Just In
- 1 hr ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- 6 hrs ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 7 hrs ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 8 hrs ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
Don't Miss
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஆயில் மற்றும் ஆல்கஹால் இன்ஜெக்ட் செய்து அசகாயசூரனாக மாறிய விசித்திர மனிதன்!
இங்கு உடற்கட்டை அதிகரிக்க ஆயிலை இன்ஜெக்ட் செய்து கொண்ட விசித்திர மனிதன் பற்றி கூறப்பட்டுள்ளது.
தங்கள் உடலை விரும்பாத நபர் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். தாங்கள் விரும்பும் படி உடல் இல்லை என்றால் சிலர் ஜிம் செல்வார்கள், சிலர் டயட் இருப்பார்கள்.
ஆனால், பாடிபில்டர் போன்ற உருவம் வேண்டும் என்பதற்காக யாராவது ஆயில் மற்றும் ஆல்கஹாலை இன்ஜெக்ட் செய்துக் கொள்வார்களா? இப்படி செய்தால் மரணிக்கக் கூடும் என தெரிந்தும் செகாடோ எனும் 48 வயது ஆண் இப்படி செய்துள்ளார்...
ஏளனம்!
உடல் ஒல்லியாக இருந்ததால் இவரை பலரும் கேலி செய்துள்ளனர். இவரது உடல் எடை குறைந்ததற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த போதை பழக்கம் தான்.
இதனால் ஒல்லி நாய், எலும்புக்கூடு என பல பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் இவர். இதனால், தன்னையும், தனது வாழ்வையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் வல்திர் செகாடோ எனும் இந்நபர்.
உடற்பயிற்சி மையம்!
கேலி கிண்டலுக்கு ஆளான செகாடோ ஜிம் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் இவருக்கு போதியதாக இல்லை.
இதனால் ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவை இன்ஜெக்ட் செய்து உடற்கட்டை ஏற்றினார்.
அசகாயசூரன்!
எனவே, தனது உடற்கட்டு அசகாயசூரன் போல இருக்க வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக என்ன விலை தரவும் தயங்கவில்லை.
இதனால், ஆயில், ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்து ஹல்க் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், இது தன்னை கொல்லும் என அறிந்தே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் செகாடோ.
வலிமிகுந்தது!
இந்த ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்துக் கொள்வது மிகவும் வலிமிகுந்த செயலாகும். இது மிகவும் அபாயமானதும் கூட.
சின்தால் ஆயில் (Synthol)!
தனது உடற்கட்டை பெரிதாக்கிக் கொள்ள இவர் சின்தால் ஆயில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இந்த முறையை பின்பற்றி வருகிறார்.
இதனால் இவர் 55 பவுண்டுகள் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவரது பைசப் எ;அளவு 23 இன்சாக அதிகரித்துள்ளது.
பக்கவிளைவுகள்!
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் வலிமை ஏதும் அதிகரிக்காது, தோற்றம் மட்டும் தான் பெரிதாக தெரியும். மேலும், இந்த உருவை கண்டு பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.