Latest Updates
-
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சாணக்கிய நீதி படி இந்த 4 குணம் உள்ள பெண் அவரது கணவரின் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவாராம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கொள்ளு குழிப்பணியாரமும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 16 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தேடிவருமாம் - ஜாக்கிரதை -
செவ்வாய் பெயர்ச்சியால் ஜூன் 21 முதல் இந்த 5 ராசிக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.. -
ஜூன் 22-ல் நடக்கப்போகும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் -
இதுல ஒரு புறாவை தேர்ந்தெடுங்க.. அடுத்த 3 நாட்களில் உங்களுக்கு என்ன நடக்கும்-ன்னு சொல்றோம்.. -
மாங்காயுடன் வேர்க்கடலை சேர்த்து இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைச்சு பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த 5 ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
தீக்கிரையான பிறகும் வாழ்வாதாரம் இழந்த ராணுவ வீரர்களுக்கு வாழ்வளிக்கும் ரியல் ஹீரோ!
வெடிகுண்டு விபத்தில் 40% உடலை இழந்து, மீண்டு வந்து பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கு வாழ்வளித்து அசத்தி வருகிறார் ஒரு ரியல் ஹீரோ.
திரையில் மக்களை காப்பாற்றுபவர்களை தான் நாம் ஹீரோவாக பார்க்கிறோம். ஆனால், ஒவ்வொரு நாட்டிலும், தனது நாட்டிற்காகவும், அந்நாட்டு மக்களுக்காகவும் தாய் மண் மீது கொண்ட பற்றினால் எதற்கும் அஞ்சாது, உயிரை பணயம் வைத்து போராடும் வீரர்கள் தான் ரியல் ஹீரோ.
துப்பாக்கி படத்தில் காண்பிப்பது போல, எத்தனையோ போரில் குண்டடி பட்டு உடல் ஊனமான நிலையில் வாழ்க்கையில் அடுத்து என்ன செய்வதென தெரியாமல் கடைசி வரை நம் கண்களுக்கு புலப்படாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் ராணுவ வீரர்கள் ஏராளம்.
இதோ, விபத்தில் 40% உடலை இழந்த பிறகும், தன்னை போலவே கஷ்டப்படும் வீரர்களுக்கு வாழ்வளித்து காப்பற்றி வரும் ரியல் ஹீரோவின் கதை தான் இது....

பாபி!
பாபி எனும் இந்த ராணுவ வீரர் சாலை ஓரத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்தில் தனது நான்கு தோழர்களையும், தனது உடலில் 38% பகுதியையும் இழந்தார். இரண்டு வார கோமா நிலைக்கு பிறகு மீண்டு வந்து, ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் சிகிச்சை பெற்று புது உயிர் பெற்று வந்துள்ளார் பாபி. இந்த குண்டு வெடிப்பில் பாபி அவரதுகையை இழந்தது குறிப்பிடத்தக்கது.

காபி குடித்தது மட்டும் தான்....
அந்த நாளில் நான் காபி குடித்தது மட்டும் தான் ஞாபகம் இருக்கிறது என்கிறார் பாபி ஹென்லைன். அன்று நான் தான் முதன்மை வாகனத்தில் சென்றேன். அதன் பிறகு என்ன நடந்தது என்பது பல நாட்கள் கழித்து செய்திகள் வாயிலாக தான் அறிந்துள்ளார் பாபி ஹென்லைன்.

தைரியம்!
மருத்துவ சிகிச்சைகள் எல்லாம் முடிந்த பிறகு. காயங்களை கடந்து வந்து மீண்டும் பழைய தைரியம் பெற சில காலம் எடுத்துக் கொண்டதாகவும். ராணுவத்தில் விலகி வேறு வேலையில் பணியாற்றுவது மிக கடினமானது. அதை நான் அறிவேன் என்றும் பாபி கூறுகிறார்.

பாதை மாறியது....
மற்றவர்களுக்கு உதவுவது சிறந்த குணம். அதிலும், உணவளித்து உதவுவது அன்பு கலந்த ஒன்று. எனவே, இந்த வேலையை தேர்வு செய்திருக்கிறார் பாபி.

கொரியன்!
இந்த பணியில் கொரியன் போரில் ஈடுபட்டு காயமைடந்த தனது நட்பு வட்டாரத்தில் வீரர்களை எல்லாம் ஒன்று சேர்த்து உணவகம் ஒன்றை திறந்து பணியாற்ற போவது தான் தனது திட்டம் என்றும் கூறியுள்ளார்.



Click it and Unblock the Notifications