Latest Updates
-
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
சுதந்திர இந்தியாவின் 70 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்த ஓர் அதிசயம்! Wonder Women #001
சுதந்திர இந்தியாவின் எழுபது ஆண்டு கால வரலாற்றில் ஒரு பெண் முதன் முதலாக கப்பற்படையில் பைலட்டாக இணைந்திருப்பது இதுவே முதன் முறையாகும்.
இந்தியா சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் ஆகிவிட்டது.இத்தனை ஆண்டுகள் கழித்து ஓர் வரலாற்று நிகழ்வு நடந்திருக்கிறது. என்ன தெரியுமா? இத்தனை ஆண்டுகளில் இந்திய கப்பற்படையில் விமானியாக எந்த ஒரு பெண்ணும் இருந்ததில்லை. ஆனால் சமீபத்தில் அந்த வரலாறு உடைந்தது. ஆம், சுபாங்கி ஸ்வரூப் என்ற பெண் இந்தியாவின் முதல் நேவி பைலட்டாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

அறிமுகம் :
இவர் உத்திர பிரதேசத்தில் இருக்கக்கூடிய பரேலியில் பிறந்திருக்கிறார். விஐடி யில் பயோடெக்னாலஜி இன்ஜினியரிங் முடித்த இவர், டேக்வாண்டோ என்னும் தற்காப்பு கலையிலும் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார்.

அப்பா :
சுபாங்கிக்கு அப்பா தான் ரோல் மாடல். ஆம், அப்பா தற்போது கப்பற்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஓர் அதிகாரி. அப்பாவைப் பார்த்தே வளர்ந்த சுபாங்கிக்கு தானும் கப்பற்படையில் இணைந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும் என்பது பெரு விருப்பமாக இருந்திருக்கிறது.

மூன்று பேர் :
சுபாங்கி மட்டுமல்ல அவருடன் சேர்ந்து இன்னும் மூன்று பெண்களும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்க் ஏர் டிராஃபிக் அப்சர்வென்ஸிற்காகவும் அதனை கன்ட்ரோல் செய்யவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் .
இவர்கள், கப்பலில் இருக்கக்கூடிய தொலை தொடர்பு சாதனங்களுக்கும் மற்றும் ஆயுதங்களுக்கும் இவர்களே பொறுப்பு.

யார் அந்த மூன்று பேர் ? :
உத்திரபிரதேசத்தை சேர்ந்த சுபாங்கியுடன் தேர்வு செய்யப்பட்டவர்கள். டெல்லியைச் சேர்ந்த அஸ்தா சேகல், புதுச்சேரியைச் சேர்ந்த ரூபா மற்றும் கேரளாவைச் சேர்ந்த சக்தி மாயா. இவர்களை Naval Armament Inspectorate தேர்வு செய்திருக்கிறது.
இவர்கள் கேரளாவின் கண்ணூர் மாநிலத்தில் இருக்கும் எழிமலா நேவல் அகாடமியில் இணைந்திருக்கிறார்கள்.
இதுவரை இதற்கும் எந்த பெண் பணியாளரும் வந்ததில்லை.

பயிற்சி :
தற்போது சுபாங்கிக்கு ஹைதிராபாத்தில் இருக்கக்கூடிய ஏர் ஃபோர்ஸ் அகாடமியில் பயிற்சி வழங்கப்படுகிறது. சுமார் ஒரு வருடம் பயிற்சிக்காலம் முடிந்ததும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
சுபாங்கி பயிற்சி பெறுகிற ஹைதிராபாத் பயிற்சி மையத்தில் தான் தரைப்படை, கப்பற்படை மற்றும் விமானப்படையில் இருக்கும் விமானிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படும்.

பயிற்சி முடிந்த பிறகு :
சுபாங்கி பயிற்சி முடிந்த பிறகு maritime reconnaissance stream.ல் விமானியாக பணியாற்றுவார். அத்துடன் சுபாங்கி தான் ஐஎன்எஸ் கருடாவிற்கு தலைமைப் பொறுப்பு.

போர் விமானங்கள் :
சில மாதங்களுக்கு முன்பு இந்திய விமானப்படையில் ஆவனி சதுர்வேதி,பாவனா காந்த்,மோகனா சிங் ஆகிய பெண்கள் பறக்கும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்தே கப்பற்படையிலும் சோதனை அடிப்படையில் போர் விமானங்களை ஓட்டுவதற்கான வாய்ப்பு பெண்களுக்கு வழங்கலாம் என்று முடிவு செய்திருக்கிறது.

என்ன சொல்கிறார் சுபாங்கி :
சுதந்திர இந்தியாவில் எழுபது ஆண்டுகள் கழித்து விமானப்படையில் ஜெட் விமானத்தில் பைலட்டாக பணியாற்றும் வாய்ப்பு குறித்து கேட்டபோத, இது ஒரு சிறந்த வாய்ப்பு மட்டுமல்ல இத்துடன் பெரிய பொறுப்பும் இருக்கிறது என்கிறார் சுபாங்கி.

பெண்கள் முன் வர வேண்டும் :
பெண்கள் எப்போதும் ஒரு கம்ஃபோர்ட் ஜோனில் தான் இருப்பார்கள் என்று பிறர் நினைப்பதை உடைக்க வேண்டும். எந்த சூழல் வந்தாலும் எதிர்த்து போராடுவோம் என்று காட்ட வேண்டிய நேரம் வந்தாகிவிட்டது.
பெண்கள் பலரும் கப்பற்படையில் இணைந்து பணியாற்ற முன் வர வேண்டும் என்கிறார்.



Click it and Unblock the Notifications