Latest Updates
-
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம்
லெஸ்பியன், ஹே உறவு எனக்குப் பிடிக்கும்... அதுக்கென்ன இப்போ? காட்டு காட்டுனு காட்டிய ரம்யா
டீவி தொகுப்பாளினி ரம்யாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான அழகான தொகுப்பாளினி என்றே சொல்லலாம். தற்போது பல நிகழ்ச்சிகளுக்கும் தொகுத்து வழங்கும் ரம்யா முன்பை விட கொஞ்சம் அதிகமாகவ
டீவி தொகுப்பாளினி ரம்யாவைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார். மிகவும் பிரபலமான அழகான தொகுப்பாளினி என்றே சொல்லலாம்.
தற்போது பல நிகழ்ச்சிகளுக்கும் தொகுத்து வழங்கும் ரம்யா முன்பை விட கொஞ்சம் அதிகமாகவே கவர்ச்சி காட்டுகிறார்.
சீன் போடுகிறார். அதோடு தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படங்கள் பதிவிடுவது, ரசிகர்கள் கேள்விக்கு பதில் சொல்வது என்று இருந்தார். அதில் ஒரு ரசிகர் கேட்டா ஏடாகூட கேளிவிக்குத் தான் ரம்யா செம காண்டில் பதில் சொல்லியிருக்கிறார். ரம்யா பற்றியும் அவருடைய பதில் பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தொகுப்பாளினி
விஜய் டீவியின் சீனியர் மற்றும் பிரபல தொகுப்பாளினி தான் ரம்யா. நம் எலலோருக்கும் தெரிந்தது தான். ஆரம்ப காலங்களில் முக்கியமான நிகழ்ச்சிகளைத் டிடியும் (திவ்யதர்ஷினி), ரம்யாவும் தான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார்கள். இருவரும் சீனியரான பின், டிடி சில நிகழ்ச்சிகளுக்கு நடுவராக தலை காட்ட ஆரம்பித்துவிட்டார். ஆனால் ரம்யாவோ விஜய் தொலைக்காட்சி மட்டுமின்றி பெரிய பட்ஜெட்டில் நடக்கும் நிறைய கார்ப்பரேட் நிகழ்ச்சிகளுக்கும் திரைப்பட ஆடியோ ரிலீஸ், விருது விழாக்களைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களில்
டீவியில் மட்டுமின்றி சில முக்கியமான திரைப்படங்களிலும் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் ஏற்று வெள்ளித் திரையிலும் தன்னுடைய திறமையைக் காட்டி வந்தார். குறிப்பாக, மொழி, மங்காத்தா, ஓகு கண்மணி, மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் சில துணை பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தார்.

சீரியல்களில்
ஓகு கண்மணி படத்துக்குப் பின்னர் உடல் எடையையெல்லாம் குறைத்து, இனி சினிமாவில் ஒரு ரவுண்டு வரலாம் என்று நினைத்த ரம்யாவுக்கு கொஞ்சம் பின்னடைவு ஏற்பட்டதால், தன்னுடைய சின்னத்திரை ரசிகர்களை இழந்துவிடக்கூடாது, என்பதை மனதில் கொண்டு, டீவி சீரியல்களில் முக்கிய கதாநாயகி பாத்திரம் ஏற்று நடிக்கலாம் என்று ரம்யா முடிவெடுத்துள்ளதாகவும் சில செய்திகள் வந்து கொண்டுதான் இருந்தன. ஆனால் ரம்யாவை தான் சீரியல் பக்கம் காணல.

சமுத்திரக்கனி படம்
நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பற்றி நம் எல்லோருக்குமே தெரியும். அவருடைய படங்களில் நிச்சயம் சமூக விழுமியங்கள் நமக்குக் கற்பிக்கப்படும். அப்படி அவர் நடிக்கும் சங்கத்தலைவன் என்னும் படத்தில் தான் தொகுப்பாளின் ரம்யா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

திருமண வாழ்க்கை
கடந்த 2014 ஆம் ஆண்டு அபராஜித் என்பவருடன் ரம்யாவுக்கு திருமணம் நடந்தது. சினிமாவில் நடிப்பதில் ரம்யா ஆர்வம் காட்டியது அபராஜித்துக்கு பிடிக்கவில்லை என்பதால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2015 ஆம் ஆண்டில் இருவரும் பிரிந்தனர். என்னுடைய திருமண முறிவு தனிப்பட்ட விஷயம். அந்த சுதந்திர வட்டத்துக்குள் யாரும் வரவேண்டாம் என அப்போது டுவிட்டர் பக்கத்திலும் கூட ஒரு பதிவு வெளியிட்டிருந்தார்.

கவர்ச்சிப்புயல்
தொகுப்பாளினி ரம்யா என்றாலே ஹோம்லியான முகத்துடன், நல்ல அலங்காரத்தோடு ஆடைகளும் மிக டீசண்டாக உடுத்தக்கூடியவர். அடிக்கடி புடவையில் வந்து நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கும் குடும்ப குத்துவிளக்காகத் தான் ரம்யா இருந்தார். ஓகே கண்மனி படத்துக்கு முன்பாக அவருடைய கவர்ச்சிப் புகைப்படங்களை நாம் பார்த்திருக்கவே மாட்டோம். ஆனால் திருமண பந்தம் முறிந்து சினிமாவுக்குள் நுழைந்த பிறகு பெரும் கவர்ச்சிப் புயலாக, மேல் தொடை தெரியுமளவுக்கு புகைப்படங்கள் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட ஆரம்பித்தார்.

டுவிட்டர்
தன்னுடைய கவர்ச்சிப் படங்களை டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாவில் ரம்யா பதிவிடத் தொடங்கிய பின், ரசிகர்களுக்கு அவர் மேல் வைத்திருந்த கோணமே முற்றிலும் மாறிவிட்டது. ஆபாச டுவிட் போடுவது, மரணமாக கலாய்ப்பது என்று தொடங்கிவிட்டார். அப்படி ரசிகர் ஒருவர் .ன்ஸ்டாவில் போட்ட பதிவால் தான் ரம்யா கடுப்பாகி, அது இப்போது பெரும் பஞ்சாயத்தாக கிளம்பியிருக்கிறது.

லெஸ்பியன் பிடிக்கும்
ரம்யா சமீப காலங்களாக தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதைத்தொடர்ந்து ரசிகர்கள் சிலரே ஆபாச கமெண்டடுகள் போட்டு வந்தனர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் ரம்யா பதில் கூறி வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர் ரம்யாவிடம் இண்ஸ்டாவில் உங்களுக்கு லெஸ்பியன் பிடிக்குமா என்று கேள்வி கேட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரம்யா எனக்கு லெஸ்பியன், கே, ஆண் பெண் உறவு (பைசெக்ஸ்), இப்படி எல்லாமே பிடிக்கும். நான் எப்படி இருந்தால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சினை என்று செம கடுப்பாகி, அந்த ரசிகருக்கும் மற்றவர்களுக்கு உரைக்கும்படி ஒரு பதிலடி கொடுத்திருக்கிறார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் படு வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications
