Latest Updates
-
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்!
Maha Shivaratri 2025: இந்த பாவங்களை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்க மாட்டாராம்... அவர்களுக்கு தண்டனை உறுதி...!
Maha Shivaratri 2025: இந்து மதத்தின் மிகவும் முக்கியமான கடவுள்களில் ஒருவர் சிவபெருமான். மற்ற கடவுள்களைப் போலவே அல்லாமல் சிவபெருமான் குறைந்தபட்ச வேண்டுதல் மற்றும் காணிக்கைகளிலேயே திருப்தி அடையக்கூடிய தெய்வமாக அறியப்படுகிறார்.
தினமும் சிவலிங்கத்திற்கு வெறும் தண்ணீரால்அபிஷேகம் செய்தால், அதுவே சிவபெருமானை மகிழ்விக்க போதுமானது. இந்து மதத்தில் சிவபெருமான் அழிக்கும் கடவுளாக அறியப்பட்டாலும், அவர் மிகவும் அன்பான கடவுளாவார். அதனால்தான் அவர் போல்நாத் என்றும் அழைக்கப்படுகிறார், அதன் அர்த்தம் "அப்பாவி தெய்வம்" என்பதாகும்.

சிவபெருமான் அன்பான தெய்வமாக கருதப்பட்டாலும் சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்காத சில பாவங்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. இந்து மதம் சில பெரிய பாவங்களைப் பற்றி குறிப்பிடுகிறது, இந்த பாவங்கள் எண்ணங்கள், பேச்சு அல்லது செயலால் செய்யப்படலாம். இந்த பாவங்களை செய்தவர்களை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்க மாட்டார், அவர்களுக்கு கடுமையான தண்டனைக் கொடுப்பார் . அவை என்னென்ன பாவங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மற்றவர்களின் செல்வத்தை விரும்புதல்
மற்றொருவரின் பணத்தை ஒருபோதும் தவறாகப் பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது. அதேபோல ஒருவருக்கு நீங்கள் கடன்பட்ட பணத்தை திருப்பிச் செலுத்த மறக்காதீர்கள். ஒருவர் ஒருபோதும் மற்றொருவரின் செல்வத்தின் மீது ஆசைப்படக்கூடாது. இதன் விளைவாக சிவன் அதிருப்தி அடைகிறார் மற்றும் அவர்களை தண்டிப்பார்.
மற்றவர்களின் மனைவி மீது ஆசைப்படுவது
மற்றொருவரின் திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சிப்பது சிவபெருமானால் பெரும் பாவமாகக் கருதப்படுகிறது. ஒருவர் மற்றொருவரின் மனைவியை சொந்தமாக்கிக் கொள்ள ஆசைப்படவோ அல்லது வேறு எந்த வகையிலும் அவர்களின் உறவில் பிரச்சினைகளை உருவாக்கவோ முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர்கள் மரணத்திற்குப் பிறகு பெரிய தண்டனைகளை சந்திக்க நேரிடும்.
மற்றவர்களுக்கு எதிராகத் தீய திட்டங்களைத் தீட்டுதல்
மற்றவர்களின் வெற்றியைத் தடுக்க நினைப்பதும் அதற்காக திட்டமிடுவதும் சிவபெருமானுக்குப் பிடிக்காத செயல்களாகும். மற்றவர்களுக்கு எதிராகத் தீய திட்டங்களைத் தீட்டுபவர்களையோ அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியை அழிக்க முயற்சிப்பவர்களையோ சிவபெருமான் ஒருபோதும் பாராட்டுவதில்லை. தன்னைப் போலவே அப்பாவி மக்களை சிவபெருமான் ஆசீர்வதிக்கிறார்.
தீய வழிகளில் நடப்பவர்கள்
சிலர் தீய செயல்களில் ஈடுபடுவது அல்லது சமூகத்தில் பதட்டத்தை உருவாக்குவது போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட நாட்டத்தைக் கொண்டுள்ளனர். சிவபெருமான் இந்த சமூக விரோத சக்திகளை துளியும் விரும்புவதில்லை.
பெண்களை அவமதிப்பது
ஒரு பெண்ணை அவமதிப்பது லட்சுமி தேவியை அவமதிக்கும் செயலாகும், அதனால்தான் பெண்கள் மகிழ்ச்சியில்லாத வீட்டை விட்டு லட்சுமி தேவி வெளியேறுகிறார். இது சிவபெருமானை கோபப்படுத்தும் செயலாகும். பெண்கள் மதிக்கப்படாத வீட்டில் எந்த கடவுளும் தங்கமாட்டார் என்று சாணக்கியர் கூறியுள்ளார். சிலர், அறியாமையால், பெண்கள் மீது மோசமான மற்றும் ஆரோக்கியமற்ற கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள், இது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், சிவபெருமானை அதிருப்தி அடையச் செய்கிறது.
மற்றவர்களை அவமதிப்பது
சமூகத்தில் மற்றொருவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் யாராவது கெடுக்க முயன்றால், அது சிவபெருமானை கோபப்படுத்தக்கூடும். ஒருவரை அவதூறு செய்ய முயற்சிப்பது பாவமாக அவர் கருதுகிறார். மற்றவர்களுக்கு எதிராக பொய்களைப் பயன்படுத்துவதும் வதந்திகளைப் பரப்புவதும் அவரது பார்வையில் தவறு. ஒருவரின் முதுகுக்குப் பின்னால் பேசுவதும் இதில் அடங்கும்.
போதைப்பொருள் உபயோகிப்பது
சிவபெருமான் அவரது பக்தர்கள் மது, போதைப்பொருள் போன்றவற்றுக்கு அடிமையாவதை பாவச் செயலாகக் கருதுகிறார். அது ஒருவரின் உடலை அழிக்கிறது, எனவே, அவரைச் சேர்ந்தவர்களின் வாழ்க்கையையும் அழிக்கிறது.



Click it and Unblock the Notifications
