Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
கெட்டிமேளம் கொட்ட வைத்திருந்த பணத்தில் தனது கிராமத்திற்கு சாலை அமைத்த புரட்சி இன்ஜினியர்...!
சுயநலவாதிகள் அதிகரித்துவிட்ட நமது சமூகத்தில் பொதுநலத்திற்காக வேலை செய்பவர்கள் அதிலும், தன்னலத்தைத் தவிர்த்து, மற்றவர்களுக்காக உதவுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.
சுயநலவாதிகள் அதிகரித்துவிட்ட நமது சமூகத்தில் பொதுநலத்திற்காக வேலை செய்பவர்கள் அதிலும், தன்னலத்தைத் தவிர்த்து, மற்றவர்களுக்காக உதவுவது என்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இந்தியாவின் சாலை வசதிகள் பற்றி சொல்லித்தான் தெரிய வேண்டுமென்ற அவசியமில்லை, ஏனெனில் அன்றாடம் சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்திய சாலைகளின் இலட்சணம் நன்கு தெரியும்.

இந்தியாவில் ஆயிரக்கணக்கான கிராமங்களுக்கு இன்னும் முறையான சாலை வசதியே இல்லை என்பது கூடுதல் கவலையளிக்கும் ஒன்று. அரசியல்வாதிகளும், அதிகாரிகளும மக்கள் மீது அக்கறையின்றி இருக்கும் இந்த காலக்கட்டத்தில் சாமானியர் ஒருவர் தன் திருமணத் தேவைக்கு வைத்திருந்த பணத்தில் பொதுமக்களுக்கு சாலையிட்டு மக்கள் மத்தியில் ஹீரோவாக மாறியிருக்கிறார்.

எவ்வளவு செலவு செய்தார்?
விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள நல்லாவூரைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் பி.சந்திரசேகரன் (31) தனது திருமணத்திற்காகச் சேமித்து வைத்திருந்த ₹10.5 லட்சத்தை கான்கிரீட் சாலை அமைப்பதற்காக செலவு செய்தார். திரு.சந்திரசேகரன் தனது முடிவு குறித்து எந்த வருத்தமும் இல்லை.

இன்ஜியரின் முடிவு
சென்னையில் உள்ள HCL டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் மூத்த தொழில்நுட்பத் தலைவர் திரு. சந்திரசேகரன், செப்டம்பர் 1ஆம் தேதி நடக்கவிருந்த தனது திருமணத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்தார். இருப்பினும், சாலையின் பரிதாப நிலை குறித்து நல்லாவூர் மக்கள் படும் துயரங்களைக் கண்டு நெகிழ்ந்தார். அந்த பணத்தை கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைக்க பயன்படுத்த முடிவு செய்தார்.

பழைய சாலையின் பரிதாப நிலை
"இது 25 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட கான்கிரீட் சாலை. சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால், சாலை மீண்டும் போடப்படுமா என, பகுதிவாசிகள் தவித்தனர். போக்குவரத்து மட்டுமின்றி சாலையின் மோசமான நிலை காரணமாக குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தாலும், சாலையை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதற்கு நிதி பற்றாக்குறையை காரணம் காட்டினர்," என்கிறார் திரு. சந்திரசேகரன்.

நமக்கு நாமே
அதன்பின் திரு.சந்திரசேகரன் தனது திருமணத்திற்காக சேமித்த பணத்தில் இருந்து சாலை அமைக்க முடிவு செய்தார். கடந்த ஜனவரி மாதம் வானூரில் உள்ள தொகுதி மேம்பாட்டு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளை அணுகி, குடியிருப்பு பகுதிகளில் குடிமை கட்டமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில், நமக்கு நாமே
திட்டத்தின் கீழ், சாலை அமைக்க அனுமதி கோரி மனு அளித்தார்.

முழுத்தொகையையும் செலுத்த முடிவு
"தொடக்கத்தில், பணியின் முடிவில் பில் வெளியிடப்படும், அதன்படி திட்டத்தின் கீழ் பணிக்கான மொத்த ஒதுக்கீட்டில் 50% செலுத்துமாறு என்னிடம் கேட்கப்பட்டது. இருப்பினும், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விலக்குகள் மற்றும் பல்வேறு அதிகாரத்துவ தடைகளுக்குப் பிறகு, இறுதித் தொகை சாலைப் பணிகளுக்குப் போதுமானதாக இருக்காது என்பதைக் கண்டறிந்தேன். நான் அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அல்ல, எனவே என்னுடைய முழு சேமிப்பையும் சாலை அமைப்பதற்குச் செலவிட முடிவு செய்தேன், "என்று அவர் மேலும் கூறினார்.

பெற்றோர்களின் அச்சம்
திரு. சந்திரசேகரனின் பெற்றோர்கள் - எஸ். பெருமாள் மற்றும் பி. லக்ஷ்மி - உள்ளூர் அரசியல்வாதிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பயந்ததால், சாலை அமைக்கும் அவரது முடிவில் ஆரம்பத்தில் தயங்கினார்கள். இருப்பினும், அவர் அவர்களை சமாதானப்படுத்தி, பணியை தொடங்க அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தை அணுகினார்.

எவ்வளவு காலம் தேவைப்பட்டது?
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திரு. சந்திரசேகரனின் நண்பர், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 100% பங்களிப்புடன் இத்திட்டத்தை மேற்கொள்வதற்கான நிர்வாக ஒப்புதலைப் பெற உதவினார். 290 மீட்டர் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி மார்ச் மாதம் துவங்கி ஒரு மாதத்தில் நிறைவடைந்தது. இப்போது திரு. சந்திரசேகரன் அந்த பகுதி மக்களுக்கு ஹீரோவாக மாறியிருக்கிறார்.



Click it and Unblock the Notifications