Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்...
மஹாளயா பட்சம் 2024: கோபத்தில் இருக்கும் முன்னோர்களை மகிழ்விக்க இதை செய்யுங்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி தொடங்கி, அமாவாசை திதி வரை இந்த மஹாளய பட்சம் எனப்படும் சர்வ பித்ரு பட்சம் நீடிக்கும். இந்த ஆண்டு சர்வ பித்ரு பட்சம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.. அன்றைய தினம் இறந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம், பிண்டம், ஷ்ராத்தம் போன்றவை செய்யப்படுகிறது.
இது தவிர, இறந்த தேதி தெரியாத முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த வருடம் சர்வ பித்ரு அமாவாசை அன்று சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது. சர்வ பித்ரு அமாவாசை நாளில், கோபமடைந்த உங்கள் முன்னோர்களை மகிழ்விக்க நீங்கள் இந்த விஷயங்களை செய்து அவர்களை மகிழ்விக்கலாம்.. எப்படி தெரியுமா?

தர்ப்பணம்
உங்கள் முன்னோர்கள் கோபமாக இருந்தால், மகாளய அமாவாசை அன்று நீராடிவிட்டு, உங்கள் முன்னோர்களுக்கு தண்ணீர், வெள்ளைப் பூக்கள் மற்றும் கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவை கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள். இதனால் உங்களின் முன்னோர்கள் திருப்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை..அப்படி அன்றைய தினம் தர்ப்பணம் செய்யவில்லை என்றால் அது முன்னோர்களை சென்றடையாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னோர்கள் திருப்தியற்றவர்களாகவும் கோபமாகவும் இருப்பார்களாம்...
பஞ்சபலி கர்மா பலி
மகாளய அமாவாசையில் உங்கள் முன்னோர்களுக்கு பஞ்சபலி கர்மா செய்ய வேண்டும். இதில் உணவு தயாரித்து அதில் ஒரு பகுதியை காகம், மாடு, நாய் போன்றவற்றுக்கு கொடுக்க வேண்டும். மத நம்பிக்கைகளின்படி, அந்த உணவு காகம், மாடு, நாய் போன்றவற்றின் மூலம் முன்னோர்களைச் சென்றடைகிறது. அதைப் பெற்ற பிறகு அவர்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக செல்வார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது...
குலதெய்வ வழிபாடு செய்தல்
கோபத்தில் இருக்கும் முன்னோர்களை மகிழ்விக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். அதன் பிறகு முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தங்கள் குழந்தைகளை மனதார ஆசீர்வதிப்பார்கள்.
அன்னதானம் செய்தல்
பித்ரு தோஷத்திலிருந்து விடுதலை பெற, மகாளய அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைந்து ஆசி வழங்குவார்கள்.. அவர்களின் மகிழ்ச்சி உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. .
பசு தானம்
கருட புராணத்தின் படி, அமாவாசை நாளில் முன்னோர்களை மகிழ்விக்க, அவர்களின் பெயரில் பசுவை தானம் செய்யலாம். பசுவை தானம் செய்வதன் மூலம் முன்னோர்கள் வைதரணி நதியைக் கடக்கிறார்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
இந்த ஆண்டு மஹாளய பட்சம் அமாவாசை அக்டோபர் 2 ஆம் தேதி புதன்கிழமை வருகிரது.. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் அன்றுதான் நிகழும்.
சர்வ பித்ரு அமாவாசை திதி ஆரம்பம்: அக்டோபர் 1, செவ்வாய், இரவு 9:39 மணிக்கு,
அமாவாசை திதி முடிவு: அக்டோபர் 2, புதன், மதியம் 12:18 மணிக்கு
சர்வார்த்த சித்தி யோகம்: அக்டோபர் 3, மதியம் 12:23 மாலை 6:15 மணிக்கு
ஷ்ரத்தா நேரம்: காலை 11:30 முதல் மாலை 03:30 வரை



Click it and Unblock the Notifications











