Just In
- 43 min ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 1 hr ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 2 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
- 2 hrs ago எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
Don't Miss
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி..OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- Movies சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story
ஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story
சென்ற ஆண்டு மராத்தி மொழியில் நியூட் (Nude) என்ற பெயரில் கலை கல்லூரியில் ஓவியம் மற்றும் சிலை வடிக்கும் மாணவர்களுக்காக நிர்வாண மாடலாக பணிபுரியும் பெண்கள் குறித்த படம் ஒன்று வெளியானது. இந்த கதை தனலட்சுமி மணி முதலியார் என்ற தமிழ் பெண்ணை கதை நாயகியாக கொண்டு நகர்கிறது. இவர் மும்பையில் வாழ்ந்து வரும் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட பெண் ஆவார்.
பிறந்ததில் இருந்து வறுமை, கவலை, துன்பத்தை மட்டுமே கண்ட தனலட்சுமி வாழ்வில் நடந்த ஒரு பெரும் திருப்பம் தான் இந்த திரைப்படத்தின் கதை. ஓர் பெரும் கதறலுடன் துவங்கிய அந்த திருப்பம்... இன்று தனலட்சுமியை பல கலைஞர்கள் காலை தொட்டு வணங்கும் அளவிற்கு உயர்ந்த மனிதியாக காண வைத்திருக்கிறது.
சென்னை டூ மும்பை!
தனலட்சுமி சென்னையில் இருந்து மும்பைக்கு சென்ற போது ஐந்து வயது தான் இருக்கும். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் ஐந்து பேர். இரண்டு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள்.
மும்பையில் தனலட்சுமி வாழ்ந்து வந்த இடம் மகாலட்சுமி எனும் பகுதியில். பெயரிலும், வாழ்ந்த பகுதியிலும் மட்டுமே லட்சுமி இருந்தார். நிஜத்தில் தனலட்சுமி வாழ்வில் வறுமையும், பசியும் தான் நிறைந்திருந்தது.
படிக்காத பெற்றோர்!
தனலட்சுமியின் பெற்றோர் படிக்காதவர்கள். மும்பையில் அவர்கள் பார்த்து வந்த வேலை குப்பை அள்ளுவது. வறுமை வாட்டி எடுக்கும் போதும், குப்பை அள்ள முடியாத நாட்களிலும் தனலட்சுமி மற்றும் அவருடன் பிறந்தவர்கள் பிச்சை எடுத்து சாப்பிடும் நிலையும் இருந்துள்ளது.
இவர்கள் போகுமிடமெல்லாம் வறுமை பின்தொடர்ந்து கொண்டே வர, தனலட்சுமி மற்றும் அவரது சகோதர, சகோதரிகளால் பள்ளிப்படிப்பை தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் தாரவிக்கு இடம் பெயர்ந்தது இவரது குடும்பம்.
வீட்டு வேலை!
வீட்டு வேலைக்கு செல்வது, சாப்பாடு, மீன் வறுவல் சமைத்து மும்பையின் நிஷா தியேட்டர் வாசலில் விற்பது என வேலை செய்ய துவங்கினார் தனலட்சுமி. சிறு வயதில் இருந்தே தனலட்சுமிக்கு சினிமா என்றால் மிகவும் பிரியம். இவர், தான் முதலில் பார்த்த திரைப்படம் ஷோலே என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தந்தையின் குடிப்பழக்கம், அதனால் அம்மாவை போட்டு அடிப்பது... தனலட்சுமி வீட்டு வேலை செய்யும் இடத்திற்கு வந்த அம்மா அழுது தீர்ப்பது போன்றவற்றால் வீட்டு வேலை செய்யும் இடங்களில் இருந்து தனலட்சுமி நிறுத்தப்பட்டார். இதன் பிறகு இறால் விற்கும் வேலையை செய்து வந்துள்ளார் தனலட்சுமி.
திருமணம்!
தனது அம்மாவுக்கு தெரிந்த ஒரு நபருடன் தனலட்சுமிக்கு திருமணம் ஆனது. வெறும் 14 வயதில் தன்னை விட 10 வயது மூத்த நபருடன் திருமணம் நடந்தது என்று கூறியுள்ளார் தனலட்சுமி. இதன் பிறகு தனலட்சுமி வாழ்வில் நடந்தவை எல்லாம் பெரும் சோகங்கள். எதிர்பாராதவிதமாக அடுத்தடுத்து இவரது சகோதரர்கள் மரணம் அடைந்தனர்.
மற்றொருபுறம் தான் பெற்ற குழந்தைகளை அனாதையாக விட்டுவிட்டு இவரது சகோதரி எங்கோ சென்றுவிட்டார். அக்காவின் குழந்தைகளை வளர்க்கும் கடமையும் தனலட்சுமியை வந்து சேர்ந்தது. இதனால் கணவனுடன் வீண் தகராறு மற்றும் சண்டைகள் எழுந்தன.
பெற்றவனை போலவே கட்டியவனும்...
பெற்ற தந்தை தான் குடிகாரர் என்றால், கட்டி வந்தவன் பெரும் குடிகாரன். தனலட்சுமி சிறுகசிறுக சம்பாதித்து, சேமித்த வைத்த பணம் அனைத்தும் கணவனின் குடி பழக்கத்திற்கு செலவானது. ஒரு புறம் தந்தையின் கொடுமை தாங்கிக் கொள்ள முடியாமல் தாய் தற்கொலை. இன்னொருபுறம் இரண்டாவது முறையாக கருத்தரித்து ஆறுமாத கர்ப்பிணியாக இருந்த போது தனலட்சுமியின் கணவரும் மரணம் அடைந்தார்.
குடும்பத்தின் மொத்த பொறுப்பும் இப்போது தனலட்சுமியின் கைகளில். எங்கே சென்றாலும் போதிய பணம் கிடைக்கும் அளவிற்கு வேலை கிடைப்பதில்லை. வேலை தருகிறேன் என்று கூறுபவனும், தனலட்சுமியிடம் அவரது உழைப்புடன் உடலையும் எதிர்பார்க்கிறார்கள்.
நிர்வாண வேலை!
அந்த சமயத்தில் தான் ஜெ ஜெ கலை கல்லூரியில் வேலை செய்து வந்த ராஜம்மா எனும் பெண்ணுடன் தனலட்சுமிக்கு தொடர்பு உண்டாகிறது. அதே கல்லூரியில் தனக்கும் வேலை வாங்கி தர கோரி உதவி நாடுகிறார் தனலட்சுமி. தானே அந்த கல்லூரியில் கூட்டி பெருக்கும் வேலை தான் செய்து வருகிறேன் என்று கூறி சென்றார் ராஜம்மா.
ராஜம்மா சரியான பதில் கூறவில்லை என்றால் என்ன.. தானே நேராக சென்று வேலை கேட்கலாம் என்று தனலட்சுமி ஜெஜெ கல்லூரிக்கு செல்கிறார். அங்கே ராஜம்மாவை எங்கே தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது தண்ணீர் குடிக்க ஒரு வகுப்பறை முன் சென்று பார்த்த போது தான் தனலட்சுமிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ராஜம்மா அங்கே நிர்வாணமாக நின்றுக் கொண்டிருந்தார். தனலட்சுமி தன்னை அந்த நிலையில் கண்டதை பார்த்த ராஜம்மாவிற்கு பெரும் கோபம். நான் தான் உன்னை இங்கே வரவேண்டாம் என்று கூறினேன் தானே. ஏன் இங்கே வந்தாய் என்று திட்டுகிறார்.
ஆசிரியர்!
தனலட்சுமிக்கு ராஜம்மாவை கண்ட அதிர்ச்சியே இன்னும் விலகவில்லை. பசி பட்டியினில் வாடுவதற்கு இந்த வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று தனலட்சுமியிடம் கூறுகிறார் ராஜம்மா. தனலட்சுமி, ராஜம்மா பேசிக் கொண்டிருக்கையில் குறுக்கே ஒரு ஆசிரியர் வருகிறார். தனலட்சுமியிடம்... நீங்கும் இங்கே இந்த வேலை செய்ய சம்மதமா என்று கேட்கிறார்?
தனலட்சுமிக்கு இதில் சுத்தமாக விருப்பம் இல்லை. எப்படி பலர் முன்னிலையில் நிர்வாணமாக நின்று வேலை பார்ப்பது என்ற கூச்சம். அந்த ஆசிரியர் கேள்வி கேட்ட போது, தனலட்சுமியிடம் ஒரு வார்த்தையும் கேட்காமல் ராஜம்மா... இவரும் இந்த வேலை செய்வார் என்று பதில் கூறிவிடுகிறார்.
60 ரூபாய்!
யோசனையை தள்ளி வை, முதலில் இந்த வேலையை செய். நிர்வாணமாக போஸ் கொடுத்தால் அறுபது ரூபாய். ஆடையுடன் போஸ் கொடுத்தால் ஐம்பது ரூபாய். உன் உடம்பு நல்லா தான் இருக்கு. உனக்கு இங்கே நிறையா பணம் கிடைக்கும் என்று தனலட்சுமியிடம் கூறுகிறார் ராஜம்மா.
ராஜம்மாவை நிர்வாணமாக கண்ட அதிர்ச்சி விலகாத அந்நாளில் இருந்தே தானும் அங்கே வேலை செய்ய துவங்கினார் தனலட்சுமி.
முதல் முறையாக...
தயக்கம், அழுகை.. மனம் முழுதும் ரணமாகி போனது. மற்றவர் முன் ஆடையின்றி நிர்வாணமாக நிற்பது குறித்த பெரும் கவலை. அப்போது தான் இரண்டாவது குழந்தை பெற்றெடுத்திருந்தார் தனலட்சுமி. ஆகையால் அவரது மார்பகங்களில் பால் வடிந்துக் கொண்டிருந்தன.
மாணவர்கள் படம் வரையும் போது இப்படியான சங்கோஜத்தை உணர்ந்த தனலட்சுமியின் கண்களில் கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது. அவரது மனநிலையை புரிந்துக் கொண்ட மாணவர்கள் அவரை வீட்டுக்கு சென்று, நாளை வருமாறு அழைத்தனர்.
25 ஆண்டு கால பயணம்
ஆரம்பக் காலத்தில் ராஜம்மாவுக்கு தான் ஜெ.ஜெ கலை கல்லூரியில் மதிப்பு அதிகமாக காணப்பட்டது. பிறகு தனலட்சுமி மாணவர்களுடன் நன்கு பழக ஆரம்பித்தார். அவர்களது வேலை குறித்த புரிதலும் தனலட்சுமியிடம் தென்பட்டது. அறுபது ரூபாயில் துவங்கி இப்போது ஓவியம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் வரை பெறுகிறார் தனலட்சுமி. நிர்வாணமாக இன்றி தோன்ற வேண்டும் என்றால் நானூறு ரூபாய் தான்.
சம்பளம் போக அங்கே இருக்கும் கலைஞர்கள் பலரும் தனலட்சுமிக்கு உதவி வருகிறார்கள். இந்த 25 ஆண்டு கால பயணத்தில் ஒரு மாணவர் கூட தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. அவர்களது பார்வையில் கூட எந்த ஒரு தவறும் இருக்காது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் தனலட்சுமி.
நன்கு படிக்க வைக்க முயற்சித்தேன்...
என் பெற்றோர் படிக்காதவர்கள், எங்கள் ஏழ்மை காரணமாக எனது படிப்பும் மிக சிறிய வயதிலியே தடைப்பட்டு போனது. என் பிள்ளைகளையாவது நன்கு படிக்க வைக்க வேண்டும் என்று கருதினேன். ஆனால், நான் சம்பாதித்த பணம் அவர்களுக்கான சிறந்த கல்வியை ஏற்படுத்திக் கொடுக்க போதுமானதாக இல்லை.
என் வாழ்க்கை நியூட் என்ற பெயரில் மராத்தி மொழியில் படமாக வந்தது. இந்த படத்திற்காக தான் ஒரு புடவை மற்றும் இருபதாயிரம் ரூபாய் மனம் மட்டுமே பெற்றதாகவும். அதுவும் தனது கடன்களை அடைக்க சரியாக போனது என்றும் கூறியுள்ளார் தனலட்சுமி.
குழந்தைகள் எரிச்சல்...
இவரது குழந்தைகளை பொறுத்தவரை தங்கள் அம்மா அந்த கல்லூரியில் டீ, காபி போட்டு தரும் வேலை செய்து வருகிறார் என்றே அறிவார்கள். தனலட்சுமி அவர்களிடம் உண்மையை கூறவில்லை. நியூட் என்ற படம் உருவாகிறது. அது தன்னுடைய வாழ்க்கை வரலாறு என்பதை கூறியபோது அவர்கள் முதலில் நம்பவில்லை. உண்மை அறிய வந்தவுடன் முதலில் எரிச்சல் அடைந்தனர்.
பிறகு தனலட்சுமியின் நிலை உணர்ந்து மகிழ்ந்தனர். ஜெ.ஜெ கல்லூரியில் தனலட்சுமிக்கு பெரும் பாராட்டு விழா நடந்துள்ளது. அதை டிவியில் கண்டு இவரது குழந்தைகள் மனம் மகிழ்ந்து போயிள்ளனர்.
உடல் இருக்கும் வரையில் தான்...
இத்தனை வருடம் தனலட்சுமி சம்பாதித்தது எல்லாம் குழந்தைகளை படிக்க வைக்க, வளர்க்கவே சரியாக போனது. இன்றும் ஒரு வாடகை வீட்டில் தன் மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த உடல் இருக்கும் வரையில் தான் இந்த வேலை. இது மோசமாகி போனால் அடுத்து கேள்வி குறி தான்.
ஓவிய பள்ளிகள் விடுமுறை நாட்களில் பெண் கழிவறை மேற்பார்வையாளராக வேலைக்கு செல்கிறார் தனலட்சுமி. இந்த வேலையில் நாள் ஒன்றுக்கு இருநூறு ரூபாய் வரை சம்பளமாக பெறுகிறார்.
தனலட்சுமியின் வாழ்க்கை மனித வாழ்வின் பெரும் பாடம் ஆகும்.