Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
இந்தியாவை வடிவமைத்த லால் பகதூர் சாஸ்திரி பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள்...!
இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான்.
அக்டோபர் 2 ஆம் தேதியை நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுகூறும் பொருட்டு காந்தி ஜெயந்தியாக நாம் கொண்டாடுகிறோம். ஆனால் இந்த நாளானது நமது இந்தியாவின் வளர்ச்சிக்கு பங்களித்த ஒரு மாமனிதருக்கும் பிறந்த நாள் ஆகும். அவர்தான் இந்தியாவின் இரண்டாவது பிரதம அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி ஆவார்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு லால் பகதூர் சாஸ்திரி அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றதாகும். 1962 இல் சீனாவுக்கு எதிரான தோல்வியின் பின்னர் நாட்டின் உடைந்த தன்னம்பிக்கையை மீண்டும் உயிர்ப்பித்தவர் மற்றும் 1965 ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியாவை வெற்றிக்கு இட்டுச் சென்றவர் மேதகு லால் பகதூர் சாஸ்திரி ஆவார். போர் வெற்றி மட்டுமின்றி இந்தியாவில் பசுமைப்புரட்சி, வெண்மைப்புரட்சி போன்றவற்றிற்கு வழிவகுத்ததும் இவர்தான். லால் பகதூர் சாஸ்திரி பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்களைப் பார்க்கலாம்.

தகவல் 1
லால் பகதூர் என்பதுதான் இவரின் பெயராகும். இவரின் புலமையின் காரணமாக 1926 இல் காஷி வித்யாபீத் பல்கலைக்கழகம் இவருக்கு சாஸ்திரி என்ற பட்டத்தை அளித்தது. உண்மையில் சாஸ்திரி என்பது பட்டமாகும்.

தகவல் 2
சாஸ்திரியின் தாய் அவருக்கு 3 மாதமாக இருக்கும் போது கங்கையில் குளிக்கும்போது அவரை தொலைத்துவிட்டார். எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ததைத் தொடர்ந்து, குழந்தையில்லாத ஒருவர் அவரை மீண்டும் அவருடைய தாயிடம் ஒப்படைத்தார்.

தகவல் 3
பள்ளி நாட்களில் சாஸ்திரி அவர்கள் தினமும் தலையின் மேல் புத்தகத்தை வைத்துக்கொண்டு கங்கையை நீந்தி கடந்தே பள்ளிக்கு செல்வார். காரணம் அவரின் குடும்ப வறுமை ஆகும்.

தகவல் 4
உத்திர பிரதேசத்தில் காவல்துறை மந்திரியாக இவர் இருந்த போது கூட்டத்தை கலைக்க மக்களை லத்தியை கொண்டு அடித்து விரட்டுவதற்குப் பதிலாக தண்ணீரை கொண்டு மக்களை விரட்டிய முதல் அரசியல்வாதி இவர்தான். மக்களின் மேல் இவருக்கு இருந்த அக்கறைக்கு இந்த சம்பவம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

தகவல் 5
திருமணத்தின் போது, சாஸ்திரி வரதட்சணையின் ஒரு பகுதியாக ஒரு காதி துணியையும் ஒரு ராட்டை சக்கரத்தையும் எடுத்துக் கொண்டார்.

தகவல் 6
ஜவஹர்லால் நேரு ஒருமுறை இவரை பாதி நாகரிகம் அற்றவர் என்று கூறினார். ஏனெனில் லால் பகதூர் சாஸ்திரி எப்போதும் வேஷ்டியும், குர்தாவும் தான் அணிவார்.

தகவல் 7
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக லால் பகதூர் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது சாஸ்திரியின் மனைவி மாதம் 50 ரூபாய் ஓய்வூதியமாக பெற்றுவந்தார். ஒருமுறை அவர் மனைவி அதிலிருந்து மாதம் 10 ருபாய் சேகரித்து வைத்ததாகக் கூறினார். இதனால் கோபமுற்ற சாஸ்திரி தனது ஓய்வூதியத்தை குறைத்து, சில ஏழைகளுக்கு ரூ .10 கொடுக்குமாறு மக்கள் சங்கத்தின் ஊழியர்களிடம் கூறினார்.

தகவல் 8
சாஸ்திரி 11 ஜனவரி 1966 அன்று அப்போதைய யு.எஸ்.எஸ்.ஆரின் தாஷ்கண்டில் இதய செயலிழப்பு காரணமாக இறந்தார், ஆனால் அவரது மரணம் இப்போதும் மர்மமானதாகவே கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications