புகழ் பெற்றார். அவர் அடில் ஷா சூரியின் கீழ் சூரி வம்சத்தின் பிரதம அமைச்சராகவும், தளபதியாகவும் பணியாற்றினார். வரலாற்று பதிவுகளின்படி, ஹுமாயூன் மற்றும் அவரது மகன் அக்பர் இருவரின் கீழும் முகலாயப் படைகளை எதிர்த்துப் போராட அடில் ஷாவுக்கு அவர் உதவினார். போரில் அவரது தலைமைத்துவமும், துணிச்சலும் வட இந்தியாவின் பெரும்பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அடில் ஷாவுக்கு உதவியது.
பயமறியா போர்வீரர்
ஹெமு பல போர்களில் வெற்றி பெற்றார், ஒரு சக்திவாய்ந்த இராணுவத் தளபதியாக நற்பெயரைப் பெற்றார். ஹேமு அவரது வாழ்நாளில் 22 போர்களில் வென்றார், குறிப்பாக அக்பரின் "வலிமைமிக்க இராணுவத்திற்கு" எதிரான ஒரு போர் உட்பட. அவரது எதிரிகள் கூட அவரது போர் உத்திகளைப் பாராட்டினர். அவரது இராணுவத்தந்திரம் அக்டோபர் 7, 1556 அன்று டெல்லியில் முகலாய இராணுவத்தை வீழ்த்தியது. இந்த வெற்றிக்குப் பிறகு, அவர் டெல்லியின் சுதந்திர ஆட்சியாளராக தன்னை முடிசூட்டிக் கொண்டு விக்ரமாதித்யா என்ற பட்டத்தைப் பெற்றார்.
துயரமான முடிவு
அவரது ஆட்சி குறுகிய காலமே நீடித்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, நவம்பர் 5, 1556 அன்று, அக்பரின் தளபதி பைராம் கான் தலைமையிலான முகலாயர்கள், இரண்டாவது பானிபட் போரில் அவரைத் தாக்கினர். ஹெமுவின் இராணுவம் வலுவாக இருந்தபோதிலும், போரின் போது அவரது கண்கள் அம்பினால் தாக்கப்பட்டது, இது அவரது படைகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர் சிறைபிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.



Click it and Unblock the Notifications












