Latest Updates
-
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம் -
200 பேர் மட்டுமே வாழும் இந்தியாவின் தனித்துவமான 8 கிராமங்கள் - இந்த கிராமங்களுக்கு போறதே ரொம்ப கஷ்டமாம் -
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆயில் மற்றும் ஆல்கஹால் இன்ஜெக்ட் செய்து அசகாயசூரனாக மாறிய விசித்திர மனிதன்!
இங்கு உடற்கட்டை அதிகரிக்க ஆயிலை இன்ஜெக்ட் செய்து கொண்ட விசித்திர மனிதன் பற்றி கூறப்பட்டுள்ளது.
தங்கள் உடலை விரும்பாத நபர் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். தாங்கள் விரும்பும் படி உடல் இல்லை என்றால் சிலர் ஜிம் செல்வார்கள், சிலர் டயட் இருப்பார்கள்.
ஆனால், பாடிபில்டர் போன்ற உருவம் வேண்டும் என்பதற்காக யாராவது ஆயில் மற்றும் ஆல்கஹாலை இன்ஜெக்ட் செய்துக் கொள்வார்களா? இப்படி செய்தால் மரணிக்கக் கூடும் என தெரிந்தும் செகாடோ எனும் 48 வயது ஆண் இப்படி செய்துள்ளார்...

ஏளனம்!
உடல் ஒல்லியாக இருந்ததால் இவரை பலரும் கேலி செய்துள்ளனர். இவரது உடல் எடை குறைந்ததற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த போதை பழக்கம் தான்.
இதனால் ஒல்லி நாய், எலும்புக்கூடு என பல பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் இவர். இதனால், தன்னையும், தனது வாழ்வையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் வல்திர் செகாடோ எனும் இந்நபர்.

உடற்பயிற்சி மையம்!
கேலி கிண்டலுக்கு ஆளான செகாடோ ஜிம் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் இவருக்கு போதியதாக இல்லை.
இதனால் ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவை இன்ஜெக்ட் செய்து உடற்கட்டை ஏற்றினார்.

அசகாயசூரன்!
எனவே, தனது உடற்கட்டு அசகாயசூரன் போல இருக்க வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக என்ன விலை தரவும் தயங்கவில்லை.
இதனால், ஆயில், ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்து ஹல்க் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், இது தன்னை கொல்லும் என அறிந்தே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் செகாடோ.

வலிமிகுந்தது!
இந்த ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்துக் கொள்வது மிகவும் வலிமிகுந்த செயலாகும். இது மிகவும் அபாயமானதும் கூட.

சின்தால் ஆயில் (Synthol)!
தனது உடற்கட்டை பெரிதாக்கிக் கொள்ள இவர் சின்தால் ஆயில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இந்த முறையை பின்பற்றி வருகிறார்.
இதனால் இவர் 55 பவுண்டுகள் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவரது பைசப் எ;அளவு 23 இன்சாக அதிகரித்துள்ளது.

பக்கவிளைவுகள்!
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் வலிமை ஏதும் அதிகரிக்காது, தோற்றம் மட்டும் தான் பெரிதாக தெரியும். மேலும், இந்த உருவை கண்டு பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications