Latest Updates
-
கோடைக்கால திருமணமா? வெயிலின் தாக்கத்தில் இருந்து விருந்தினர்களைக் காக்க இந்த 5 விஷயங்களைச் செய்ய மறக்காதீங்க! -
ஆண்களுக்கு இளம் வயதிலேயே வழுக்கை விழ காரணமாக இருக்கும் முக்கிய உணவுகள் - பார்த்து சாப்பிடுங்க -
திருமண உறவில் பாலியல் வன்கொடுமை: சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ள பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அதிர்ச்சி உண்மைகள்! -
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்
தீக்கிரையான பிறகும் வாழ்வாதாரம் இழந்த ராணுவ வீரர்களுக்கு வாழ்வளிக்கும் ரியல் ஹீரோ!
வெடிகுண்டு விபத்தில் 40% உடலை இழந்து, மீண்டு வந்து பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்வளித்து அசத்தி வருகிறார் ஒரு ரியல் ஹீரோ.
திரையில் மக்களை காப்பாற்றுபவர்களை தான் நாம் ஹீரோவாக பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும், தனது நாட்டிற்காகவும், அந்நாட்டு மக்களுக்காகவும் தாய் மண் மீது கொண்ட பற்றினால் எதற்கும் அஞ்சாது, உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்கள் தான் ரியல் ஹீரோ.
துப்பாக்கி படத்தில் காண்பிப்பது போல, எத்தனையோ போரில் குண்டடி பட்டு உடல் ஊனமான நிலையில் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கடைசி வரை நம் கண்களுக்கு புலப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் ஏராளம்.
இதோ, விபத்தில் 40% உடலை இழந்த பிறகும், தன்னை போலவே கஷ்டப்படும் வீரர்களுக்கு வாழ்வளித்து காப்பற்றி வரும் ரியல் ஹீரோவின் கதை தான் இது....

பாபி!
பாபி எனும் இந்த ராணுவ வீரர் சாலை ஓரத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தில் தனது நான்கு தோழர்களையும், தனது உடலில் 38% பகுதியையும் இழந்தார். இரண்டு வார கோமா நிலைக்கு பிறகு மீண்டு வந்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று புது உயிர் பெற்று வந்துள்ளார் பாபி. இந்த குண்டு வெடிப்பில் பாபி அவரதுகையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

காபி குடித்தது மட்டும் தான்....
அந்த நாளில் நான் காபி குடித்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது என்கிறார் பாபி ஹென்லைன். அன்று நான் தான் முதன்மை வாகனத்தில் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது பல நாட்கள் கழித்து செய்திகள் வாயிலாக தான் அறிந்துள்ளார் பாபி ஹென்லைன்.

தைரியம்!
மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் முடிந்த பிறகு. காயங்களை கடந்து வந்து மீண்டும் பழைய தைரியம் பெற சில காலம் எடுத்துக் கொண்டதாகவும். ராணுவத்தில் விலகி வேறு வேலையில் பணியாற்றுவது மிக கடினமானது. அதை நான் அறிவேன் என்றும் பாபி கூறுகிறார்.

பாதை மாறியது....
மற்றவர்களுக்கு உதவுவது சிறந்த குணம். அதிலும், உணவளித்து உதவுவது அன்பு கலந்த ஒன்று. எனவே, இந்த வேலையை தேர்வு செய்திருக்கிறார் பாபி.

கொரியன்!
இந்த பணியில் கொரியன் போரில் ஈடுபட்டு காயமைடந்த தனது நட்பு வட்டாரத்தில் வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உணவகம் ஒன்றை திறந்து பணியாற்ற போவது தான் தனது திட்டம் என்றும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications