Just In
- 5 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- News தமிழ்நாட்டின் 26 வருட கனவு.. நிஜமாகும் அதிசயம்.. சென்னை டூ குமரி.. ரயில் பயண நேரம் அடியோடு மாறுது!
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மரபணு தாக்கத்தால் ஓநாயாக வாழ்ந்து வரும் விசித்திர குடும்பம்!
பரம்பரையாக மரபு ரீதியான தாக்கத்தால் ஓநாய் நோய் குறியுடன் வாழ்ந்து வரும் விசித்திர குடும்பம்.
இது மனிஷா சாம்பாஜி ராவுத் என்பவற்றின் வாழ்க்கையில் நடந்துக் கொண்டிருக்கும் உண்மை கதை. மனிஷா அனைவரையும் போல பெற்றோர் ஸ்தானத்தை அடைய மிகவும் ஆர்வமாக காத்திருந்த நேரம் அது. மனிஷா மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த குடும்பமும் இதற்காக காத்திருந்தது.
ஆனால், வம்சாவளியாக மனிஷாவின் குடும்பத்தை பாதித்து வந்த அந்த ஓநாய் நோய் குறி, மனிஷாவின் குழந்தையையும் விட்டுவைக்கவில்லை. பிறக்கும் போதே, ஓநாய் நோய் குறியுடன் மனிஷாவின் குழந்தை பிறந்தது.
ஓநாய் நோய்க்குறி!
மயிர்மிகைப்பு (Hypertrichosis) என கூறப்படும், தேகம் முழுக்க அளவுக்கு அதிகமாக மயிர் வளரும் இந்த நோயை ஆங்கிலத்தில் "Werewolf" என்றும் குறிப்பிடுவதுண்டு. ஓநாய் போன்ற தோற்ற ஒற்றுமை தென்படுவதால் இப்பெயர் உருவானது.
பெயரற்ற குழந்தை!
மனிஷாவின் குடும்பத்தில் புது உறுப்பினராக இணைந்துள்ள இவருக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. மரபணு ரீதியாக இந்த பரம்பரை தாக்கம் இவரிடமும் தொற்றிக் கொண்டது.
Image Courtesy
சகோதரிகள்!
மனிஷா மட்டுமல்ல, இவரது சகோதரிகளும் கூட இதே தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்னர். இது தொடர்ச்சியாக இளம் தாயான மனிஷாவின் குழந்தைக்கும் தொற்றியுள்ளது.
Image Courtesy
தீர்வு தான் என்ன?
ஆராய்ச்சியாளர்கள் இன்னும் இந்த நோய்க்குறிக்கு மருந்து கண்டறியப்படவில்லை என கூறுகின்றனர். இந்த சகோதரிகள் ஹேர் ரிமூவல் க்ரீம் பயன்படுத்தி அதிகப்படியான முடியை அகற்றி வருகின்றனர்.
Image Courtesy
கேலி, கிண்டல்!
"தங்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த வினோத சரும, தேக மயிர் பிரச்சனையால் சிறு வயதில் பல கேலி, கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளோம். எங்களை பேய், கரடி, குரங்கு என பலவகையில் மனம் புண்படும்படி பேசியுள்ளனர். அந்த வலி இன்றளவும் மனதில் நீங்காவண்ணம் இருக்கும் தருணத்தில், என் குழந்தையும் இதே பிரச்சனையுடன் பிறந்திருப்பது வருத்தத்தை அளித்தாலும். நான் எனது குழந்தையை அதிக அக்கறையுடனும், நேசத்துடன் வளர்ப்பேன் என மனிஷா கூறியுள்ளார். எனதே ஒரே ஆசை, எனது குழந்தையும், மற்ற குழந்தைகளை போல சாதரணமாக வாழ வேண்டும், வளர வேண்டும்" என கூறுகிறார் மனிஷா.
Image Courtesy
மேலும் கூறுகையில்...
தொடர்ந்து, "எனது மாமியார் எனது குழந்தையை விரும்பவில்லை, அழகாக இல்லை, அசிங்கமாக இருக்கிறான் என கூறுகிரா. மாமியாரே அவனை அசிங்கம், குரங்கு என கூறுவது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது." என மனிஷா மேலும் கூறியுள்ளார்.
Image Courtesy
தாய்க்கு தன்பிள்ளை...
யாரும் தனது குழந்தையை துன்புறுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் மனிஷா!
காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு தானே... அழகு தோற்றத்தில் இல்லை, அகத்தில் இருக்கிறது என்பதை ஊருக்கு புகட்டும்படி மனிஷா தனது குழந்தையை வளர்ப்பார். தாய் அன்பே சிறந்தது!
Image Courtesy