காணாமல் போன திருமண மோதிரம் 3 ஆண்டு கழித்து கேரட்டில் இருந்து கண்டுபிடித்த மனிதர்...

காணாமல் போன தனது திருமண மோதிரத்தை ஒரு கேரட்டின் மேல் 3 வருடங்கள் கழித்து கண்டுபிடித்தார் ஒரு மனிதர் பற்றித் தான் இந்த கட்டுரையில் காண்போம்.

நீங்கள் மிகவும் மதிக்கும் ஒன்றை இழப்பது மிகவும் வேதனையாக இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்பாராத விதத்தில் உங்கள் மதிப்புமிக்க அப்பொருள் மீண்டும் உங்களிடம் சேர்ந்தால் என்ன ஆகும்? அல்லது உங்கள் எதிர்பார்ப்பு மிக மிக குறைந்த பிறகு திடீரென அது மாயமாகத் தோன்றினால்?

Man Finds Wedding Ring

நல்லது, ஜெர்மனியின் யூஸ்கிர்ச்சென் (Euskirchen) மாவட்டத்தில் உள்ள பேட் மன்ஸ்டெரிஃபெல் (Bad Münstereifel) என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த 82 வயது முதியவரின் விஷயத்தில் இதுதான் நடந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேரட் தோட்டம்

கேரட் தோட்டம்

அந்த மனிதர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது, ​​மற்ற பயிர்களை விட சற்று வித்தியாசமாகத் தெரிந்த ஒரு கேரட் பயிரைப் பார்த்து தடுமாறினார் என்று நம்பப்படுகிறது.

அந்த மனிதர் கேரட்டை உற்றுப் பார்த்தபோது, ​​அதைச் சுற்றி ஒரு பளபளப்பான வளையம் இருப்பதைக் கவனித்தார். அந்த வளையம் காரட் பயிருக்கு ஒரு சிறிய இடுப்பு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.

சுத்தம் செய்தார்

சுத்தம் செய்தார்

அவர் வளையத்திலிருந்த சேற்றை சுத்தம் செய்தபோது, ​​அவரது வாழ்நாளின் சிறந்த ஆச்சரியம் கிடைத்தது. அந்த வளையம்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் இழந்த தனது திருமண மோதிரம் என்பதை அந்த மனிதர் ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார்.

அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இழந்த திருமண மோதிரம் என்பதால் அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்!

திருமண மோதிரம்

திருமண மோதிரம்

பதிவுகளின்படி, அந்த ஆணும் அவரது மனைவியும் தங்கள் திருமண வாழ்க்கையின் பொன்விழா ஆண்டை தங்கள் தோட்டத்தில் கொண்டாடினார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அன்றுதான் அவர் அந்த விலைமதிப்பில்லா மோதிரத்தை இழந்தார்.

அவர் அதை எங்கு தவற விட்டார் என்பதை நினைவுபடுத்த முடியவில்லை, மேலும் அவர் எல்லா இடங்களையும் எல்லா வகையிலும் தேடினார், அதை அவரால் கண்டுபிடிக்க முடியும் என்று நம்பினார்.

துரதிர்ஷ்டவசமாக,

துரதிர்ஷ்டவசமாக,

துரதிர்ஷ்டவசமாக, அவரது தேடல் பயனற்றது என்பதை தொடர் தோல்விகள் நிரூபித்தது மற்றும் அந்த வயதானவர் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினார். மறுபுறம், அவர் எப்போதும் தனது திருமண மோதிரம் மாயமாக மீண்டும் தோன்றும் என்று விரும்பினார் என்றும் கூறப்படுகிறது!

ஒரு அதிசயம் போலவே, அந்த மனிதர் தனது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட கேரட் பயிரில் அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்தார். அவர் தான் வளர்த்த பயிர்களில் அதைக் கண்டுபிடிப்பார் என்று ஒருபோதும் கற்பனை செய்யவில்லை.

கிடைத்தது மோதிரம்

கிடைத்தது மோதிரம்

மோதிரம் கிடைத்த பின்னர், அவர் தனது தோட்டத்தில் வேலை செய்யும் போது அந்த மோதிரம் விரலிலிருந்து நழுவியிருக்கலாம் என்று பகுப்பாய்வு செய்தார். அது பல ஆண்டுகளாக மண்ணில் புதைக்கப்பட்டு, அங்கு முளைத்த கேரட்டின் வடிவத்தில் மீண்டும் தோன்றும் வாய்ப்பு கிடைத்தது!

துரதிர்ஷ்டவசமாக, மோதிரம் கிடைக்கும் காலத்திற்கு சிறிது முன்னரே அவரது மனைவி காலமானார், வயதானவர் தனது அன்பான மனைவியின் நினைவாக மோதிரத்தைக் கண்டுபிடிக்க உண்மையிலேயே விரும்பினார்.

மனைவியின் ஏக்கம்

மனைவியின் ஏக்கம்

அவரது மனைவி இறப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னர் திருமண மோதிரத்தைக் கண்டுபிடித்திருக்கலாம் என்று அந்த மனிதன் விரும்பினாலும், அது ஒரு மகிழ்ச்சியான முடிவு.

இது ஒரு இனிமையான கதை அல்லவா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதைப் பற்றிய உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion