Latest Updates
-
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...
இந்தியாவின் இரும்பு அரசர் என்று அழைக்கப்பட்ட வலிமை வாய்ந்த அரசர் யார் தெரியுமா? அவர் யாரை எதிர்த்தார் தெரியுமா
இந்திய வரலாறு பல்வேறு சிறந்த ஆட்சியாளர்களைக் கொண்டுள்ளது. மகாராணா பிரதாப் அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஆவார். மகாராணா பிரதாப் ஒரு சிறந்த ராஜபுத்திர மன்னர் ஆவார். அவர் இன்றைய ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள மேவார் ராஜ்ஜியத்தை 1572 முதல் 1597 வரை சிறப்பாக ஆட்சி செய்தார். மகாராணா பிரதாப் மே 9, 1540 அன்று ராஜஸ்தானில் உள்ள கும்பல்கரில், மகாராணா உதய சிங் II மற்றும் ராணி ஜீவந்தன் கன்வார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
தனது ஆட்சிக்காலத்தில், மகாராணா பிரதாப் அக்பரின் மிகப்பெரிய முகலாய படை உட்பட பல சவால்களை எதிர்கொண்டார். அவர் முகலாயர்களுக்கு அடிபணிய மறுத்து, அதற்குப் பதிலாக தனது ராஜ்ஜியத்தின் சுதந்திரத்திற்காக தொடர்ந்து போரிட்டார். 1576-ல் நடந்த ஹல்திகாட்டிப் போர், மகாராணா பிரதாப் முகலாயர்களுக்கு எதிராகப் போரிட்ட மிகவும் பிரபலமான போர்களில் ஒன்றாகும். எண்ணிக்கையிலும் ஆயுத பலத்திலும் பின்தங்கியிருந்ததால், அவர் இறுதியில் அந்தப் போரில் தோல்வியடைந்தார். இன்று அவரின் நினைவு நாளாகும். ராஜபுத்திரர்களின் பெருமையாக விளங்கிய மகாராணா பிரதாப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரும்பு மனிதர்
மகாராணா பிரதாப், இந்தியாவின் மிகவும் வலிமையான அரசர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். 7 அடி 5 அங்குல உயரத்தில் இருந்த அவர், 80 கிலோகிராம் எடை கொண்ட ஒரு ஈட்டியையும், மொத்தம் சுமார் 208 கிலோகிராம் எடையுள்ள இரண்டு வாள்களையும் வைத்திருப்பார் என்று கூறப்படுகிறது. மேலும், அவர் 72 கிலோகிராம் எடையுள்ள கவசத்தையும் அணிந்திருப்பார்.
அரியணைக்கான போர்
மகாராணா பிரதாப் அரியணை ஏறியது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. முகலாயப் பேரரசர் அக்பரிடம் உதய சிங் தோற்ற பிறகு, பிரதாப்பின் சிற்றன்னையான ராணி தீர்பாய் அவரது மகனான குன்வர் ஜக்மலை அரசனாக்க விரும்பினார். 1568-ல் அக்பர் சித்தோர்கர் கோட்டையைக் கைப்பற்றினார், மேலும் மேவார் அரச குடும்பத்தினர் உதய்பூரில் தஞ்சம் புகுந்தனர். நீண்ட மோதலுக்கும் விவாதத்திற்கும் பிறகு, ஜக்மல் ஒரு தகுதியற்ற ஆட்சியாளர் என்று அரசவை உணர்ந்ததால், பிரதாப் அரசராக முடிசூட்டப்பட்டார்.
உள்நாட்டு அழுத்தம்
முகலாயர்களுடன் போரிடுவதற்கு முன்பு, பிரதாப் தனது உள்நாட்டு எதிரிகளை சமாளிக்க வேண்டியிருந்தது. அவரது ஆட்சிக்காலத்தில் கிட்டதட்ட அனைத்து ராஜபுத்திர வம்சங்களும் அக்பரிடம் சரணடைந்து, அவரது அவையின் உறுப்பினர்களாகியிருந்தனர். மகாராணா பிரதாப்புடன் அமைதியான கூட்டணியை உருவாக்குவதற்காக, அக்பர் ஆறு தூதுக்குழுக்களை அனுப்பியிருந்தார்.
அக்பரின் கோபம்
ஐந்தாவது தூதுக்குழுவிற்குப் பிறகு, அக்பரின் சமாதானத் தூதை நிராகரிப்பதற்காக பிரதாப் தனது மகன் அமர் சிங்கை முகலாய அரசவைக்கு அனுப்பினார். மகாராணா பிரதாப் முகலாயப் பேரரசரை சந்திக்க வராததால், அக்பர் கோபமடைந்தார். இந்த எதிர்ப்பின் காரணமாக, அக்பர் பிரதாப்புடன் போரிட முடிவு செய்தார்.
போருக்கு தயாருகுதல்
மகாராணா பிரதாப்பின் போர்த்திறமை 1576 ஆம் ஆண்டு நடந்த ஹல்திகாட்டி போரின் போது வெளிப்பட்டது. முகலாயப் பேரரசர் அக்பர், தனது ராஜபுத்திரப் படைத் தளபதிகளில் ஒருவரான மான் சிங் I மற்றும் ஆசஃப் கான் I ஆகியோரை பிரதாப்பைத் தாக்குமாறு கட்டளையிட்டார். மான் சிங்கும் ஆசஃப் கானும் முகலாயப் படையின் பாதி அளவுள்ள ஒரு படையைத் திரட்டி, உதய்பூரிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு மலைப்பாதையான ஹல்திகாட்டி என்னுமிடத்தில் போர் புரிந்தனர். இருப்பினும், மகாராணா பிரதாப் அந்தப் போரில் வெற்றி பெற்றார்.
மகாராணா பிரதாப்பின் பெரும் படை
முகலாயர்களின் பெரும் படைக்கு நிகராக, பிரதாப், குவாலியரின் ராம் ஷா தன்வார் மற்றும் அவரது மூன்று மகன்கள், ராவத் கிருஷ்ணதாஸ்ஜி சுண்டாவத், மான் சிங்ஜி ஜாலா மற்றும் மார்வாரின் சந்திரசேனஜி ரத்தோர், ஆப்கானியத் தலைவர் ஹக்கீம் கான் சூர் மற்றும் ராவ் பூஞ்சாவின் தலைமையில் பீல் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு சிறிய படை உட்பட பெரும் படையைத் திரட்டியிருந்தார்.
ஹல்திகாட்டிப் போர்
ஹல்திகாட்டி போர் ஜூன் 18, 1576 அன்று நான்கு மணி நேரம் நடைபெற்றது. முகலாயப் படைகள் பிரதாப்பின் சகோதரனான சக்தி சிங் என்பவரை துரோகியாக மாற்றினார்கள். சக்தி சிங் முகலாயர்களுக்கு அவர்களின் இரகசியப் பாதை பற்றித் தெரிவித்தார். முகலாயக் குதிரைப்படைக்கு முதலாம் மான் சிங் தலைமை தாங்கினார், அந்த படை முதலில் ராஜபுத்திர வீரர்களால் தோற்கடிக்கப்பட்டது. பிரதாப் தானே மான் சிங்கை கொல்ல முடிவு செய்து, தனது சேதக் என்ற போர்க்குதிரையில் மான் சிங்கின் யானையை நோக்கிச் சென்றார். ஆனால் மான் சிங்கின் யானையால் சேதக்கும் பிரதாப்பும் காயமடைந்தனர். இதைக் கண்ட மேவார் படைப்பிரிவினர் நம்பிக்கையிழந்தனர்.
இருப்பினும், முகலாயப் படையைக் குழப்புவதற்காக, பிரதாப்பின் தளபதியான மான் சிங் ஜாலா, பிரதாப்பின் கவசங்களை மாற்றிக்கொண்டார். சேதக் குதிரை, ஹல்திகாட்டி கணவாய் வழியாகத் தப்பிக்க முயன்றது, ஆனால் முகலாய வில் வீரர்களால் கொல்லப்பட்டது. தனது குதிரையின் மரணத்தைப் பற்றிக் கேட்டு பிரதாப் பேரதிர்ச்சி அடைந்தார். தனது தவறை உணர்ந்த சக்தி சிங், பிரதாப் தப்பிப்பதற்காகத் தனது சொந்தக் குதிரையை அவருக்கு வழங்கினார்.
அக்பரின் நேரடி தலையீடு
போருக்குப் பிறகு, அக்பரே நேரடியாகத் தலைமை தாங்கிய முகலாயப் படைகள், சித்தூர், கோகுந்தா, கும்பல்கர் மற்றும் உதய்பூர் உட்பட முழு மேவார் பகுதியையும் தொடர்ந்து கைப்பற்றின. பூந்தி வம்சத்தினர் உட்பட அனைத்து ராஜபுத்திர வம்சங்களும் அக்பரிடம் சரணடைந்தன, இதனால் பிரதாப் முற்றிலும் தனித்து விடப்பட்டார்.
சித்தூரின் மீட்பு
1579-க்குப் பிறகு, வங்காளம், பீகார் மற்றும் பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, அக்பர் மேவார் மீதான தனது பிடியைத் தளர்த்தினார். பிரதாப் இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் தனது அமைச்சர்களில் ஒருவரான தன் சிரோமணி பாமாஷா வழங்கிய பணத்தைக் கொண்டு ஒரு படையைத் திரட்டினார். பிரதாப் தனது பெரும்பாலான பகுதிகளை, குறிப்பாக கும்பல்கர் மற்றும் சித்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளை மீட்டெடுத்தார். அவர் 40,000 வீரர்களைக் கொண்ட ஒரு படையைத் திரட்டி, முகலாயர்களின் கூட்டாளியான ஜகந்நாத் கச்சாவாவிடமிருந்து கோகுண்டா, கும்பல்கர், ரந்தம்பூர் மற்றும் உதய்பூர் ஆகிய இடங்களையும் கைப்பற்றினார்.
மகாராணா பிரதாப்பின் மரணம்
பிரதாப் தனது தலைநகரை உதய்பூருக்கு தெற்கே சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சாவந்த் நகரில் மீண்டும் கட்டியெழுப்பி, தனது வாழ்நாளின் எஞ்சிய காலத்தை அங்கேயே கழித்தார். இறுதியாக மகாராணா பிரதாப், வேட்டையின் போது ஏற்பட்ட விபத்தில் பெற்ற காயங்களால் ஜனவரி 19, 1597 அன்று காலமானார்.



Click it and Unblock the Notifications












