Latest Updates
-
இந்த 2 ராசிக்காரர்களுக்கு துளியும் நன்றியுணர்வு இருக்காதாம் - இவங்களுக்கு ஹெல்ப் பண்றதே வேஸ்ட் -
Aadi Pooram 2026: ஆடிப்பூரம் நாளில் என்னென்ன செய்யணும் தெரியுமா? -
இந்தியா-பாகிஸ்தான் எல்லையை வெறும் 5 வாரத்தில் உருவாக்கியவர் யார் தெரியுமா? நம்ப முடியாத இந்திய வரலாறு -
கடகத்தில் உச்சமடையும் குரு பகவான்: இன்று முதல் இந்த 5 ராசிக்காரர்களின் பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது! -
சூரியன் சொந்த நட்சத்திரத்திற்குள் நுழைவதால் வாழ்க்கையில் உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - இப்படி செய்யுங்க.. தட்டு சோறு நொடியில் காலியாகும்.. -
சர்க்கரை நோயாளிகளுக்கான டாப் 5 காய்கறிகளை பட்டியலிட்ட டாக்டர்! என்னன்னு தெரிஞ்சுக்கோங்க.. -
நெல்லை ஸ்டைல் தலக சாம்பார் ரெசிபி - ஒரு தடவை செஞ்சு பாருங்க - ஒரு வாரம் வைச்சு சூப்பரா சாப்பிடலாம் -
தலைசுற்ற வைக்கும் இந்தியாவிலுள்ள வினோதமான திருமண சடங்குகள் - இப்படிலாம் கல்யாணம் பண்ணுனா அவ்வளவுதான் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பணத்தையும், புகழையும் கொண்டு வரப்போகுது!
பாலியல் வன்கொடுமைகளை எதிர்த்து வீறுகொண்டு எழுந்த இளம்பெண் - (ச)மூகத்தில் பொளேர்!
பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களின் நிலை குறித்து தனது ஓவியம் மூலம் சமூகத்தின் முகத்தில் பொளேர் என அடித்த இளம் பெண்.
எப்போதுமே வார்த்தைகளை விட, செயல்பாடு தான் அதிகம் பேச வேண்டும் என்பார்கள். அதற்கு தான் வீரியமும் அதிகம். 19வயதே ஆன ஒரு இளம் பெண், தனது கலையின் மூலமாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

எம்மா க்ரேன்சர்!
நெப்ராஸ்கா வெஸ்லியன் பல்கலைக்கழகத்தில் கலை வகுப்பு மாணவி எம்மா க்ரேன்சர். இவர் கைகளை கொண்டு ஓவியம் வரைவதில் திறமை உடையவர்.

வுமன்ஸ் மார்ச்!
வாஷிங்டன் டி.சியில் பெண்கள் நடத்திய வுமன்ஸ் மார்ச்-ல் இருந்து நேராக வீடு திரும்பிய இவர் ஒரு ஆர்ட் வரைந்துள்ளார். அது தான் சமீபத்திய இன்டர்நெட் வைரல் லிஸ்ட்டில் இடம் பெற்றுள்ளது. அதை இவர் ட்விட்டரில் பதிவும் செய்திருந்தார்.

தீண்டல்களை வரைந்தார்!
விரல்களால் ஓவியம் வரையும் திறன் கொண்ட எம்மா. அதே விரல்களின் தீண்டல்களால் பெண்கள் எதிர்கொள்ளும் வன்கொடுமையை உடலிலேயே வரைந்து சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் அவலத்தை அப்பட்டமாக வெளிபடுத்தினார்.

நீதி வேண்டும்!
இவர் வேண்டுவது எல்லாம் பெண்களுக்கான நீதி தான். இவர் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இடம்பெறம் ஒவ்வொரு ஆணின் தீண்டுதல் எவ்வாறாக இருக்கிறது என ஒரு மேப் போன்று அந்த ஆர்ட் வரைந்திருந்தார்.

யார் யார்?
அந்த ஆர்ட்-ஐ படம் எடுத்து, அதில் யார் யார் எப்படி எப்படி ஒரு பெண்ணை பார்க்கின்றனர். எந்தெந்த உறவு, எப்படி, எப்படி ஒரு பெண்ணை நெருங்குகிறது என காட்டியிருந்தார்.

எம்மா கூறுவது என்ன?
ஒரு பெண் மீதான தீண்டுதல்கள் எப்படி எல்லாம் இருக்கிறது என்பதை வெளிக்கொண்டு வரவே இதை நான் வரைந்தேன் என எம்மா கூறுகிறார். இது போன்ற ஒரு கருத்தை, தன் மூலமாகவே சமூகத்தின் பார்வைக்கு கொண்டுவருவதற்கு மிகுந்த தைரியம் வேண்டும்.



Click it and Unblock the Notifications