200 கிராம் எடையுள்ள இதுதான் எதிர்காலத்தில் உலகையே பயமுறுத்தும் ஆயுதமாக இருக்குமாம்... அது என்ன தெரியுமா?

உலகம் தோன்றிய காலம் முதலே போர்களும் இருந்தது வருகிறது. சில நூற்றாண்டுகளுக்கு முன் கத்தியைக் கொண்டும், பாறைகளைக் கொண்டும் நடத்தப்பட்ட போர்கள் பின்னாளில் துப்பாக்கியை வைத்து நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து ஏவுகணைகள், வெடிகுண்டுகள், அணுகுண்டுகள் என போர்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருந்தன.

தற்போது அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டுகளையும் தாண்டி இணையவழி தாக்குதல்கள் உலகையே அச்சுறுத்தி வருகின்றன. ஆனால் இப்போது இவற்றை மிஞ்சிய ஒரு சக்திவாய்ந்த மற்றும் ஆபத்தான ஆயுதம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த புதிய போர் ஆயுதம் மைக்ரோ ட்ரோன். இது உங்கள் உள்ளங்கையில் பொருந்தக்கூடிய அளவுக்கு சிறியவை, ஆனால் அவற்றின் சக்தி மற்றும் தொழில்நுட்பம் மிகப்பெரிய ஆயுதங்களையும் மிஞ்சக்கூடியது.

Most Dangerous and Smallest Weapon in the World

மைக்ரோ ட்ரோன் என்றால் என்ன?

மைக்ரோ ட்ரோன் என்பது ஒரு சிறிய ஆளில்லா வான்வழி வாகனம் அல்லது ஆளில்லா விமானமாகும். அவை சில நூறு கிராம் முதல் இரண்டு கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். அவற்றில் கேமராக்கள், சென்சார்கள் மற்றும் சிறிய மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன, அவை பறக்க மட்டுமல்லாமல் அதிக உயர கண்காணிப்பையும் செய்ய உதவுகின்றன. இந்த மைக்ரோ ட்ரோன்கள் உளவு பார்த்தல், கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை எதிரி நாடுகளுக்குள் நுழைந்து வீடியோ பதிவுகள், இருப்பிட கண்காணிப்பு மற்றும் பிற முக்கிய தகவல்களைச் சேகரிக்கின்றன.

நூற்றுக்கணக்கான மைக்ரோ ட்ரோன்கள் ஒரு இராணுவத்தை உருவாக்கும்

பல மைக்ரோ ட்ரோன்கள் ஒன்றாக இணையும் போது, ​​அவை ஸ்வார்ம் ட்ரோன்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை ஒரே நேரத்தில் இலக்குகளைத் தாக்கலாம் அல்லது அந்த பகுதியைப் பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்கலாம். அவை அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் அவை ரேடார் அல்லது வழக்கமான பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து கண்ணுக்குத் தெரியாததாக மாற்றுகிறது, இதனால் எதிர்காலப் போர்களில் அவை மிகவும் ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படுகின்றன.

போர்க்களத்தில் மைக்ரோ ப்ரோன்களின் பங்கு

அமெரிக்கா, ஈரான், சீனா, துருக்கி, ரஷ்யா மற்றும் இஸ்ரேல் உட்பட உலகின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய நாடுகளும் இப்போது மைக்ரோ ட்ரோன்களை தங்கள் இராணுவத்தில் இணைத்துள்ளன. கடந்த காலங்களில் அவை கண்காணிப்புக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டன, ஆனால் இப்போது அவை தாக்குதல்களிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. சமீபத்தில், ரஷ்யா உக்ரைனில் ஒரு ட்ரோன் தாக்குதலைத் தொடங்கியது, மின்மாற்றிகளை குறிவைத்து தாக்கி முழு பிராந்தியத்தையும் இருளில் ஆழ்த்தியது. இந்த ஸ்வார்ம் தாக்குதல்கள் "டெத் ஸ்வார்ம்" என்று அழைக்கப்படுகின்றன, அவற்றிலிருந்து தப்பிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஸ்வார்ம் ட்ரோன்கள் எவ்வாறு செயல்படுகின்றன?

ஸ்வார்ம் ட்ரோன்கள் முழுமையாக செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கம்ப்யூட்டர் நெட்வொர்க்குகள் மூலம் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ட்ரோனும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு, அவற்றை உயிருள்ள அமைப்பைப் போல செயல்பட வைக்கிறது. முதலில் பணி திட்டமிடப்படுகிறது, பின்னர் அனைத்து ட்ரோன்களும் ஒரே நேரத்தில் பறக்கவிடப்படுகின்றன. புறப்பட்ட பிறகு, அவை தங்கள் சென்சார்கள் மற்றும் கேமராக்கள் மூலம் இலக்குகளை அடையாளம் கண்டு, தேவையைப் பொறுத்து, தாக்குகின்றன அல்லது தகவல்களை திருப்பி அனுப்புகின்றன. ஒருவேளை ஒரு ட்ரோன் அழிக்கப்பட்டாலும், மீதமுள்ள ட்ரோன்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் பணியைத் தொடர்கின்றன. இதனால்தான் ஸ்வார்ம் தொழில்நுட்பம் எதிர்கால போர்களின் போக்கை வடிவமைக்கும் சக்தியாக உள்ளது.

Desktop Bottom Promotion