Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
அம்மா வீட்டுக்கு போய்ட்டு 10 நிமிஷம் லேட்டா வந்ததால் விவாகரத்து செய்த கணவன்... நம்ம நாட்ல தான்
உத்திரப் பிரதேச மாநிலத்ததில் உள்ள ஒருவர் தான் தன்னுடைய மனைவிக்கு முத்தலாக் கூறி விவாவகரத்து செய்திருக்கிறார். அதுவும் செய்த காரணம் அதை விட மோசம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்
பொதுவாக கணவன், மனைவிக்கு இடையே உண்டாகிற கருத்து வேறுபாடுகளால் தான் விவாகரத்து நடக்கும். அந்த கருத்து வேறுபாடு என்னென்ன காரணங்களால் உண்டாகிறது என்பதைப் பொறுத்து தான் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியும் அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.
சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள். குறட்டை விடுவதற்கெல்லாம் விவாகரத்து செய்கிறார்கள் என்று. இது நாம் கேட்பதற்குக் காமெடியாக வேண்டுமானால் இருக்கலாம்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் உண்மையாகவே இதுபோன்ற சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அப்படி நடந்தது தான் இந்த விவாகரத்தும். இதற்கெல்லாம் ஒரு மனுஷன் விவாகரத்து பண்ணுவானா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் பண்ணியிருக்கானே. எதுக்காகனு நீங்களே பாருங்க.

முத்தலாக் சட்டம்
சமீபத்தில் தான் லோக்சபாவில் மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முத்தலாக் செய்கின்ற விஷயத்துக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் சட்டம் இயற்றப்பட்ட பின்னர் இப்படி ஒரு விஷயம் நடந்திருப்பது என்பது மிகவும் அதிர்ச்சிகரமான தகவலாக இருக்கிறது.

எங்கே நடந்தது?
உத்திரப் பிரதேச மாநிலத்ததில் உள்ள ஒருவர் தான் தன்னுடைய மனைவிக்கு முத்தலாக் கூறி விவாவகரத்து செய்திருக்கிறார். அதுவும் செய்த காரணம் அதை விட மோசம். இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

எதற்காக முத்தலாக்?
முத்தலாக் செய்ததே சட்டப்படி குற்றம். அதிலும் எதற்கான செய்தார் என்று தெரிந்தால் உங்களுக்கே கோபம் வரும் பாருங்கள்.
அந்த பெண் தன்னுடைய பாட்டிக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், அவரைப் பார்ப்பதற்கான தன்னுடைய பிறந்த வீட்டிற்குச் சென்றிருக்கிறார். வேலையை முடித்துவிட்டு அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு வந்ததும் மனைவி அவருடைய அம்மா வீட்டிற்குச் சென்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறார்.

போன் கால்
உடனே கோபம் வந்து தன்னுடைய மனைவிக்கு போன் செய்த இந்த நபர் தன்னுடைய மனைவிக்கு ஆர்டர் போட்டிருக்கிறார். இன்னும் 30 நிமிஷம் தான் உனக்கு டைம். அதுக்குள்ள நீங்க வரணும். இல்லன்னா என்ன நடக்கும்னே தெரியாது என்று அதட்டலாகப் பேசியிருக்கிறார்.
கணவனின் கோபம் பற்றி அந்த பெண்ணுக்குத் தெரிந்ததும் உடனே கிளம்பி ஒரு டாக்சியைப் பிடித்து வீட்டுக்கு வந்திருக்கிறார்.

விவாகரத்து
அதனால் உடனே கிளம்பி வந்துட்டாரே அப்புறம் எதுக்கு விவாகரத்து என்று நீங்கள் கேட்கலாம். அங்கதான் வேடிக்கையே இருக்கும். கணவன் கொடுத்த முப்பது நிமிடம் தாண்டிவிட்டதாம். பத்து நிமிடம் லேட்டாக வீட்டுக்கு வந்துவிட்டாராம் மனைவி. அதற்காக முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்திருக்கிறார் அவர் கணவர்.
நாட்டுல இன்னும் என்ன மாதிரி கொடுமையெல்லாம் நடக்கும். எதுக்கெல்லாம் விவாகரத்து பண்ணுவாங்கன்னு நெனச்சா நமக்கு நெஞ்சுவலியே வந்துரும் போல. பாவம் அந்த பொண்ணு.



Click it and Unblock the Notifications











