Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனி மீனத்தில் அஸ்தமனமானவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்...! -
1/2 கிலோ சிக்கன் வாங்குனா.. ஈரோடு ஸ்டைல் சிக்கன் தண்ணி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்... -
பஞ்சு மாதிரி பன் தோசை-அட்டகாசமான பூண்டு கார சட்னி காம்போ ரெசிபி... ட்ரை பண்ணுங்க... வேற லெவலில் இருக்கும்...! -
இன்றைய ராசிபலன் 15 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்கப்போகுதாம்...! -
வார ராசிபலன் (15 March 2026-21 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு நிதி நிலை டபுளாக உயரும்.. -
வெயிலால் முகம் கருமை ஆகக்கூடாதா? அப்ப கற்றாழை ஜெல்லை இப்படி யூஸ் பண்ணுங்க... -
வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. குளுகுளு-ன்னு சூப்பரான குச்சி ஐஸ் செய்யலாம்.. எப்படி-ன்னு பாருங்க.. -
பங்குனி மாத ராசி பலன் 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகம் தேடி வரும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
அடுப்பில்லாம செய்யக்கூடிய அவல் பாயாசம் - செஃப் தீனா ஸ்டைலில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா?
ஆயில் மற்றும் ஆல்கஹால் இன்ஜெக்ட் செய்து அசகாயசூரனாக மாறிய விசித்திர மனிதன்!
இங்கு உடற்கட்டை அதிகரிக்க ஆயிலை இன்ஜெக்ட் செய்து கொண்ட விசித்திர மனிதன் பற்றி கூறப்பட்டுள்ளது.
தங்கள் உடலை விரும்பாத நபர் என்று யாரும் இருக்க முடியாது. அனைவரும் தங்கள் உடல் மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். தாங்கள் விரும்பும் படி உடல் இல்லை என்றால் சிலர் ஜிம் செல்வார்கள், சிலர் டயட் இருப்பார்கள்.
ஆனால், பாடிபில்டர் போன்ற உருவம் வேண்டும் என்பதற்காக யாராவது ஆயில் மற்றும் ஆல்கஹாலை இன்ஜெக்ட் செய்துக் கொள்வார்களா? இப்படி செய்தால் மரணிக்கக் கூடும் என தெரிந்தும் செகாடோ எனும் 48 வயது ஆண் இப்படி செய்துள்ளார்...

ஏளனம்!
உடல் ஒல்லியாக இருந்ததால் இவரை பலரும் கேலி செய்துள்ளனர். இவரது உடல் எடை குறைந்ததற்கு முக்கிய காரணம் இவருக்கு இருந்த போதை பழக்கம் தான்.
இதனால் ஒல்லி நாய், எலும்புக்கூடு என பல பட்டப்பெயருக்கு சொந்தக்காரர் ஆனார் இவர். இதனால், தன்னையும், தனது வாழ்வையும் மாற்றிக்கொள்ள முடிவெடுத்தார் வல்திர் செகாடோ எனும் இந்நபர்.

உடற்பயிற்சி மையம்!
கேலி கிண்டலுக்கு ஆளான செகாடோ ஜிம் செல்ல முடிவு செய்தார். ஆனால், அதன் மூலம் கிடைத்த பலன் இவருக்கு போதியதாக இல்லை.
இதனால் ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவை இன்ஜெக்ட் செய்து உடற்கட்டை ஏற்றினார்.

அசகாயசூரன்!
எனவே, தனது உடற்கட்டு அசகாயசூரன் போல இருக்க வேண்டும் என எண்ணிய இவர் அதற்காக என்ன விலை தரவும் தயங்கவில்லை.
இதனால், ஆயில், ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்து ஹல்க் போன்ற தோற்றத்தை உருவாக்கிக் கொண்டார். மேலும், இது தன்னை கொல்லும் என அறிந்தே இந்த செயலில் ஈடுப்பட்டுள்ளார் செகாடோ.

வலிமிகுந்தது!
இந்த ஆயில் மற்றும் ஆல்கஹால் கலவையை இன்ஜெக்ட் செய்துக் கொள்வது மிகவும் வலிமிகுந்த செயலாகும். இது மிகவும் அபாயமானதும் கூட.

சின்தால் ஆயில் (Synthol)!
தனது உடற்கட்டை பெரிதாக்கிக் கொள்ள இவர் சின்தால் ஆயில் இன்ஜெக்ட் செய்துக் கொண்டார். கடந்த ஐந்து வருடங்களாக இவர் இந்த முறையை பின்பற்றி வருகிறார்.
இதனால் இவர் 55 பவுண்டுகள் உடல் எடை அதிகரித்துள்ளார். மேலும், இவரது பைசப் எ;அளவு 23 இன்சாக அதிகரித்துள்ளது.

பக்கவிளைவுகள்!
இதனால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் உடல் வலிமை ஏதும் அதிகரிக்காது, தோற்றம் மட்டும் தான் பெரிதாக தெரியும். மேலும், இந்த உருவை கண்டு பெண்கள் அச்சம் கொள்கின்றனர்.



Click it and Unblock the Notifications











