இந்தியாவில் மர்மமாக காணாமல் போன நகரங்கள் என்னென்ன தெரியுமா? இதில் ஒரு தமிழ்நாட்டு நகரமும் இருக்கு...!

உலகம் தோன்றிய காலம் முதலே உலகின் வரலாறு என்பது தொடர்ந்து உருவாக்கபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிற்கும் நீண்ட நெடிய வரலாறு உள்ளது. ஆனால் வரலாற்றுத் தகவல்களை நாம் எளிதில் தெரிந்து கொள்ள முடியாது. அதற்கு நமக்கு உதவியாக இருக்கும் ஒரே கருவி அகழ்வாராய்ச்சிதான்.

அகழ்வாராய்ச்சி என்பது மனித கடந்த காலத்தின் செயல்முறைகளைப் புரிந்துகொள்வதற்கான மிகவும் சுவாரஸ்யமான வழிமுறையாகும். அகழ்வாராய்ச்சி மற்றும் வரலாற்று ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே உலகின் எந்தப் பகுதியிலும் செழிப்பான மற்றும் செழித்தோங்கிய வரலாற்று தளங்களைப் பற்றி தெரிந்து கொள்ள உதவும் ஒரே ஆதாரமாக உள்ளன.

Lost Cities in India in Tamil

இந்தியாவில் நாம் இப்போது வாழும் நாகரிகத்திற்கு முன்னால் பல மனித நாகரிகங்கள் இருந்துள்ளன. அந்த நாகரிகங்களை பற்றி நமக்கு தெரிந்து கொள்ள உதவுவது அவர்கள் வாழ்ந்த நகரங்கள்தான், ஆனால் இந்த நகரங்கள் காலப்போக்கில் மறைந்தன அல்லது மறைக்கப்பட்டன. இந்த பதிவில் இந்திய வரலாற்றில் தொலைந்து போன முக்கிய நகரங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தோலாவிரா, குஜராத்

இது சிந்து சமவெளி நாகரிகத்தின் நகரங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய தொல்பொருள் தளமாகும். இது உள்ளூரில் கோடடா டிம்பா பிராச்சின் மகாநகர் தோலாவிரா என்று அழைக்கப்படுகிறது. 1967-68 இல் ஜே.பி. ஜோஷி இந்த இடத்தைக் கண்டுபிடித்தார், 1990 முதல், இந்த தளம் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் அகழ்வாராய்ச்சியில் உள்ளது.

நீர்த்தேக்கங்கள், படிக்கட்டுக் கிணறுகள் மற்றும் முத்திரைகள், மணிகள், விலங்குகளின் எலும்புகள், தங்கம், வெள்ளி, டெரகோட்டா ஆபரணங்கள் மற்றும் பாத்திரங்கள் போன்ற பல்வேறு பழங்காலப் பொருட்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

விஜயநகர், கர்நாடகா

இந்தியாவின் தொலைந்து போன நகரங்களில் விஜயநகர் மிகவம் பிரபலமானது. இது துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாக இந்தியாவில் "ஹம்பியின் இடிபாடுகள்" என்று பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நகரத்தை சுற்றியிருக்கும் அதிகப்படியான வாகன மாசுபாடு மற்றும் கட்டுமானம் அழிவில் உள்ளது. இது ஒரு காலத்தில் தென்னிந்தியாவை ஆண்ட விஜயநகரப் பேரரசின் முக்கியமான நகரமாக இருந்தது.

பூம்புகார், தமிழ்நாடு

இது காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் காவேரிப்பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தியாவின் பண்டைய துறைமுக நகரங்களில் ஒன்றாகும். இது சோழ மன்னர்களின் தமிழகத்தின் தலைநகராகவும் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இந்த நகரம் கி.பி 500 இல் கடுமையான கடல் புயலால் அழிந்தது.

முசிரிஸ், கேரளா

இது பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள பண்டைய இந்தியாவின் மற்றொரு காணாமல் போன நகரமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எகிப்து, ஏமன், ரோமன் மற்றும் மேற்கு ஆசியா போன்ற நாடுகளைச் சேர்ந்த பல்வேறு கலைப்பொருட்களை இந்த நகரத்தில் கண்டுபிடித்துள்ளனர், இது கேரளாவின் பரந்து விரிந்த வெளி உலகத்தின் தொடர்பை வெளிப்படுத்துகிறது.

லோதல், குஜராத்

இது சிந்து சமவெளி நாகரிகத்தின் முக்கியமான நகரங்களில் ஒன்றாகும், இது 1954 இல் கண்டுபிடிக்கப்பட்டது. அகழ்வாராய்ச்சியின் போது, ​​தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நகரம் வெள்ளத்தால் அழிக்கப்பட்டதை உறுதிப்படுத்தினர், இருப்பினும் குள்ளமான சுவர்கள், மேடைகள், கிணறுகள், வடிகால், குளியல் மற்றும் நடைபாதை தளங்கள் இந்த நகரத்தில் காணப்படுகின்றன.

காளிபங்கன், ராஜஸ்தான்

காளிபங்கன் நகரம் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் நகரில் அமைந்துள்ளது. வரலாற்றாசிரியரின் கூற்றுப்படி, இது சிந்து சமவெளி நாகரிகத்தின் மாகாண தலைநகராக இருந்தது. இந்த நகரத்தில் தனித்துவமான நெருப்பு பீடங்கள் மற்றும் "உலகின் ஆரம்பகால உழவு வயல்" உள்ளது.

சுர்கோடாடா, குஜராத்

இது குஜராத்தின் கட்ச் நகரில் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இங்கு குதிரை எச்சங்களையும், சிவப்பு லேட்டரைட் மண் மேடுகளையும் கண்டுபிடித்தார். இது 1964 ஆம் ஆண்டு இந்திய தொல்லியல் துறையின் ஸ்ரீ ஜகத் பதி ஜோஷி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

துவாரகா, குஜராத்

இது இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற புனித நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரம் ஆறு முறை நீரில் மூழ்கியதாக நம்பப்படுகிறது. துவாரகாவின் கடலோரப் பகுதியில் செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சி நீரில் மூழ்கிய குடியிருப்புகள், ஒரு பெரிய கல்லால் கட்டப்பட்ட தொட்டி மற்றும் மூன்று துளைகள் கொண்ட முக்கோண கல் நங்கூரங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டடகல், கர்நாடகா

இது மலபிரபா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது மற்றும் இந்தியாவின் உலக பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். 745 ஆம் ஆண்டில் ராணி லோகமஹாதேவி காஞ்சியின் பல்லவர்களின் மீது தனது கணவரின் வெற்றியின் நினைவாக (இரண்டாம் விக்ரமாதித்யா) கட்டப்பட்ட விருபாக்ஷா கோயில் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

Desktop Bottom Promotion