Latest Updates
-
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க லட்சங்களை குவிக்கப் போறாங்களாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்..
Manmohan Singh: மன்மோகன் சிங் பிரதமராக இருந்து செய்த நம்ப முடியாத முக்கிய சாதனைகள்...!
இந்திய பொருளாதாரத்தின் சிற்பியான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92-வது வயதில் நேற்று இரவு காலமானார். நீண்ட காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், நேற்று மாலை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் அவரது மரணத்தை மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
டாக்டர். மன்மோகன் சிங், 2004 முதல் 2014 வரை இந்தியாவின் 13வது பிரதமராகப் பணியாற்றிய சிறந்த பொருளாதார நிபுணராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். 1990களின் முற்பகுதியில் அவர் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார், அந்த காலகட்டத்தில் இந்தியாவின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் மற்றும் புதிய கொள்கை திசைகளை வடிவமைப்பதில் அவர் முக்கியப் பங்காற்றினார். இந்த பதிவில் டாக்டர். மன்மோகன் சிங் தனது வாழ்நாளில் செய்த சிறப்பான சாதனைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி
டாக்டர். மன்மோகன் சிங் 1991 இல் இந்தியாவின் நிதி அமைச்சராகவும், பின்னர் பிரதமராகவும் இருந்த காலம் இந்தியாவில் சிறப்பான பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டது. இந்தியாவின் தாராளமயமாக்கல் செயல்பாட்டின் போது அவரது தலைமையானது சிறப்பான செயல்பாடுகள் மூலம், வெளிநாட்டு முதலீட்டை ஈர்த்தது, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை குறைத்தது மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கணிசமாக உயர்த்தியது.
அவரது வழிகாட்டுதலின் கீழ், 2010-11 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 10.03% என்ற வரலாற்று உச்சத்தை எட்டியதன் மூலம், உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா உருவானது, இது சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா அடைந்த மிகப்பெரிய வளர்ச்சியாகும்.
சமூக நலத் திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்பு
டாக்டர். மன்மோகன் சிங்கின் அரசாங்கம் பொருளாதார முன்னேற்றங்கள் மட்டுமின்றி மில்லியன் கணக்கான இந்தியர்களின் வறுமைக் குறைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.
இந்த இலட்சியத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் உருவாக்கபட்ட திட்டம்தான் தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (NREGA), பின்னர் இது MGNREGA என மறுபெயரிடப்பட்டது, இது கிராமப்புற குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை வாய்ப்பை உறுதி செய்தது. கூடுதலாக, சுகாதாரம், கல்வி மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல சமூக நலத் திட்டங்களை மன்மோகன் சிங்கின் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது.
தகவல் அறியும் உரிமை (RTI) சட்டம்
2005 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் அரசாங்கம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது, இது அரசாங்கத்திடமிருந்து தகவல்களைப் பெற குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு முக்கிய சட்டமாகும்.
இப்போது இந்தியாவில் பல ஊழல்கள் வெளிவர காரணமாக இருப்பது இந்த சட்டம்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முன்முயற்சி இந்தியாவில் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தியது, மேலும் அரசாங்கத்தை பொதுமக்களின் கேள்விக்கு பதிலளிக்கக்கூடியதாகவும், இந்தியாவில் ஜனநாயகத்தை மேம்படுத்தவும் வழிவகுத்தது.
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்
இந்தியா-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் மன்மோகன் சிங் முக்கிய பங்கு வகித்தார், இது அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையொப்பமிடாத சூழ்நிலையிலும் சிவில் அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருளை அணுக இந்தியாவை அனுமதித்தது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சர்வதேச அந்தஸ்தை உயர்த்தியது, அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியது மற்றும் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவியது.
உலகளாவிய உறவுகளை வலுப்படுத்தியது
டாக்டர். மன்மோகன் சிங், பொருளாதார கூட்டணி மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தி, உலகளாவிய சக்திகளுடன் இந்தியாவின் இராஜதந்திர உறவுகளை மேம்படுத்துவதை வலியுறுத்தினார். அவரது தலைமையில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் அண்டை நாடான பாகிஸ்தான் போன்ற நாடுகளுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்தியது. இது உலக அரங்கில் இந்தியாவை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக நிலைநிறுத்தியது.



Click it and Unblock the Notifications












