Just In
- 57 min ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 9 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 10 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
Don't Miss
- News பாஜகவிற்கு இடியாக வந்து இறங்கிய அகிலேஷ் முடிவு! உ.பியில் தாமரை குலுங்க போகுது! போச்சு எல்லாம் போச்சு
- Technology TDS முழுசா வேணுமா? அப்போ உங்க PAN கார்டுல இது முக்கியம்.. உடனே செஞ்சிடுங்க.. Income Tax-ன் திடீர் உத்தரவு!
- Movies டெய்லர் ஸ்விஃப்டுடன் கச்சேரி நடத்தப் போகிறாரா ஏ.ஆர். ரஹ்மான்?.. அந்த விருது வேற கிடைச்சிருக்கே!
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? இவங்ககூட இருக்கிறது உங்க அதிர்ஷ்டம்!
வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உலக காதலர்களுக்கு முக்கிய நாளான காதலர் தினம் பிப்ரவரி மாதம்தான் வருகிறது.
வருடத்தின் இரண்டாவது மாதமான பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் உலக காதலர்களுக்கு முக்கிய நாளான காதலர் தினம் பிப்ரவரி மாதம்தான் வருகிறது. இந்த மாதம் முழுவதுமே காதல் நிறைந்திருக்கும். காதல் நிறைந்த இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் தனித்துவமானவர்களாக இருப்பார்கள்.
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களிடம் நீங்கள் ஈர்க்கப்பட்டுள்ளீர்களா? ஆம் எனில், அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். சுவாரஸ்யமும், மர்மங்களும் நிறைந்த இவர்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
பிப்ரவரி 1 முதல் 10 வரை பிறந்தவர்கள்
பிப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களுக்குள் பிறந்தவர்கள் மிகவும்செழிப்பானவர்களாகவும், நெகிழ்வானவர்களாகவும் இருப்பார்கள். புதனின் செல்வாக்கு உங்கள் மீது அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, அவர்கள் மிகவும் நகைச்சுவையானவர்கள் மற்றும் உங்கள் தர்க்கரீதியான மனதுடன் மற்றவர்களுடன் இணைவதை விரும்புவார்கள். மற்றவர்களிடம் உங்கள் அணுகுமுறை மிகவும் மர்மமானது. அதேசமயம் அவர்கள் மிகவும் நெகிழ்வானவர்கள், இதனால் அவர்கள் எந்த சூழலையும் எளிதில் சமாளித்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். இந்த நாட்களில் பிறந்தவர்கள் கல்வித் துறையில் செழிக்கிறார்கள், அவர்கள் மனதில் அற்புதமான கற்பனை சக்தியை வளர்க்கிறது.
பிப்ரவரி 11 முதல் 20 வரை பிறந்தவர்கள்
இந்த 10 நாட்களில் பிறந்தவர்கள் சுக்கிரனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். எனவே அவர்கள் மிகவும் ரொமான்டிக்கான மற்றும் மற்றவர்களை ஈர்க்கும் அற்புதமான மன்மத சக்தியுடன் பிறந்தவர்கள். இருப்பினும், சில நேரங்களில், இந்த நடத்தை சிக்கலாக மாறும், மேலும் உங்கள் உறவில் சில தவறான புரிதல்களுக்கு வழிவகுக்கும். சுக்கிரனின் தாக்கம் உங்களை வலுவாக பாதிக்கிறது, இதன் காரணமாக நீங்கள் நம்பமுடியாத வாழ்க்கை வாழ்கிறீர்கள்.
பிப்ரவரி 21 முதல் 29 வரை பிறந்தவர்கள்
மாதத்தின் இறுதி நாட்களில் பிறந்தவர்கள் வியாழனால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், எனவே அவர்கள் மிகவும் பிடிவாதமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் எப்போதும் ஒரே இலக்கை நோக்கியே இருக்கிறார்கள். அவர்கள் தொலைநோக்கு பார்வையுடையவர்கள், ஆனால் அவர்கள் உணர்வின் தன்மை தகுதியற்றது. அவர்களின் அதிர்ஷ்டத்தின் பாதை அறுபது வயதைத் தாண்டிய பிறகு திறக்கிறது. அவர்கள் எப்போதும் தன்னலமற்ற அறிவை நம்புகிறார்கள் மற்றும் உள்ளிருந்து மிகவும் ரொமாண்டிக் ஆக இருக்கிறார்கள். அவர்களின் கற்பனை சக்தி அபாரமானது, இதனால் அவர்கள் அளவற்ற வலிமையை கொண்டவர்களாக இருக்கிறார்கள். பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்களின் சில பொதுவான குணங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
வெளிப்படையானவர்கள்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் மிகவும் வெளிப்படையாவர்கள். எனவே அவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க விரும்புகிறார்கள். அவர்கள் தவறு செய்தாலும் அதை மறைப்பதை நீங்கள் ஒருபோதும் காண முடியாது. பொய்யனாக இருப்பதை விட நேர்மையாக இருப்பது நூறு மடங்கு மேலானது என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, நேர்மையான கருத்துக்களை வழங்குவதே மிகவும் முக்கியம். அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.
யாரையும் காபி அடிக்க மாட்டார்கள்
ஒருவரின் யோசனைகளைத் திருடுவது அல்லது மற்றவர்கள் செய்வதை நகலெடுப்பது போன்றவற்றை பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஒருபோதும் செய்யமாட்டார்கள். அவர்கள் தங்கள் சொந்த திறமை மற்றும் யோசனைகள் மீது நம்பிக்கை கொண்டவர்கள் மற்றவர்களை காப்பியடிப்பதை வெறுக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள் மற்றும் மக்களின் ஆலோசனையைப் பின்பற்றுவார்கள். மேலும், அவர்கள் போற்றும் ஒருவரின் ஆலோசனையை மதிக்கலாம், ஆனால் அவர்கள் கண்மூடித்தனமாக பின்பற்ற மாட்டார்கள்.
தனிமையிலேயே மகிழ்ச்சியாக இருப்பவர்கள்
பிப்ரவரியில் பிறந்தவர்கள் தனிமையை விரும்புபவர்கள் மற்றும் அமைதியாக இருக்க விரும்புபவர்கள். அவர்களுக்கு சிறந்த துணையாக அவர்கள் நினைப்பது அவர்களை மட்டும்தான். அவர்களின் மௌனத்தை அவர்களின் மனநிலையற்ற நடத்தை என்று நீங்கள் தவறாகக் கருதினால், உங்கள் எண்ணம் தவறானதாகும். அவர்கள் தங்களுக்குத்தானே கம்பெனி கொடுப்பதை விரும்புகிறார்கள், அதனால் அவர்கள் ஒருபோதும் தனிமையாக உணர மாட்டார்கள்.
கணிக்க முடியாதவர்கள்
பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் அடிக்கடி தங்கள் வாழ்க்கைமுறையை மாற்ற முயற்சிக்கிறார்கள். பெரும்பாலும் இந்த மாற்றங்கள் அவர்களின் முன்னேற்றத்திற்கானதாக இருக்கும், ஆனால் சிலசமயம் இந்த மாற்றங்கள் அவர்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த மாற்றங்கள் கணிக்க முடியாததாக இருக்கும். அவர்கள் தங்கள் உணர்வுகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்த விரும்புவதில்லை.
அறிவுரையை வெறுப்பவர்கள்
பிப்ரவரியில் பிறந்தவர்கள் மற்றவர்களின் அறிவுரைகளை மிகவும் வெறுக்கிறார்கள். அவர்கள் இதைப் பற்றி மோசமான அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். தங்கள் விவகாரங்களில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை என்றும் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் நம்புகிறார்கள்.
எல்லோரையும் சமமாக நடத்த மாட்டார்கள்
எல்லோருக்கும் தங்கள் நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் நெருக்கமாக இருக்க அவர்கள் தயாராக இல்லை. அவர்கள் சமூக நபர்களாகத் தோன்றினாலும், நீங்கள் அவர்களை உங்கள் நண்பராகக் கருதினாலும், அவர்கள் உண்மையில் உங்கள் நண்பர்களாக இல்லாமல் இருக்கலாம். அவர்கள் சிலரை இழிவாகப் பார்ப்பது, எல்லோரையும் சமமாக நடத்தாமல் இருக்கக்கூட வாய்ப்புள்ளது.