ஓடும் வண்டியில் பள்ளி சிறுமியை பார்த்து சுய இன்பம் கண்ட காம கொடூரன் - வீடியோ!

பேருந்து, கேப் போன்ற வாகனங்களில் பயணிக்கும் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் இடைஞ்சல்கள், பாலியல் தாக்குதல்கள் அனுதினம் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

பாரபட்சம் இன்றி, நாடுகள் எனும் வேறுபாடுகள் இன்றி, மொழி, இன பாகுபாடு இன்றி இந்த உலகில் நடப்பது இரண்டு செயல்... ஒன்று அன்பு, மற்றொன்று இச்சை எண்ணம். அன்பின் வெளிபாடினை காட்டிலும் இச்சையின் வெளிப்பாடு தான் அதிகமாகவே இருக்கிறது.

உதாரணத்திற்கு பாலியல் தொழில். பாலியல் தொழில் கூட வரையறைகளுக்குள் தான் இயங்குகிறது. ஆனால், பொது இடங்களில், பேருந்து, கேப் போன்ற வாகனங்களில் பயணிக்கும் போது பெண்களுக்கு கொடுக்கப்படும் இடைஞ்சல்கள், பாலியல் தாக்குதல்கள் அனுதினம் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.

இந்த வகையில், ஓடம் வண்டியில் ஒரு பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரமான சம்பவம் தான் இது....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சா வின்யுயா!

சா வின்யுயா!

சா வின்யுயா, மெய்சுவாயன், புலாசனை சேர்ந்தவர். தற்போது டோன்டோ, மணிலா, பிலிப்பைன்ஸ்-ல் வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு பள்ளி செல்லும் மாணவி.

கடந்த ஜூலை 25-ம் நாள், இவர் தனது ஃபேஸ்புக்கில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவலை புகைப்படம், வீடியோ ஆதாரத்துடன் பகிர்ந்திருந்தார்.

சுய இன்பம்!

சுய இன்பம்!

பொது மக்கள் பயணிக்கும் ஜீப்பில் (நமது ஊர்களில் கேப், வேன்கள் போல) பள்ளி முடிந்து சா வின்யுயா பயணித்து வந்துள்ளார். அப்போது அவரது அருகே இருந்த ஒரு ஆண் அவரை கண்டு சுய இன்பம் காண துவங்கியுள்ளார்.

சுற்றிலும் பல பெண்கள் மற்றும் பயணிகள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் அந்நபர் இந்த காரியத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிர்ச்சி!

அதிர்ச்சி!

சிட்டி ஹாலில் இருந்து டயுமன் எனும் இடத்திற்கு பயணம் செய்து கொண்டிருக்கும் போது ஏற்றதாழ இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

அந்த நபர் தான் ஷோல்டர் பையை மறைவாக வைத்து இந்த வக்கிர செயலில் ஈடுப்பட்டுள்ளார். இதை மொத்தத்தையும் மாணவி சா வின்யுயா தனது செல்போனில் படம் பிடித்துவிட்டார்.

அச்சம்!

அச்சம்!

அந்நபர் செய்யும் காரியத்தை கண்டு கத்தி கூச்சலிட்டு ஜீப்பை நிறுத்தலாம் என கருதினாலும், அவரை கண்டு அச்சத்தில் உறைந்ததால் ஏதும் செய்ய இயலவில்லை என தனது பதிவில் சா வின்யுயா கூறியுள்ளார்.

மேலும், அந்த நபர் அவரது மொழியில் "இங்கேயே இரு, இங்கேயே இரு" என்பது போன்ற சொற்களை அந்த மாணவியின் காதருகே கூறிக் கொண்டே இருந்துள்ளார்.

இயலாமை!

இயலாமை!

பெண் என்ற காரணமா? ஆணாதிக்கம் காரணமா? அல்லது அச்சத்தில் உறைந்த நிலையா? ஏதோ காரணம் அந்த பெண்ணை இயலாமை நிலைக்கு தள்ளியுள்ளது. பயத்தில் உறைந்த சா வின்யுயா, தனது இடம் வந்ததும் இறங்கி ஓடிவிட்டார். அதன் பிறகே ஃபேஸ்புக்கில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

வைரல்!

சா வின்யுயா இந்த சம்பவம் குறித்து பதிவு செய்த சிறிது நேரத்திலேயே வைரலாக பரவ துவங்கிவிட்டது. இப்போது வரை இந்த பதிவை 39 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். 18 ஆயிரம் பேர் தங்கள் கோபத்தை லைக்கில் காண்பித்துள்ளனர். 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்துக்களை கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர்.

அடங்கா இச்சை!

அடங்கா இச்சை!

சுய இன்பம் காண்பது ஆண், பெண் மத்தியில் இருப்பது சகஜம். ஆனால், இச்சையின் உச்சத்திற்கு சென்று, பொது இடத்தில் பலர் முன்னணியில் ஒரு பள்ளி மாணவியின் முன்னர் இது போன்ற செயலில் ஈடுபடுவது அந்நபருள் இருக்கும் மிருகத்தை வெளிக்காட்டுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion