For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்

இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.

|

இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. அப்படி நம் முன்னோர்களின் சாதனைகளில் மறைக்கப்பட்ட ஒன்றுதான் செவ்வாய் கிரகம் தொடர்பான வானவியல் ஆராச்சியாகும்.

Indian sage Varahamihira predicted water on Mars almost 1500 years ago

சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உலகின் வானவியல் ஆராய்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படும் NASA செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தது. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவை சேர்ந்த ஒருவர் இதனை கண்டறிந்து விட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பதிவில் அவரை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வராகமிஹிரர்

வராகமிஹிரர்

வராகமிஹிரர் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். மேலும் இவர் கணித அறிஞராகவும், தலைசிறந்த ஜோதிட நிபுணராகவும் விளங்கினார். இவரின் தந்தை ஆதித்யதாசரும் வானவியல் ஆராய்ச்சியாளர்தான். இவர் எழுதிய விண்வெளி மற்றும் பிரபஞ்சம் என்னும் புத்தகம் இன்றைய ஆராச்சியாளர்களை கூட ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.

வராஹமிஹிரரின் பங்களிப்பு

வராஹமிஹிரரின் பங்களிப்பு

வராஹமிஹிரர் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் கண்டுபிடித்ததை படிக்காத மாணவர்கள் மிகவும் குறைவு என்பதே உண்மை. திரிகோணமிதி என்று அழைக்கப்படும் முக்கோணவியல் சூத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். கணிதவியலை பொறுத்தவரை இவரின் பங்கு என்பது அளப்பரியது ஆகும். இவர் செவ்வாய் கிரகம் தொடர்பாக என்ன கண்டறிந்தார் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

பஞ்சசித்தானிக்கா

பஞ்சசித்தானிக்கா

வராகமிஹிரர் கிபி 505 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கபித்தகரிடம் இருந்து வானவியல் மற்றும் கணிதவியல் தொடர்பான ஞானத்தை பெற்றார். இவர் தன் ஞானத்தை கொண்டு உருவாக்கிய பஞ்சசித்தானிக்கா என்னும் வானவியல் பற்றிய ஐந்து சட்டங்கள் கிபி 575 ல் வானவியலில் அதிக முக்கியத்துவத்தை பெற்றது.

கிரகங்களின் விட்டம்

கிரகங்களின் விட்டம்

பஞ்சசித்தானிக்காவில் சூர்யா சித்தாந்தம் என்னும் ஒரு பகுதி உள்ளது, இந்த வானவியல் விதியானது கிரகங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவுகிறது. இந்த பணியின் மூலம் வராஹமிஹிரர் கிரகங்களின் விட்டத்தை அளவிட்டார். பூமி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் போன்ற கிரகங்களின் விட்டங்களை இவர் துல்லியமாக கூறினார். சூர்ய சித்தாந்தம் சூர்ய மற்றும் சந்திர கிரகணங்களை அளவிட்டதுடன் அதன் நிறம் மற்றும் அளவையும் கண்டறிந்ததது.

MOST READ: தப்பு பண்ணிட்டு அந்த பழிய தூக்கி அடுத்தவங்க மேல போடுறதுல இந்த ராசிக்காரங்கள அடிச்சிக்கவே முடியாதாம்.

செவ்வாய் கிரகத்தின் விட்டம்

செவ்வாய் கிரகத்தின் விட்டம்

கணக்கிடப்பட்ட விட்டத்தின் அளவின் படி மொத்தம் 3,772 மைல் என கணக்கிடப்பட்டது. தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விட்டம் 4,218 மைல் ஆகும். வராகமிஹிரர் செவ்வாயில் நீர் இருப்பதையும் கண்டறிந்தார்.

செவ்வாய் கிரகத்தின் இரும்பு மற்றும் நீர்

செவ்வாய் கிரகத்தின் இரும்பு மற்றும் நீர்

வராகமிஹிரர் செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு மற்றும் நீர் இருப்பதை கண்டறிந்து கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் இது இப்போது NASA மற்றும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு நாசாவின்மார்ஸ் ரோவர் அதன் மேற்பரப்பில் இருந்து இரும்புதாதில் மோதியது. இதற்கு லெபனான் என பெயர் வைத்தார்கள்.

சூரியனின் முக்கியத்துவம்

சூரியனின் முக்கியத்துவம்

சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் எப்படி உருவானது மற்றும் அவை எப்படி சூரியனை மையமாய் கொண்டு இயங்குகிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்து கூறியது இவர்தான்.

சூர்ய சித்தாந்தம்

சூர்ய சித்தாந்தம்

சூர்ய சித்தாந்தத்தின் அசல் புத்தகம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் தனது சொந்த ஆராய்ச்சிகளுக்காக அதிலிருந்து சில குறிப்புகளை மட்டும் எடுத்து கொண்டனர். வரமிஹிரரின் அசல் புத்தகம் வெளிநாட்டினரால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

MOST READ: வாழ்க்கையில் எப்படிப்பட்ட நண்பர்களை வைத்துக்கொள்ள கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார் தெரியுமா?

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

தற்போதிருக்கும் சூர்ய சித்தாந்தம் பஞ்சாங்கம் கணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பாஸ்கராச்சாரியார் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இந்த புத்தகம் மூலம்தான் தற்போது விஷேச தினங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கணிக்கப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Indian sage Varahamihira predicted water on Mars almost 1500 years ago

Varahamihira, an Indian astronomer, mathematician and astrologer from Ujjain had predicted water on Mars almost 1500 years ago.
Desktop Bottom Promotion